அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப்பயணிகளே நாட்டிற்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் படி இந்த வருடம் இந்தியா மற்றும் ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் ஜேர்மனியில் இருந்து 50 ஆயிரம் பேர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

 

 

 

-jv