அடுத்த மாதம் முதல் டீசல் எண்ணை விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவிக்குமேயானால் நம் நாட்டில் டீசல் பற்றாக்குறை இருக்காது! – ஜே. சிம்மாதிரி

dieselதற்சமயம் நம் நாட்டில் டீசல் எண்ணை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கூடிய விரைவில் நம் அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தப் போகிறது என டீசல் விநியோகிப்பாளர்கள் உணர்ந்துள்ளதால், மொத்த விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை அரசாங்கம் குறைக்கப்போகிறது என அறிவிக்குமேயானால், டீசல் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை. டீசல் விலையை அரசு உயர்த்தப்போகிறது என விநியோகிப்பாளர்கள் அறிந்துள்ளதால் டீசல் பதுக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலன் மீது தற்போதைய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இந்த டீசல் விவகாரமே தக்கச் சான்று. டீசல் பற்றாக்குறையால் மக்கள் எந்த அளவிற்கு அவதிக்குள்ளாகியுள்ளார்கள் என்பதை அரசு நன்கறிந்தும், இதனை தீர்க்க மாற்று வழிகளை காண அரசு முயலவில்லை.

ஊதாரணமாக, டீசல் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு செய்தாலே போதும், டீசல் பற்றாக்குறை ஏற்பட வழியே இல்லை.

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வருமேயானால், எண்ணெய் விலை உடனடியாக குறைக்கப்படும் என தற்போதைய அரசு அறிவிக்குமேயானால், நம் நாட்டு மக்கள் டீசல் பிரச்சனையில் அவதியுற வாய்ப்பே இல்லை.

ஜே. சிம்மாதிரி,
ஜ.செ.க. முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்.