தாயிப்பை விசாரிக்க வேண்டும், பக்காத்தான் கோரிக்கை

ஆறு நாடுகளைச்  சேர்ந்த என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எதிராக நிறைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்பில் அதில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியே அறிக்கை…

மகாதிர்: கோட்பாதர் கர்பாலிடம் மன்னிப்பு கேளுங்கள்,போதும்

டிஏபி-இன் "கோட்பாதர்" (ஞானாசிரியர்) கர்பால் சிங்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் முறைத்துக்கொண்டால் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் (டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமி) உண்மையைத்தான் சொன்னார். எல்லாருக்கும் தெரியும் கர்பால்தான் கோட்பாதர் என்பது. “அவரின் மனம்…

“ஆவி வாக்காளர்கள்” 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வர்

அம்னோ/பிஎன் அரசியல் ஆற்றல் வலிமையும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் வேகமும் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயம் செய்யும். இவ்வாறு கூறும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், 1999ம் ஆண்டு, 2008ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் முடிவுகளை பெரும்பாலும்…

கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீதான திறந்த நாள் நிகழ்வில்…

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தான் பரிந்துரை செய்துள்ள கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீது இன்று திறந்த நாள் நிகழ்வை நடத்தியது. அந்த மசோதாவை வரைவதற்கு உதவி செய்த நிபுணர்களிடமும் கல்வியாளர்களிடமும் அதனைத் தற்காத்துப் பேசும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் போது அவர்கள் உள்ளூர் தகவல்…

நியூயார்க் டைம்ஸ்: மலாய் வாக்குகளுக்கான போட்டியில் கிறிஸ்துவர்கள் “பகடைக் காய்கள்”

மலேசியாவின் 13வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தாங்கள் அரசியல் படைக் காய்களாக வைக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் வாழும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை  ஒன்று கூறுகிறது. கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை "கிறிஸ்துவ மயமாக்க" அவர்கள் முயலுவதாக…

கேஎல்ஐஏ-இல் தமிழில் அறிவிப்பு இல்லை

கேஎல் பன்னாட்டு விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்யும் திட்டம் எதனையும் போக்குவரத்து அமைச்சு கொண்டிருக்கவில்லை என இன்று டேவான் நெகாராவில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்  தெரிவித்த  துணைப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, இந்தியாவிலிருந்து வருபவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசுவதே இதற்குக் காரணமாகும் என்றார். “அவர்கள் தமிழ் தவிர்த்து…

முன்னாள் ஐஜிபி: போலீசும் எம்சிஎம்சியும் வலைப்பதிவர்களை விசாரிக்க வேண்டும்

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஒரு பாடகியை மணம் செய்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ள வலைப்பதிவர்கள்மீது போலீசில் புகார் செய்துள்ளார். பெட்டாலிங் ஜெயா போலீஸ் வட்டார தலைமையகத்தில் அவர் புகார் செய்ததாக த ஸ்டார் நாளேடு தெரிவித்துள்ளது.  “இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை மலேசிய தொடர்பு, பல்லூடக…

துவாங்கு அப்துல் ஹாலிம் 14வது ஆகோங் ஆனார்

கெடா சுல்தான், துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, நாட்டின் 14வது யாங் டி-பெர்துவான் ஆகோங்காக இன்று பதவியேற்றார்.கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் சடங்குபூர்வமாக அவர்  பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். துவாங்கு அப்துல் ஹாலிம் இரண்டாவது தடவையாக பேரரசர் பதவியை அலங்கரிக்கிறார். முதல் தடவை அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது அவருக்கு…

பாஸ் கட்சியின் 10 அம்ச சமூக நல நாடு திட்டம்…

பாஸ் கட்சி அண்மையில் சமூக நல நாட்டுக்கான 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டது. அதனைக் கடுமையாக குறை கூறும் பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது அறிக்கைகளை இன்று முக்கிய மலாய் மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. அந்த யோசனை ஏற்கனவே பிஎன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்துக்கு மிகவும்…

தாயிப்பையும் குடும்பத்தினரையும் கைது செய்க, மலேசியாவுக்கு வலியுறுத்தல்

சரவாக் முதல் அமைச்சரையும் அவரின் குடும்பத்தார் 13 பேரையும் "அதிகார அத்துமீறல்"களுக்காகவும் ஊழல்களுக்காகவும் சட்ட விரோத அமைப்பு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டதற்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கைது  செய்ய வேண்டும் என்று ஆறு நாடுகளின் என்ஜிஓ-கள் (அரசு சாரா அமைப்புகள்) மலேசியாவைக் கேட்டுக்கொண்டுள்ளன. அந்த என்ஜிஓ-களில்  புருனோ மன்செர்…

“ஞானாசிரியர்-ஜமீன்தார்” மோதலை டிஏபி மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது

"ஞானாசிரியர்-ஜமீன்தார்" விவகாரம் தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமிக்கும் இடையில் நிகழ்கின்ற வாக்குவாதம் பற்றி அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது. நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றிரவு டிஏபி தலைமையகத்தில் நிகழும் என கட்சியின் துணைத்…

அம்னோவைப் “புதைக்க” ஷாரிஸாட் உதவட்டும்

"அந்த என்எப்சி ஊழல் கிராமப்புற மலாய்க்காரர்களும் புரிந்து கொண்டு கண்டிக்கக் கூடிய விஷயமாகும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் னை மண்டியிடச் செய்வதற்கு அவர் திறவுகோலாக இருக்கக் கூடும்." பதவி துறக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை ஷாரிஸாட் புறக்கணிக்கிறார் ஷானாண்டோ: மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல்…

