இலங்கைக்கு முதல்வெற்றியை பெற்றுக்கொடுத்த மிஸ் நெலுனி சௌந்தர்யா

கானாவில் நடைபெற்ற 4ஆவது மிஸ் ரீன் சுற்றுலா போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மிஸ் நெலுனி சௌந்தர்யா, இன்று புதன்கிழமை (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியானது கானாவின் அக்ரா நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 20 ஆம் வரை இடம்பெற்றது.

இந்த வெற்றியைப் பெற்ற மிஸ் நெலுனி சௌந்தர்யா துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இன்று காலை 05.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பளிகப்பட்டது. அதேவேளை மிஸ் ரீன் சுற்றுலா போட்டியில் இலங்கை இந்த வெற்றியை முதன்முறையாக வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

-jv