பினாங்கு இந்து அறநிலைய வாரியம் இனி ஒருமைப்பட்டு அமைச்சகத்தின் கீழ்…

பினாங்கு இந்து அறநிலைய வாரியம், முன்பு மாநில அரசால் கண்காணிக்கப்பட்டு வந்தது, இப்போது தேசிய ஒருமைப்பாட்டு  அமைச்சகத்தின் கீழ் வரும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரியால் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறினார்.…

2024 -ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்கள் தினத்தை நடத்த உற்சாகமாக உள்ளது…

இந்த ஆண்டு மே மாதம் ஹவானா என்ற தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை  நடத்தும் போது, உள்ளூர் ஊடகங்களின் பணியைக் கொண்டாடுவதற்கு சரவா காத்திருக்கிறது. கூச்சிங் டிவிஷன் ஜர்னலிஸ்ட் சங்கம் (KDJA) சங்கம் கடந்த ஆண்டு இந்த யோசனையை முன்வைத்ததை தொடர்ந்து இந்த கொண்டாட்டத்திற்கு பொறுப்பேற்று நடத்த சரவாக் நியமனம்…

கொடிய வறுமையை முடிவுக்கு கொண்டு வர PADU உதவும் –…

மத்திய தரவுத்தள மையம், PADU, மலேசியாவில் நிலவும் கொடிய   வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்  பரிந்துரைத்தார். 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றான இலக்கு மானியங்களை திறம்பட வழங்குவதை உறுதி செய்யும் முயற்சியில் அன்வார் நேற்று PADU என்ற தளத்தை அறிமுகப்படுத்தினார்.…

மலேசியாவில் 5 வயதுக்குட்பட்ட 500,000 குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் என…

மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் அரை மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர், இது ஒரு முன்னேறிய தேசத்தில் இருக்கக் கூடாத பிரச்சனை என்று ஒற்றுமை அரசாங்க செனட்டர் ஒருவர் தெரிவித்தார். 498,327 குழந்தைகள் இந்த நிலையில் இருப்பதாகவும், பெரும்பாலும் அவர்களின் சமூக-பொருளாதார சூழ்நிலை காரணமாக இருப்பதாகவும்…

சக ஊழியர்களால் கரைபடிந்த சிவகுமாரின் அமைச்சர் பதவி

 பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமையன்று செய்த அமைச்சரவை மாற்றத்தில் மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவகுமார் விலக்கப்பட்டார். அது பற்றிய விமர்சனம் குறித்து தனது கருத்தை பதிவு செய்கிறார் இராகவன்( -ஆர்)    இராகவன் கருப்பையா - கடந்த ஒரு ஆண்டு காலமாக நாட்டின் மனிதவள மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்…

இஷாமுக்கு விரைவில் பதவி நீக்கம் குறித்த கடிதம் கிடைக்கும் –…

சமீபத்தில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட இஷாம் ஜலீல், விரைவில் அவரது பதவி நீக்கம் குறித்த கடிதத்தை பெறுவார் என்று கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். "அவர் விரைவில் கடிதத்தைப் பெறுவார்," என்று ஜாஹிட் இன்று புக்கிட் ஜலீலில் MyNext திட்டத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.…

கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், முகக்கவசங்களை மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து முகக்கவசங்களை வாங்குவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒரு சுகாதார தயாரிப்பு உற்பத்தியாளர் கூறுகிறார். ஐடியல் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி ஹமினுதீன் ஹமிட், முகக்கவசங்களின் விற்பனை "மிகவும்" அதிகரித்து வருவதாகவும், கோவிட் -19 வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு…

 பெரும்பான்மை மலாய் மாணவர்களைக் கொண்ட சீனப் பள்ளி நகர்ப்புறத்திற்கு மாறுகிறது

கிராமப்புறங்களில் உள்ள சிறிய தேசிய வகை சீனப் பள்ளிகளுக்கு, மலாய் மாணவர்களின் எண்ணிக்கை சீன மாணவர்களை விட அதிகமாக இருப்பது பொதுவானது. Beranang, Hulu Langat இல் உள்ள SJKC Ton Fah விதிவிலக்கல்ல. இருப்பினும், பள்ளி நகர்ப்புற செமனிக்கு இடமாற்றம் செய்யப்படுவதால், அதன் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்…

தமிழுக்கு மரியாதை இலையெனில் தமிழருக்கு அங்கு என்ன வேலை!

இராகவன் கருப்பையா - கடந்த வாரம் பினேங் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய நிலையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து ஆகியவற்றை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணர்ச்சி மிகுந்த நம் சமுதாயம் வழக்கம் போல பொங்கி எழுந்துள்ளது. நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மொழி ஆர்வலர்கள்…

எம்.ஜி.ஆரின் சகாப்தம் என்றும் மறையாது

இராகவன் கருப்பையா - தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்து இன்னும் ஒரு மாத காலத்தில் 36 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தமது 70ஆவது வயதில் அவர் மரணமடைந்தார். நடிகராய் வாழ்க்கையை தொடங்கி ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராய்…

2024 ஆம் ஆண்டு மஇகா கட்சித் தேர்தலில் முதல் 2…

77வது மஇகா பொதுக்குழு இன்று ஏகமனதாக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது, இதில் 2024 கட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடுவதைத் தடுக்கலாம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் இரு பதவிகளும் போட்டியின்றி இருக்க வேண்டும் என்று பகாங் மற்றும் பேராக் உட்பட…

குடும்ப மாதர்களுக்கும் தீபாவளி வேண்டும்!

