அடுத்த வாரம் வெளியாகும் ஐஎம்ஃபின் இரண்டாவது தவணை தொகை

சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மிகக் கடுமையான பொருளாதாரப் படுகுழியில் விழுந்துவிட்டோம். சில விஷயங்களில் உடன்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. அவை அனைத்தும் வெற்றியடையும். இரண்டாம் தவணை வழங்கும் தொகையை மிக விரைவில் பெறலாம் என நம்புகிறேன்.” என குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

-an