இரட்டை பிரஜாவுரிமை எம்பிக்கள் -பொதுமக்களிடம் உதவிகோரும் நீதியமைச்சர்

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அவ்வாறு சட்டத்தை மீறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட அமைச்சர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது தொடர்பில் மக்கள் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

-ibc