இராகவன் கருப்பையா - தீபாவளி வந்துவிட்டால் எல்லாருக்குமே கொண்டாட்டம்தான். குறிப்பாக நம் நாட்டில் இப்பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் மட்டுமின்றி அவர்களுடைய  விருந்தோம்பலில் திளைக்கும் அனைத்து சமையத்தினருக்கும் அது மகிழ்ச்சிகரமான ஒரு வைபவமாகவே அமைந்து விடுகிறது. ஆனால் இத்தகையை குதூகலத்திற்கு அச்சாணியாக  சமையலறையில் இருந்து கொண்டு மணிக்கணக்கில் சமைத்துக் கொண்டிருக்கும் குடும்பமாதர்களின்…

நாடாளுமன்றத்திற்கு செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை மதிப்பதே கிடையாது. அவைக்குச் செல்லாமல் மட்டம் போடுவது அவர்களில் சிலருக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. தேர்தலுக்கு முன்னான பிரச்சாரக் கூட்டங்களின் போது சில வேளைகளில் பீரங்கி போல முழங்கி வாக்குகளைத் திரட்டுவது…

கேள்விக்குறியாககும் அமைச்சர்களின் ஆளுமை

இராகவன் கருப்பையா - மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி ஆசிய நாடுகளும், குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளும் கூட பல்வேறு துறைகளில் துரித வளர்ச்சி  கண்டுள்ள நிலையில் மலேசியா மட்டும் தொடர்ந்து ஒரே நிலையிலேயே இருப்பது நாம் எல்லாருமே வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். உலக அளவில் 163 நாடுகளில் மதிப்பிடப்படும்…

வான் அசிசாவை அவதூறு செய்ததாகக் கூறப்படும் பதிவுகள்குறித்து புகார் அளிக்கப்பட்டது

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு எதிராக அவதூறான செய்திகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் மூன்று சமூக ஊடக பயனர்களுக்கு எதிராகப் பண்டார் துன் ரசாக் பிகேஆர் இன்று காவல்துறை அறிக்கையைத் தாக்கல் செய்தது. இன்று கோலாலம்பூரில் உள்ள சேரஸ் மாவட்ட காவல்துறை…

பாலஸ்தீன அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வர பரிந்துரை

இராகவன் கருப்பையா - பாலஸ்தீன அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வர பரிந்துரை செய்த சிலாங்கூர், சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வொங் சென் கொஞ்சம் சர்ச்சையில் மாட்டிக் கொண்டது ஆச்சரியமில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக அடைக்களம் தேடி வருபவர்களை மனிதாபிமானத்தோடு அரவணைப்பது நியாயமான ஒன்று. ஆனால்…

‘தனி ஒருவன் நினைத்துவிட்டால்’ கைதிகளின் கதை: நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - நம் சமூகத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகளின் வாழ்க்கைப் பின்னணி மற்றும் மலேசிய சிறைச்சாலைத்துறை இயங்கும் விதம் போன்ற விரிவானத் தகவல்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம் இவ்வார இறுதியில் தலைநகரில் வெளியீடுக்காணவிருக்கிறது. மலேசிய சிறைச்சாலைத் துறையின் துணை ஆணையர் அண்ணாதுரையின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 'தனி ஒருவன் நினைத்துவிட்டால்'…

மித்ரா திசை மாறாமல் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்!

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டத்தக்க ஒன்று. அந்த பிரிவை கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் நம் சமூகத்திற்கு விநியோகம் செய்யாமல் மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்த…

தமிழ் பள்ளிகளுக்கு ‘பனி போர்த்திய பூமியிலே’ பயண நூல்: மனிதவள…

தமிழ் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயண நூல்களை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார். எழுத்தாளர் இராகவன் கருப்பையாவின் 'பனி போர்த்திய பூமியிலே' எனும் பயண நூல் வெளியீட்டு விழாவின் போது சிவகுமார் இந்த அறிவிப்பை செய்தார். 'மலேசியாகினி' இணைய ஊடகத்தின் தமிழ் பிரிவான "மலேசியா…

சட்டமன்றத்திற்கு தேர்வுபெற்ற தோட்டப் பாட்டாளியின் மகன்

இராகவன் கருப்பையா - இரவு பகல் பாராமல் பகுதி நேர வேலைகள் செய்து பணம் ஈட்டி தனது பட்டப்படிப்பை முடித்ததாகக் கூறுகிறார் சிலாங்கூர், கோத்த கெமுனிங் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வழக்கறிஞர் பிரகாஸ் சம்புநாதன். "பல சிறமங்களுக்கிடையே கடந்த 2001ஆம் ஆண்டில் சட்டக் கல்வியைத் தொடர என்…

வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

இராகவன் கருப்பையா - பந்திங் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதே தனது தலையாயக் கடமை என்று கூறுகிறார் அத்தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள வி.பாப்பாராய்டு. குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது…

மலைப்பாம்பும் அதன் குணமும்? – கி. சீலதாஸ்

நமக்குப் புராணங்கள், வீர காவியங்கள், பழக்க வழக்க கோட்பாட்டுத் துணுக்குகள், கிராமியப் பாடல்கள், வனத் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழக்கமானவை. விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள் யாவும் நமக்கு அறியாதவை அல்ல. வன விலங்குகளை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட காவியங்கள் ஏராளம். அவை நம்மைக் கவராமல் இல்லை. இவையாவும்…

வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுடன் செயல் பட வேண்டும்

இராகவன் கருப்பையா - பொதுவாகவே நம் நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோரை தேர்தல் சமயங்களில் மட்டும்தான் களத்தில் காண முடியும். அவர்கள் 'யாங் பெர்ஹொர்மாட்'(மாண்புமிகு) ஆனவுடன் அவர்களைக் காண்பது குதிரைக் கொம்பாகிவிடும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்றிருந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டுமே அவர்களுடன் நாம்…