3 மாதம் மட்டுமே.. கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

அதிலும் வெறும் வயிற்றில் மூன்று மாதம் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • நாள்பட்ட ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து, அதை சுடுநீர் அல்லது பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்.
  • கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினை குடித்து வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண்புரை நோயின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
  • சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, அதை பொடி செய்து, அதில் 1 டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து 5 நாட்கள் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் 20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
  • தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு பிரச்சனைகள் தடுக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலைச் சோர்வை தடுக்க, 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
  • குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகள் இருந்தால், கறிவேப்பிலையை அரைத்து, அதை மோருடன் கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • செரிமான கோளாறு பிரச்சனைகள் இருந்தால், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை அரைத்து அதன் சாறு எடுத்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் குணமாகும்.
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலை ஜூஸ் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, குடித்து வந்தால், சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
  • பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
  • -lankasri.com