தீவிரமடையவுள்ள ரணிலுக்கு எதிரான போராட்டம் – பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வற்புறுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இன்று முதல் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம் நடத்த வருமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியுடன் முடிக்க முடியும்

நாடே போராட்டக் களமாக மாறியிருப்பதால் முன்னாள் அதிபரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

-ibc