நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – ரணில் திட்டவட்டம்

“மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்” என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டின் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அதிபர் மேற்படிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ரணிலின் உறுதி

அவர் மேலும் கூறுகையில், “எங்கு பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றதோ அங்கு காவல் துறையினரையும் படையினரையும் வரவழைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துவேன்.

தற்போது சில தரப்பினர் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கும் ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்” என்றார்.

 

 

 

-tw