இலங்கையில் இன்று முதல் மூடப்படுகிறது நோர்வே தூதரகம்

சிறிலங்காவில் உள்ள நோர்வே தூதரகம் இன்று தொடக்கம் உத்தியோகபூர்வமாக மூடப்படவுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது.

அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளன. அதுமாத்திரமல்லாமல் அதன் உத்தயோகபூர்வ முகப்புத்தக பக்கமும் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் பணிகள் தொடரும்

இதற்கு மாற்றாக சிறிலங்காவிற்கும், மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

 

-tw