கடினமான சூழலில் வெளியேறியோர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம்

இக்கட்டான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையின் பின்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவை

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,தற்போது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இந்த சூழலில் தொழில் வல்லுநர்களின் சேவை நாட்டுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

ஆகவே, இவ்வாறான இக்கட்டான காலத்தில் எம்மை விட்டுச் சென்ற வைத்தியர்கள் போன்ற தொழில் வல்லுநர்களின் இந்த நாட்டிற்கு தேவையில்லை.”என்று கூறியுள்ளார்.

-tw