இலங்கையர்கள் பசியால் சாகத் தயாரானாலும் ஒரு பைசா கூட அனுப்பாதீர்கள் – புலம்பெயர் அமைப்புகளிடம் பொன்சேகா கோரிக்கை!

நாட்டில் இடம்பெறும் அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசா கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

சிறிலங்கா அரசுக்கு உதவாதீர்கள்

நாங்கள் பசியால் சாகத் தயாராக இருந்தாலும் ஐந்து காசு கூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள். IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

-ibc