ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வமாக  அங்கீகரிக்கப்பட்டது

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று சபைக்குள் ஒரு முழுமையான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,சபைக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நேற்று(28.08.2023) அதிகாரப்பூர்வமாக அது அங்கீகரிக்கப்பட்டது என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw