டாக்டர் மகாதீர்: குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யும் உரிமை…

மலேசிய நீதித் துறை வரலாற்றில் "முறையீட்டு வீரர்"  என அன்வார் இப்ராஹிமை வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அண்மைய குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரருக்கு ஏன் அதே உரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அன்வார் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் வேளையில், முறையீடு…

ஹசன் அலியின் இடத்துக்கு ரனி!

 பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக மேரு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரனி ஒஸ்மான் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமிக்கப்படலாம்போல் தோன்றுகிறது. ரனி, மாநில ஆணையர் என்ற முறையில் பாஸ் கட்சியில் உயர்ந்த பதவி வகிப்பவர். அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் துணைத் தலைவர் என்ற முறையில்…

முரட்டுத்தனம் மீதான விசாரணை தொடர்பில் சுஹாக்காம் கேஎல் சென்ட்ரலுக்கு வருகை

பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடத்தைப் பார்வையிடும் பொருட்டு சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையக் குழு இன்றுகேஎல் சென்ட்ரலுக்கு வருகை அளித்தது. சுதந்திரமான நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பேரணியின் போது முக்கியமான…

’300,000 ரிங்கிட் பெற்றதாக கூறப்படும்’ முன்னாள் அமைச்சரை MACC விசாரித்தது

முன்னாள் அமைச்சர் ஒருவர் நன்கொடைகளாக 300,000 ரிங்கிட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று விசாரித்துள்ளது. இப்போது ஒர் எம்பி-யாக இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்திடமிருந்து அந்தத் தொகையைப் பெற்றதாக கூறப்பட்டுகிறது. அந்த முன்னாள்…

‘அன்வார் இஸ்லாமியச் சட்டங்களை ஆதரிக்கிறார்; ஒரினச் சேர்க்கையை அல்ல’

பிகேஆர் தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அவர் உண்மையில் அந்த விவகாரம் மீதான இஸ்லாத்துக்குப் புறம்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டுக் கொண்டார் என்பதை அது சுட்டிக் காட்டியது. "ஷாரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப இல்லாத,…

ஜொகூர் டிஎபி இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மறுக்கிறார், இராமகிருஷ்ணன்

ஜொகூர் மாநில டிஎபி இனவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அது இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் செனட்டர் இராமகிருஷ்ணன். கடந்த ஜனவரி 12 இல் ஷா அலாமில் நடந்த டிஎபியின் தேசிய மாநாட்டில் ஜொகூர் டிஎபி சீனர்களுக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும்…

கடன் ஒப்பந்தத்துக்கு முன்பே ரிம250 மில்லியன் பெறப்பட்டதா? மறுக்கிறது NFC

ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி),அரசிடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெறும் ஒப்பந்தம் 2007-இல் கையெழுத்தானது என்று கூறி, ஒப்பந்தம் காணப்படும் முன்னரே அந்நிறுவனம் கடன்தொகையைப் பெற்றுக்கொண்டதென பொதுக் கணக்குக் குழு(பிஏசி) கூறுவதை மறுத்துள்ளது. “என்எப்சி-க்கும் அரசின் பிரதிநிதியான நிதி அமைச்சுக்குமிடையிலான கடன் ஒப்பந்தம்  2007 டிசம்பர்…

சீரமைப்பு இல்லையென்றால் இன்னொரு பேரணி, பெர்சே கோடிகாட்டியது

தூய்மையான, நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, தேர்தல் சீரமைப்பு தொடர்பிலான தன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும். இன்று கோலாலம்பூரில், வாக்காளர் கல்வி இயக்கம் ஒன்றைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், தேர்தல் சீரமைப்பு மீதான…

ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலக தீவிரவாதத்திற்கு எதிரானது என்கிறார் நஜிப்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலகத் தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறியிருக்கிறார். அவர் இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் கூடியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நியப் பேராளர்களிடம் உரையாற்றினார். மிதவாதத்துடன் மலேசியா எப்போதும் இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.…

நஜிப் சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு உத்தரவாதம் அளிப்பாரா?

"மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது." புத்ராஜெயாவுக்கான பக்காத்தான் பாதையில் பல தடைகள் கேஎஸ்என்: சுமூகமான அதிகார மாற்றம் குறித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலில் பேசினார். அதற்கு பிரதமர்…

சுயேச்சை எம்பி-க்களும் “தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்”.

நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சை உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு (TI-M)கேட்டுக் கொண்டுள்ளது. "அரசாங்கத்திலும் எதிர்த்தரப்பிலும் சுயேச்சையாகவும் உள்ள அனைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போதும் அதற்குப் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் அவ்வப்போது தங்கள்…

இரகசிய வானொலி நிலையம் தேர்தலுக்குத் தயாராகிறது

Radio Free Sarawak (RFS) என அழைக்கப்படும் இரகசிய வானொலி நிலையம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறது. அது  தன்னுடன் தொடர்பு கொள்வதற்கு அது உள்ளூர் தொலைபேசி எண் ஒன்றையும் வழங்கியுள்ளது. "தேர்தல் காலத்தின் போது நேயர்கள் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகளைத்…