சைபுலும் டிபிபி பாரா-வும் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித்…

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில், புகார்தாரரருக்கும் முன்னாள் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக விசாரணை தள்ளி வைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித் தரப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. முகமட் சைபுல் புஹாரி…

ஜோம் பந்தாவ் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும்

எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க ஒரு என்ஜிஓ, “Jom Pantau!” (வாருங்கள் கண்காணிப்போம்) என்ற பெயரில் ஒரு சமூக இயக்கத்தைத்  தொடங்கியுள்ளது. தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் கூட்டணியான பெர்சே 2.0-இன் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அது தன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும். “கண்காணிப்பின் முடிவுகளைத் தொகுத்து பொதுமக்கள் மற்றும்…

ஷாரிசாட் பதவி விலக வேண்டும், மசீச இளைஞர் தலைவர் வலியுறுத்து

அம்னோ எம்பிகள் பலரை அடுத்து மசீச இளைஞர் தலைவர் ஒருவரும் தேசிய ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)சர்ச்சை தொடர்பில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில் பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். “கடந்த பொதுத் தேர்தலிலேயே ஷாரிசாட்டை வேண்டாம் என்று வாக்காளர்கள்…

ஹசான் அலி: “நான் பக்காத்தானுடன் ஒத்துழைக்கத் தயார்”

பாஸ், பக்காத்தான் ராக்யாட் ஆகியவை, மலாய், இஸ்லாம், மன்னராட்சி கோட்பாடுகளை மேம்படுத்தி தற்காக்கும் வரையில் அவற்றுடன் அணுக்கமாக தொடர்ந்து வேலை செய்யத் தாம் தயாராக இருப்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் ஹசான் முகமட் அலி கூறுகிறார். பாஸ் கட்சிக்குள் தாம் தொடர்ந்து சிரமங்களை எதிர்ந்நோக்கி…

ராமசாமி: “நான் வான்குடை வழி வந்த அரசியல்வாதி அல்ல”

டிஏபி கட்சிக்குத் தாம் அண்மையில் வந்தவர் எனக் கூறப்படுவதை பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி மறுத்துள்ளார். 1981ம் ஆண்டு தொடக்கம் தாம் கல்வியாளராக பணியாற்றிய காலத்திலிருந்து கட்சியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். பல்கலைக்கழக விரிவுரையாளராக தாம் வேலை செய்த காலத்தில் வி டேவிட், பி பட்டு…

கஸானா, புரோட்டோனில் வைத்துள்ள பங்குரிமையை டிஆர்பி-இடம் விற்கும்

மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா நேசனல், புரோட்டோன் ஹோடிங்சில் அதற்குள்ள 42.7 விழுக்காட்டுப் பங்குரிமையை டிஆர்பி-ஹைகோம்மிடம் விற்பனை செய்யும். த ஸ்டார் செய்தித்தாள் புரோட்டோன் அலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை மேற்கோள் காட்டி இதனை அறிவித்துள்ளது. புரோட்டோனுக்கு ஆராய்ச்சிப் பணிகளில்  ஈடுபடவும் புதிய கார்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும்…

“தலைமையின் போக்கு ஏமாற்றமளிக்கிறது”

உங்கள் கருத்து: "இதுதான் ஒரு பக்காத்தான் கட்சியின் லட்சணம் என்றால் மக்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைவர். அறைக்குள் விவாதிக்கப்பட வேண்டியதை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டாம்.” "கோட்ஃபாதர்" என்று  கூறியதற்காக ராமசாமி பதவி விலகத் தயார் கவனிப்பாளன்: கர்பால் மற்றும் டிஏபி-இன் செயல்களுக்கும் அம்னோபுத்ராக்களின் செயல்களுக்கும் வேறுபாடில்லை. அவர்கள் எந்தச்…

பதவி துறக்குமாறு ஷாரிஸாட்டுக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது

"அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது.   அப்போது விவசாய அமைச்சராக இருந்த முஹைடினும் அவர்களில் ஒருவர்." பதவி விலகுமாறு இன்னொரு அம்னோ எம்பி, ஷாரிஸாட்-டிடம் சொல்கிறார் லிம் சொங் லியோங்: அந்த விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல்…

பொதுக் கூட்ட மசோதா: பாஸ் வழக்கு மீது முடிவு செய்வதை…

பொதுக் கூட்ட மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என பாஸ் கட்சி வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது மீது முடிவு செய்வதை நீதிமன்றம் வியாழக்கிழமை வரை தள்ளி வைத்துள்ளது. சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் முஸ்லா முகமட் அர்ஷாட் விண்ணப்பித்துக் கொண்டதை தொடர்ந்து அந்த…

ஐஜிபி: கிறிஸ்மஸ் கேரோல் பவனியா? போலீஸ் அனுமதி பெறுங்கள்

கிறிஸ்மஸ் நாளான டிசம்பர் 25 இல் கிறிஸ்மஸ் கேரோல் ஊர்வலம் நடத்த விரும்புகிறவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மாநில போலீஸ் நிலையங்களில் அனுமதிக்கு மனு செய்யுமாறு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. சமய நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டியது முன்பு கட்டாயமானதல்ல. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாட்டாளர்கள்…

ஹூடுட் சட்டம் இடம் பெறாத பாஸ் கட்சியின் கொள்கை ஆவணம்

பாஸ் கட்சி அதன் மிக அண்மைய பொதுநல அரசு மீதான கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பத்து கூறுகள் அடங்கிய அந்த ஆவணம்  2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சி மக்கள் முன் வைத்த பொதுநல அரசு…