துணைப் பிரதமர்: அன்வார் விடுதலை நஜிப்-பின் சீர்திருத்த முயற்சிகளுக்குத் தக்க…

குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து நேற்று அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டது, இந்த நாட்டில் நிகழ்ந்து வருகின்ற "உருமாற்றங்களுக்கு" தக்க சான்று என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். "இந்த நாட்டுக்கு சீர்திருத்தத்தையும் உருமாற்றத்தையும் கொண்டு வர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்டுள்ள உண்மையான முயற்சிகளை மலேசியர்களும் அனைத்துலக சமூகமும்…

நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன் என அன்வார் மும்பாயில் சொல்கிறார்

தமது துயரங்களுக்கு காரணமாக இருந்தவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். என்றாலும் சில ஊடகங்கள் தமக்கு எதிராக தொடர்ந்து வரும் களங்கப்படுத்தும் இயக்கம்  குறித்து கவலை கொள்வதாக அவர் சொன்னார். "வழக்கம் போல கடந்த காலத்தில் அனுபவித்த துயரங்களுக்காக நான்…

அம்னோ ஆட்டுவிக்கிறது, அதற்கேற்ப நீதித்துறை ஆடுகிறது

“தன் எஜமானரின் சொல்படி ஆடும் ஊழல்மிக்க நீதித்துறைக்கு ‘’குற்றவாளி’ என்றோ ‘குற்றவாளி அல்ல’ என்றோ தீர்ப்புச் சொல்லும்படி உத்தரவிடுவது எளிய காரியம்தான். மலேசியர்களுக்கு இதுவெல்லாம் அத்துப்படி.”   அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பிக்கிறது:ரயிஸ் ரூபன்: வழக்கம்போல் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் பிணாத்துகிறார். முதற்கண், அன்வார்மீது…

பிஎன்-னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா?,…

தாம் ஜெயிலில் அடைக்கப்பட்டால் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவை நிச்சயம் கைப்பற்றும் என்று அன்வார் இப்ராஹிம் அடிக்கடி கூறியுள்ளார். அவ்வாறு நாம் சிறைக்குப் போகாவிட்டால் பக்காத்தான் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் நன்றாக இருப்பதாக அவர் கருதுகிறார். பிஎன் தங்களை முட்டாளாக்கி வருகிறது என்றும் தங்களது விவேகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கருதும்…

“901 வரைவு”: மூவர் விசாரணை கோரினர்

மூன்று தனிநபர்கள், சுவர் ஒன்றில் சாயத்தை தெளித்ததின் மூலம் பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருக்கின்றனர். 30 வயதான நிருபர் சிடிக்கின் ஒமார், 27 வயதான வரைகலை ஒவியர் முகமட் பிக்ட்ரி அல் ஹலிமி அப்துல் ரானி என்ற அப்துல் கனி, இசைக்கலைஞரான…

நசாருதின்: ஹசான் நீக்கம் கடுமையானது

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசானுக்கு பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசருதின் மாட் ஈசா ஆதரவு தெரிவித்துள்ளார். ஹசானை கட்சியிலிருந்து நீக்கியது மிகவும் கடுமையானது என அவர் வருணித்தார். இஸ்லாத்தின் முக்கியத்துவதை நிலை நிறுத்தும் ஹசானுக்கு ஆதரவளிக்க ஹசான் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்துக்குத் தாம்…

ஜபிடின் மனச்சாட்சிக்கு இணங்க நடந்து கொண்டாரா?

"பழி வாங்கும் அம்னோ போக்கையும் சாத்தியங்களையும் ஆராயும் போது நீதிபதி துணிச்சலாக அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்." குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல! கேகன்: உயர் நீதிமன்ற நீதிபதி தம்மைக் கட்டுப்படுத்தி வரும் ஊழல் சக்திகளை எதிர்த்து நிற்க முடிவு செய்தாரா அல்லது அன்வார் இப்ராஹிமை விடுவிக்க…

அன்வார் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி, சேவியர்

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஷபிடின் வழங்கிய அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றவாளி அல்ல என்று தீர்ப்பை வரவேற்கிறோம் என்று தமது செய்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இது மகிழ்சிகரமான ஒன்று. அன்வாருக்கு நீதி கிடைக்க எல்லா வகையிலும் துணை நின்ற மலேசிய…

சைபுல் ஆதரவுப் பேரணி பிசுபிசுத்தது

உயர் நீதிமன்றம் இன்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கிய போது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் குதப்புணர்ச்சி வழக்கு IIல் புகார்தாரரான சைபுல் புஹாரி முகமட் அஸ்லானுக்கு ஆதரவாக 50 பேர் மட்டுமே கூடியிருந்தனர். அவர்களுக்கு பெர்மாஸ் என அழைக்கப்படும் Pertubuhan…

அன்வார்:தீர்ப்பு எதிர்பாராதது, ஆனாலும் நீதித்துறை குறைபாடுடையதுதான்

குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதை ஓர் “இன்ப அதிர்ச்சி” என்று வருணித்த அன்வார் இப்ராகிம், ஆனாலும் நீதித்துறை அடிப்படையில் குறைபாடு கொண்டதுதான் என்று கூறினார். தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தொடக்கக்கட்டத்தில் நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா, வாதியான சைபுல் புகாரி அஸ்லானை ஓர் உண்மையான…

பிஎன் எம்பி:மக்கள் மனத்தில் நஜிப்பின் மதிப்பு உயரும்

அன்வார் விடுவிக்கப்பட்டது நீதிமன்றங்கள் நேர்மையாக செயல்படுவதைக் காண்பிக்கிறது. இது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவாக வேலை செய்யும் என்கிறார் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லான். குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டபின்னர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அந்த சாபா அம்னோ அரசியல்வாதி, தீர்ப்பு அந்தப் பக்கமும் இந்தப்…

நஜிப் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாயகம் திரும்பியிருக்கிறார் பிரதமரையும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பிற்பகல் மணி 2.40க்கு சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. தென்னாப்பிரிக்காவை…

‘பக்காத்தான் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’

பக்காத்தான் ராக்யாட் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் "தனது விருப்பம் போல் வெளியிட்ட தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக" பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க  வேண்டும். இவ்வாறு கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யுவான் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். பக்காத்தான் ராக்யாட்…

அன்வார் தீர்ப்பு: முறையீடு செய்வதற்கு முன்னர் தீர்ப்பை அரசு தரப்பு…

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்து கொள்வதா இல்லையா என்பதை அரசு தரப்பு உடனடியாக முடிவு செய்யவில்லை. அந்தத் தீர்ப்பின் விளைவுகளைத் தாங்கள் விவாதிக்கப் போவதாக பதவி விலகிச் செல்லும் சொலிஸிட்டர் ஜெனரல்  II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் மலேசியாகினியிடம் கூறினார். "ஆய்வு…

ஹசானைப் பதவி அகற்ற அரச ஒப்புதல் தேவையில்லை

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியை மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அகற்ற சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா-வின் ஒப்புதல் தேவை என்று கூறப்படுவதை மறுத்துள்ளார். Read More

சைபூல்:தீர்ப்பை ஏற்கிறேன்,ஆனாலும்……

சைபூல் புகாரி அஸ்லான், குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார் ஆனாலும் அன்வார் இப்ராகிம் மீது சுமத்திய குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் கோடி காட்டியுள்ளார். Read More

ராயிஸ்: அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமானவை என்பதைக் காட்டுகின்றது

அரசியல் முலாம் பூசப்பட்ட குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எதிர்பாராத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளது மலேசிய நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குவதைக் காட்டுவதாக அரசாங்கம் இன்று கூறியது. "மலேசியா சுதந்திரமான நீதித் துறையைப் பெற்றுள்ளது. நீதிபதிகளுடைய முடிவுகள் மீது அரசாங்கம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதையும் அந்தத் தீர்ப்பு மெய்பிக்கிறது,"…

டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வெடிப்பு சம்பவம்

கோலாலம்பூரில் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் இன்று காலை மணி 10.00 அளவில் ஒர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து பொது மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றும் அது அறிவுரை கூறியது. ஆனால்…

நான் இறுதியில் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டேன் என்கிறார் அன்வார்

அன்வார் இப்ராஹிம் தமது 23 வயது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. 64 வயதான அந்த பிகேஆர் மூத்த தலைவரை விடுவித்த நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா, அரசு…

குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல (விரிவாக)

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வாரை விடுதலை செய்து குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார். டிஎன் ஏ என்ற மரபணுச் சோதனையை நீதிமன்றம் 100 விழுக்காடு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் அன்வாரை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம்…

குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வார் இப்ராஹிமை  குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து  விடுதலை செய்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார். விவரங்கள் பின்னர்

அன்வார் தீர்ப்பை செவிமடுக்க டூத்தா நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள மூன்றாவது நீதிமன்றத்தில் இன்று காலை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் அந்தக் குற்றச்சாட்டை அரசியல் சதி என 64 வயதான அன்வார் இப்ராஹிம்…

அன்வார் இரவு உரை: கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்

குதப்புணர்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக அன்வார் இப்ராகிமின் "இறுதி செய்தியை" கேட்பதற்காக கோலாலம்பூர், கம்போங் பாருவில் ஆயிரக்கணக்கானோர் இன்றிரவு குழுமினர். அன்வாருடன் எதிரணியின் முக்கிய தலைவர்களான பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் தியன் சுவா,…