கோட்டாபய வீட்டில் துப்பாக்கி சூடு நடத்த முயற்சி

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் உத்தியோகஸ்த்தருடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரியகாவல்துறை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

30 தோட்டாக்கள்

துப்பாக்கியுடன் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளுக்கு 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டன.

அதில் ஒன்று காணவில்லை, எனவே அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

-ibc