சீனா வசமாகி வரும் தமிழர் பிரதேசங்கள்

தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணாய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகின்றதா என நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw