உங்கள் வாழ்க்கையை சூதாடாதீர்கள்! தடுப்பூசி போடுங்கள்

கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சூதாட்டுகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்கம் கூறுகிறது.

மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மென்மையானவை என்றாலும், அது எப்போதும் அப்படி இருக்காது.

ஒரு நபரின் இயற்கையான நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருந்தால் வைரஸால் பாதிக்கப்படும் போது கடுமையான அறிகுறிகளின் சாத்தியம் இன்னும் இருப்பதாக அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் பாதிப்பு  நிகழலாம் என்றும் அவர் கூறினார்.

“தங்கள் முதன்மை தவணையை கூட பெறாதவர்கள் நிலை என்ன? எனவே பொதுமக்களுக்கு மலேசிய மருத்துவ சங்கத்தின் செய்தி என்னவென்றால்: ‘உங்கள் வாழ்க்கையுடன் சூதாடாதீர்கள்’.

“தடுப்பூசி மற்றும் ஊக்க மருந்துதவணை மூலம் கிடைக்கும் அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுங்கள்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

நாட்டின் நிலைமை பழைய நிலைக்கு மாறினாலும், தினசரி அடிப்படையில் கோவிட் -19 காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் இறப்புகள் தொடர்வதை கருத்தில் கொண்டு தடுப்பு ஊசி அவசியம் என்று கோ கூறினார்.

“மூத்த குடிமக்கள் மற்றும் கூட்டு நோய்கள் உள்ளவர்கள் இன்னும் தங்கள் ஊக்க தவணையை பெறாதவர்கள் மேலும் தாமதிக்க வேண்டாம்.

“ஒமிக்ரான் மாறுபாடு மிகவும் பரவக்கூடியது மற்றும் இது ஒவ்வொருவரும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை ஒரு கட்டத்தில் அதிகமாக்குகிறது. எனவே கூடுதல் ஊக்க தவணையை பெறுவது சிறந்தது, ”என்று அவர் கூறினார், இன்னும் உறுதியாக தெரியாதவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகுவது அவசியம் என்றார் அவர்.

தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாத முதியோர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி சேவைகளை வழங்குவதற்கான Protect Health இன் நடவடிக்கைக்கு கோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

-freemalaysiatoday