கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நேரத்தை நீட்டிக்க முடிவு

கொழும்பு பங்குச்சந்தை (CSE) தனது வர்த்தக நேரத்தை எதிர்வரும் வியாழன்15 ஆம் திகதி முதல் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் பங்கு தரகு தொழில்துறையின் ஆலோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வர்த்தக நேரம் பின்வருமாறு,

திறந்த முன் அமர்வு- முற்பகல் 09.30 மணி முதல் 10.00 மணி வரை

திறந்த ஏலம் முற்பகல் 10.00 மணிக்கு

வழக்கமான வர்த்தகம் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பம்

மதியம் 12.30 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கை முடிவடைகின்றது.

 

-tw