இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தயா மாஸ்டர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப்…
ஜெனீவா அமர்வில் இலங்கை உரிய விளக்கங்களை வழங்க தயாராகிறது
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ரீதியான புறக்கணிப்பு தொடர்பான அமர்வுகளில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சிறுபான்மை இனங்களின் மதசுதந்திரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த அமர்வுகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை நடைபெறுகின்றனஇதில் இலங்கை தொடர்பான விடயங்கள், எதிர்வரும் 15 மற்றும் 16ஆம்…
மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்
மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணி வட மாகாண சபையின் ஆலோசனையை பெற்றுக்கொண்டே செயற்படும் அதேவேளை, அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள இச்செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இணைத்துக்கொள்ளப்படமாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வன்னி மாவட்ட எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இது…
ஜனாதிபதியுடன் நிற்கும் மகளின் போட்டோவை வழங்கியும் நீதி கிடைக்கவில்லை! தாய்…
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க…
ஆட்சி மாறிய போதும் அணுகுமுறை மாறவில்லை! சூடுபிடிக்கும் விகாரை விவகாரம்
கிளிநொச்சி, இரணைமடு குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டு வருகின்றது. மேற்படி கட்டுமான வேலைகளில் பெருமளவு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவசர அவசரமாக மதில் கட்டி எழுப்பும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு…
மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள்தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மேலும் ஒரு முன்னாள் போராளி திடீரெனகாச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் உயிரி ழந்துள்ளார். பூநகரியை சேர்ந்த நடராஜா கலியுகராஜா (54வயது) என்பவரே 7 ம் திகதி காலை இவ்வாறுஉயிரிழந்துள்ளார். இந்நிலையில்…
கொத்துக்குண்டு, விஷ ஊசிக் கொலை, இன அழிப்பு! விரைவில் சர்வதேச…
போர்க்காலத்தின் போது படையினரால் கொல்லப்பட்டவர்கள், போர் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் கொல்லப்பட்டவர்கள், கொத்துக்குண்டுப் பயன்பாடு, விஷ ஊசிக் கொலைகள் மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் சர்வதேச நீதிபதிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட…
மன்னாரில் 21 பேர் படுகொலை! இலங்கை அகதியின் அதிர்ச்சி வாக்குமூலம்
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தார்மலிங்கம்…
சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்! முன்னாள்…
காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர். காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45)…
அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா?
அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து…
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணராதவரை தீர்வேயில்லை!
ஒவ்வொரு நாட்டினதும் கடல் எல்லை தொடர்பான சர்வதேச சட்டங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாதவரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதே உண்மை. இந்திய மீனவர் ஊடுருவலைப் பொறுத்தவரை இலங்கையின் தற்போதைய அரசு கடைப்பிடிக்கும் உறுதியான கொள்கை திருப்தி தருகிறது. இலங்கையின்…
இலங்கையில் அரசியல், சட்டச் சிக்கல்களால் தமிழ் கைதிகள் விடுதலையாவதில் தாமதம்!
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, 2015ம் ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்து விடுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசியல், சட்ட ரீதியான சிக்கல்களால் அவர்கள் விடுதலையாவதில் தாமதம் நீடிக்கிறது. சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை விடுதலைப்…
104 வது புலிகள் உறுப்பினரும் மரணம்- சென்னையில் உள்ள இலங்கை…
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 200 பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 104 பேரின் சந்தேகத்திற்கிடமான மரணம்…
சீனா காரன் செய்த விஷ ஊசியால் முன்னாள் புலி வீரர்களை…
புனர்வாழ்வு பெற்ற 105 போராளிகள் இது வரையில் மரணமடைந்துள்ளனர். மரணத்திற்கான காரணங்களும் கண்டறியப்பட முடியவில்லை. நோயினால் மரணமடைவதாக சாதரணமாக மரண சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து இலங்கையில்பணிபுரியும் சில வைத்தியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ” சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷ ஊசிகளை பரீட்சித்து பார்ப்பதற்காக தடுப்பூசி என்ற…
இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு மாட்டிறைச்சி கடை அமைக்கப்பட்டது!
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கெட்டவர் என கூறிக்கொண்டிருக்கும் பலர் அவரிடம் சென்று நன்மை பெற்றவர்களே. நான் சிறீசபாரத்தினம், சிவகுமாரன் ஆகியோருடன் படித்தவள். அந்த காலத்தில் தரப்படுத்தல் என்ற மோசமான ஒன்று வந்தமையினாலேயே இந்த போராட்டம் தொடங்கியது என நல்லிணக்க செயன்முறைகளுக்கான செயலணியிடம் ஓய்வு பெற்ற நீதிமன்ற…
விடுதலைப்புலி உறுப்பினர் என தெரிவித்தால் மட்டுமே சடலம் கையளிக்கப்படும்! இராணுவம்…
வவுனியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் சடலத்தினை கையளிப்பதற்கு இராணுவத்தினர் நிபந்தனை விதித்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார். தனது கணவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்பட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவத்தினர் நிபந்தனை விதித்ததாக அந்த பெண் கூறியுள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு…
முன்னாள் போராளிகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல்!
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோரிமுத்தெட்டுவேகம செயலணியின் உபகுழு இதனை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான அமர்வுகள் கடந்த 26ஆம் திகதி முதல் நேற்று வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல…
தமிழ் தந்தை தனது 4 பிள்ளைகளையும் பிக்குவாக மாற்றியுள்ளார்- இனி…
தமிழ் தந்தை தனது 4 பிள்ளைகளையும் பிக்குவாக மாற்றியுள்ளார்- இனி இலங்கையில் இப்படி தான் நடக்கும். வெளிநாட்டு தமிழர்கள் ஏதாவது செய்யாவிட்டால் வேடிக்கை தான் பார்க்கவேண்டும். பொலனறுவை – திம்புலாகலவை சேர்ந்த தமிழரான தந்தையொருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாசனத்தில் இணைத்துள்ளார். இந்நான்கு பிள்ளைகளுள் ஆண் பிள்ளைகள்…
சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய ஐ.நா அதிகாரி இலங்கை விஜயம்!
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பான விசேட அறிக்கையிடும் அதிகாரி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ரிட்டா இஸாக் டியாயி (Rita Izsák Ndiaye) என்ற இந்த அதிகாரி ஒக்டோபர் 10ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…
இந்தியா- இலங்கைக்கும் இடையில் பாலம் அமைந்தால் குண்டு வைத்து தகர்க்கப்படும்!…
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்து தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும்…
முன்னாள் போராளிகளுக்கு விஷம் ஏற்றவில்லை: இராணுவம்
இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். “இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும்…
தமிழீழம் நாடாகவில்லை- ஆனால் 3 நாடுகளோடு சரிக்கு சமனாக மோதும்…
தமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரை தியாகம் செய்தார்கள். 33 வருடங்களாக நடந்த போராட்டத்தால் இன்னும் தமிழீழம் மலரவில்லை. ஆனால் போராட்டங்கள் ஓயவும் இல்லை. என்றோ ஒரு நாள் அதனை பெற்றுவிடுவோம் என்று தமிழர்கள்…


