ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்ட வெளிநாட்டு சதி- ஈரான் தலைவர்…

அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன. ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம். ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர்…

வன்முறை, மரண சுழலை நிறுத்துங்கள் – அதிபர் புதினுக்கு போப்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா…

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் வன்முறை- உயிரிழந்தோர் எண்ணிக்கை 174ஆக உயர்வு

கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி-…

புளோரிடாவை உலுக்கிய இயான் புயல் – பலி எண்ணிக்கை 51…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள்…

ரஷ்யா மீது கூடுதல் தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில் மேலும் கூடுதல் தடைகளை அறிவித்துள்ளது. எண்ணெய் விலை வரம்பு, வர்த்தகத் தடைகள், சர்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்புகளில் ஈடுபட்டோருக்குத் தடை விதித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.தடைகளை நடைமுறைப்படுத்த ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் வழங்கவேண்டும். ஆனால் அதற்கு ஹங்கேரி இணக்கம் தெரிவிக்குமா என்பது…

எந்தக் குழந்தையும் பசியுடன் தூங்கக்கூடாது! – பசியை ஒழிக்கத் திட்டமிடும்…

அமெரிக்காவில் பசி, உடற்பருமன் தொடர்பிலான பிரச்சினைகளை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் திட்டத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அது குறித்த மாநாட்டில் பேசிய அதிபர் ஜோ பைடன், அரசாங்கம், காங்கிரஸ், தனியார் நிறுவனங்கள், சமூகம் ஆகிய அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று கூறினார். "அமெரிக்காவில் எந்தக் குழந்தையும் பசியுடன்…

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்…

உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார். அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து…

லாட்வியன்-ரஷ்ய எல்லைப் பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்

லாட்வியன்-ரஷ்ய எல்லைப் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ரஷ்யர்கள் வெளியேற முயற்சிப்பதால் எல்லையில் உள்ள மூன்று பகுதிகளில் லாட்வியா அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. லாட்வியா இப்போது எல்லையில் அதன் செயல்பாடுகளை அதிகரிக்க முடியும் என்று நாட்டின் மாநில ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்லையில் உள்ள நிலைமை விரைவாக…

பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது விண்கலம் மோதி திசை…

பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…

ஜப்பானியர்களின் மாறுபட்ட கருத்துகளுக்கு இடையே நடந்த ஷின்ஸோ அபேயின் இறுதிச்…

ஜப்பான் தனது முன்னைய பிரதமர் ஷின்ஸோ அபேக்கு (Shinzo Abe) அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கை நடத்திப் பிரியாவிடை அளித்துள்ளது. பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் இறுதிச் சடங்கு குறித்து ஜப்பானியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவும்போதும் சடங்குகள் பெரிய அசம்பாவிதமின்றி நடைபெற்றன. 67 வயது அபே கடந்த ஜூலை…

ஈரான் எதிர்ப்பு அடக்குமுறையில் 76 பேர் கொல்லப்பட்டனர் – அரசு…

மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானிய அதிகாரிகள் நடத்திய போராட்டங்களில் 76 பேர் உயிரிழந்துள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) NGO தெரிவித்துள்ளது. எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுவதையும் சித்திரவதை செய்வதையும் தடுக்க சர்வதேச சமூகம் உறுதியான மற்றும் ஒற்றுமையுடன் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்…

அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குகிறது கனடா

நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கோவிட்  தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட கனடியர்களுக்கு…

ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஆறு குழந்தைகள்…

ரஷியாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர். ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.…

பிரிட்டன் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் (Pound) மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஆகப்பெரிய சரிவு. அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு இன்று காலை சுமார் 4 விழுக்காடு சரிந்தது. பின்னர் அது சற்றே மீண்டது. தற்போது ஒரு பவுண்ட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலர் 5…

இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜியார்ஜிய மெலோனி

இத்தாலியின்  தீவிர வலசாரித் தலைவர் ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni) பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். அவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாகத்  தீவிர வலசாரி அணி ஆட்சியைக் கைப்பற்றும் போல் தெரிகிறது. தேர்தலில் மத்திய…

உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்- ரஷிய…

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. ரஷிய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம்…

கோவிட்-19 ஓர் உலகப் பிரச்சினை – பணக்கார நாடுகள் அதை…

கோவிட்-19 ஓர் உலகப் பிரச்சினை என்பதைப் பணக்கார நாடுகள் மறந்துவிடக் கூடாது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வார்ட் (Bruce Aylward) வசதி குறைந்த நாடுகளுக்கு உதவத் தவறும் பணக்கார நாடுகளின் நடத்தை நிலைமை மோசமாவதற்குப் பெரிய காரணமாக…

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்- ஈரான் தலைவர்கள் சிலைகளுக்கு தீ…

போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர்…

சிரியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 77 பேர் உயிரிழப்பு

லெபனானில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழிப் பயணம். மீட்கப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன. அந்த…

ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை: வடகொரியா

ஆயுத ஏற்றுமதி பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வருவதாக வடகொரிய அதிகாரி தகவல் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது என்றும் கருத்து உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியாவுக்கு வடகொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனை…

வேலை மோசடியில் சிக்கியோரை மீட்கும் முயற்சியில் வியட்நாம், மலேசியா

கம்போடியாவில் சமூக ஊடகங்கள் மூலம் வேலைக்கு ஆள்சேர்க்கும் மோசடியில் சிக்கிய மேலும் பலர் பற்றிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கம்போடிய அதிகாரிகள் பவேட் (Bavet) நகரில் உள்ள ஒரு சூதாட்டக்கூடத்தில் வேலை மோசடிக்கு ஆளாகிய 11 வியட்நாமியர்களை மீட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (21 செப்டம்பர்) வியட்நாம் திரும்பினர்.இணைய மோசடி…

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் மக்கள்… 18-65 வயதுடைய ஆண்களுக்கு டிக்கெட்…

ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர்…

எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் உள்ளன: மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத…

ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டுள்ளார். எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை என புதின் பேச்சு மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில்…