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்நோக்கலாம்

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்களான பாப்பாகோமோ, பார்புக்காரி ஆகியோர் வணிகரான அப்துல் ரசாக் முகமட் நூர் மீது அவதூறு கூறியதாக கூறப்படுவதின் தொடர்பில் ஒவ்வொருவரும் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்ந்நோக்குகின்றனர். நெட்டோ அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக ஜனவரி மாதம் மூன்றாம் தேதி கோரிக்கைக் கடிதம்…

“அரசியல் திண்மையற்ற” இசி, பிஎஸ்சி, பெர்சே சாடுகிறது

தனது பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அமல்படுத்தாததற்காக தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே 2.0 தேர்தல் ஆணையத்தையும் (இசி), நாடாளுமன்ற சிறப்புக் குழுவையும் (பிஎஸ்சி) கடுமையாக சாடிற்று. அதன் எட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 41 பரிந்துரைகளில் பிஎஸ்சி நான்கு பரிந்துரைகளை மட்டும் அதன் இடைக்கால அறிக்கையில்…

என்எப்சி கிரடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் தலைமை…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஸாஹினுர் இஸ்ரான் சாலே, தாமும் தமது மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிறுவனத்தின் கிரடிட் கார்டுகளை தனிப்பட்ட சொந்தக்  காரணங்களுக்காக பயன்படுத்தியதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளதை மறுத்துள்ளார். "நிறுவனச் செலவுகளுக்கு மட்டுமே கிரடிட் கார்டு வழியாக…

அன்வாரை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் நிக் அஜிஸ்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை, அவரது அரசியல் எதிரிகளும் முக்கிய ஊடகங்களும் தொடர்ந்து அவமானப்படுத்தக் கூடாது என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். "பல ஆண்டுகளாக பத்திரிக்கைகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது பெரிய பாவமாகும். காரணம் அவை அன்வாருடைய…

‘ஷாரிஸாட் குடும்பம் என்எப்சி-யின் 600,000 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கு பொறுப்பேற்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிகேஆர் அந்த என்எப்சி நிதிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இன்னொரு அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளது. மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…

ஹசான்: நான் நடைமுறைகளுக்கு ஏற்ப நீக்கப்படவில்லை

பாஸ் கட்சியிலிருந்து தாம் இம்மாதத் தொடக்கத்தில் நீக்கப்பட்டது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி கூறுகிறார். "எனது நீக்கம் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. நான் என்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை," என அவர் இன்று கோலாலம்பூரில் தமது…

”தாய்ப் பால் வங்கி” ஹராம் என பாத்வா மன்றம் பிரகடனம்

'தாய்ப் பால் வங்கியை' அமைக்கும் யோசனையை இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய பாத்வா மன்றம் நிராகரித்துள்ளது. அத்தகைய 'வங்கி' ஹராம் என்றும் அது பிரகடனம் செய்தது. குறிப்பிட்ட மாது ஒருவரால் தாய்ப் பால் புகட்டப்படும் சிசுக்கள் "கலப்பு இன வம்சாவளியை" தோற்றுவித்து விடக் கூடும் என கலந்துரையாடல் நிகழ்வின் போது…

“நான் அன்வாரின் LGBT ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்கிறேன்”; ஹசான் அலி

அன்வாரின் "எல்ஜிபிடி ஆதரவு" (பெண் ஒருபால் புணர்ச்சி, ஒரே பாலர் புணர்ச்சி, இருபால் உறுப்புகளைக் கொண்டவர் மற்றும் பால் மாற்றம் விரும்புகிறவர்) நிலைப்பாடு தாம் அவருடன் இணைந்து செயல்படுவதற்கான உறவுக்கு பெரும் தடங்கலாக இருப்பதாக பாஸ்சிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறினார். "நான் ஏன் அவருடன் இணைந்து செயல்பட…

முக நூல் சர்ச்சை: யூஎஸ்எம் மாணவர் போலீஸ் ஜாமீனில் விடுதலை

நிபோங் திபாலுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டருக்குக் குண்டு வைக்கப் போவதாக மருட்டியதாக கூறப்படுவது தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் தேர்வுகளை எழுதுவதற்கு உதவியாக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞராகவும் எதிர்கால வல்லுநராகவும் விளங்கும் அந்த யூஎஸ்எம் கட்டுமானப் பொறியியல் மாணவருக்குத்…

புரோட்டோன், டிஆர்பி-ஹைகோம் பங்கு வாணிகம் நிறுத்தப்பட்டது

தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பெரிய தொழில் நிறுவனமான டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் ஆகியவற்றின் பங்கு வாணிகம் அறிவிப்பு விடுக்கப்படுவதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு இன்று அனுப்பிய கடிதத்தில்…

பக்காத்தான் மாநாட்டு பதாதைகளில் ஏன் இந்தியர்கள் இல்லை?, டெரன்ஸ் நெட்டோ

சனிக்கிழமையன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மூன்றாவது பக்காத்தான் ராக்யாட் மாநாடு மகத்தான வெற்றி என அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் ஆதரவாளர்கள் வருணித்துள்ளனர். என்றாலும் அங்கு சில விஷயங்கள் கண்களை உறுத்தின. அவை அற்பமானதாக தோன்றினாலும் சில தரப்புக்கள் பெரிதுபடுத்தக் கூடும். அந்த மாநாட்டுக்குச் செல்லும் பாதை நெடுகிலும் தொங்க…