தீவிரமடையும் தலைநகர்! அரச தலைவர் மாளிகைக்கு அருகில் பதற்றம் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பில் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஆயிரக்காண ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், வீதித்தடைகளை அமைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள போது அவற்றை தகர்த்து எறியும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் அவர் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 

ibc