நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை

“நீதிமன்றத்தையோ – நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்.

சர்ச்சை கருத்து

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw