கோட்டாபயவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியதில் பசிலுக்கும் பங்குண்டு: விமல் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியவர்களில் பசில் ராஜபக்ச முக்கிய பங்கு வகிக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்த போது அவர் தோல்வியடைந்த அல்லது இயலாத தலைவராக இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அவருக்குக் கொடுத்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்தார். ஆனால் கோட்டாபய – பி.பி. ஜயசுந்தர, மிலிந்த மொரகொட, அமெரிக்கத் தூதுவர் மற்றும் பசில் ராஜபக்ச என எல்லோரினது வலையிலும் வீழ்ந்துவிட்டார்.

கோட்டாபயவின் திட்டம்

இறுதிக் காலத்தை அமெரிக்காவில் கழிக்க வேண்டும் என்பதுதான் கோட்டாபயவின் திட்டம்.

அதற்காக அமெரிக்காவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய தேவை கோட்டாபயவிற்கு ஏற்பட்டது. அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைத்துக் கொடுத்து இறுதியில் நாட்டை நாசமாக்கிவிட்டார் கோட்டாபய என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-tw