சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு வேலைத்திட்டம்

நாட்டில் உள்ள சிறுவர்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கு விசேடமான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இதனை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விசேட வேலைத்திட்டத்தின்படி, முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சிறப்பு திட்டம்

“இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.

சிறுவர்களுக்குத் தேவையான முட்டை போன்ற சத்தான உணவுகளைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .

இதேவேளை, குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்துள்ள உணவை வழங்குவதற்கும், தேவையான உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

-ib