இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இந்து கோயில்கள் வலுக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவது, இரவோடு இரவாக அகற்றப்படுவது, மூர்க்கத்தனமாக தகர்க்கப்படுவது, போன்ற சம்வங்கள் இன்று நேற்று முளைத்தப் பிரச்சனை இல்லை. காலங்காலமாக இத்தகைய அவலங்களை தொடர்ச்சியாக நாம் அனுபவித்துக் கொண்டுதான் வேதனையில் வாடுகிறோம். இத்தகைய பிரச்சனைகள் இந்துக் கோயில்களை மட்டும்தான்…
கோலாலம்பூர் கோயிலும் கட்டப்பட உள்ள மசூதியும்
நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…
அல்தான்துயா கொலை – யாரின் குற்றம், யாருக்குத் தண்டனை!
இராகவன் கருப்பையா - சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான். அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன் சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று…
மலேசியா யாருக்குச் சொந்தம்?
கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…
திரைக்கு பின்னால்தான் ஜ.செ.க.யின் இந்தியத் தலைவர்கள்
இராகவன் கருப்பையா - இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள ஜ.செ.க.வின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல், என்றும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 30 இடங்களுக்கு மொத்தம் 70 பேர்கள் போட்டியிடவிருக்கின்றனர். அவர்களில், கணபதிராவ், கோபிந் சிங், நேத்தாஜி ராயர்,…
சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும்
இராகவன் கருப்பையா- அண்மையில் சிலாங்கூர், செப்பாங் அருகில் இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான சர்ச்சை முற்றாக ஓய்வதற்குள் மற்றொரு ஈனச் செயல் நம்மை ஈட்டி போல் தாக்கியுள்ளது வேதனைக்குறியது. அதுவும், இந்த அறிவிலித்தனத்தை அரங்கேற்றியது 'எரா எஃப் எம்' எனப்படும் ஒரு வாணொலி நிலையத்தைச் சேர்ந்தவர்கள்…
சம்மன் செலுத்தப்படாவிட்டால் ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிப்பதை JPJ தடுக்க முடியும்…
தீர்க்கப்படாத போக்குவரத்து சம்மன்கள் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பிப்பதைத் தடுக்க சாலைப் போக்குவரத்துத் துறைக்கு (JPJ) அதிகாரம் உள்ளது என்பதை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ பூக் உறுதிப்படுத்தியுள்ளார். JPJ அவ்வாறு செய்ய முடியாது என்று 2008 இல் கூச்சிங் உயர் நீதிமன்றம்…
‘குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டும்’ கல்வியின் நிலை
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு,…
கல்வித் தரத்தை உயர்த்துங்கள் கட்டிடத்தின் உயரத்தை அல்ல!
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு, கூட்டரசுப்…
கிளிங்-க்கு சோளம் விற்கப்படாது என்ற வியாபாரி தண்டிக்கப் பட வேண்டும்
இனவெறி கொண்ட சோள விற்பனையாளருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என்று குவான் எங், அக்மல் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஏபி தலைவர் லிம் குவான் எங், இந்த சம்பவம் இனவெறி எதிர்ப்புச் சட்டத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் ஒரு யதார்த்தச் சோதனை என்று கூறினார், அதே நேரத்தில் அம்னோ இளைஞர்…
பத்துமலை முருகன் சந்நிதியில் இலவசமாக குடிநீர் வேண்டும்
இராகவன் கருப்பையா - ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது ரதம் ஊர்வலமாகச் செல்லும் வழி நெடுகிலும் பல்வேறு விதமான உணவுகளுக்கும் பானங்களுக்கும் பஞ்சமே இருக்காது. நம் நாட்டில் தைப்பூசம் கொண்டாடப்படும் கிட்டதட்ட எல்லா இடங்களிலும் இந்த இலவச உணவு வினியோகக் கலாச்சாரம் நிலவுவதை நம்மால் காண முடிகிறது. இறை பக்தியையும்…
ஆங்கிலப் புலமையை அதிகரிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சரவாக்…
மாணவர்களிடையே ஆங்கிலப் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு சட்டத்தை இயற்றுமாறு சரவாக் கல்வித் துணை அமைச்சர் டாக்டர் அனுவார் ரபாய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்புக்கு பதிலளித்த அனுவார், இந்த விஷயத்தில் ஒரு பிரத்யேக சட்டம்…
ஹம்மாஸை துடைத்தொழிக்க அமெரிக்க அதிபர் வீயூகமோ?
இராகவன் கருப்பையா - அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன் செய்த ஒரு திடீர் அறிவிப்பு உலகை உலுக்கியது என்றால் அது மிகையில்லை. கடந்த 15 மாதங்களாக கடுமையான போரினால் சீரழிந்துள்ள பாலஸ்தீனின் காஸா கரையை "அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்," என அவர் செய்த…
அரசியல்வாதிகளால் தேங்கிக் கிடக்கும் நற்சேவைகள்
இராகவன் கருப்பையா- கடந்த 2 வாரங்களாக சர்வதேச நிலையில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து, பட்டித் தொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டு வருவது இரு முக்கியமான விஷயங்களாகும். அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல நாடுகளுக்கு எதிராக விதித்துள்ள 'காப்பு வரி,' மற்றும் 'டீப் சீக்'(DeepSeek) எனப்படும் சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவுத்…
இந்தியர்களுக்கான ஏய்ம்ஸ்-இல் இந்திய மாணவர்கள் குறைவு
இராகவன் கருப்பையா- நம் சமூகத்தைச் சார்ந்த இளையோரின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே விசேஷமாக நிறுவப்பட்ட ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் (ஆசிய மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) தற்போது அங்கு பயிலும் 3,500க்கும் அதிகமானவர்களில் 60 விழுக்காட்டுக்கும் மேல் சீன மாணவர்கள் பயில்கின்றனர். இதற்கு யார் காரணம்? நம்…
பொதுச் சபை பிரம்படி குற்றத்தை குறைக்காது பாவத்தை கழுவாது
ஜான் அஸ்லீ - பொதுச் சபையில் பிரம்படி கொடுப்பது குற்றத்தை குறைக்காது பாவத்தையும் தடுக்காது நானும் என் மனைவியும் எங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஏதாவது தவறு செய்தால் நாங்கள் அவர்களை எந்த வகையிலும் பிரம்படி, அறைய, கிள்ள, முறுக்க, அடிக்க அல்லது அடிக்க மாட்டோம்.…
பண வீக்கமும் பத்தாத ஓய்வூதியமும்
ஓய்வூதியம் பல ஆண்டுகளாக, ஓய்வு என்பது வாழ்க்கையின் பொற்கால அத்தியாயத்தை அடையாளப்படுத்தியது, மக்கள் தங்கள் பல தசாப்த கால கடின உழைப்பின் பலன்களை நிதானமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது. இருப்பினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் போதுமான சேமிப்பு இல்லாததால், அதிகரித்து வரும் வயதானவர்கள்…
அஸ்தமயமாகும் அரசியலில் சிக்கிய கோபிந் சிங்
இராகவன் கருப்பையா- ஒர் எதிர்கட்சி அரசியல்வாதியாக இருந்த காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்துக் கொண்டிருந்த ஜ.செ.க. துணைத் தலைவர் கோபிந் சிங்ஙின் அரசியல் வாழ்க்கை தற்போது இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதைப் போல் தெரிகிறது. இலக்கவியல் அமைச்சராக தற்போது அவர் பொறுப்பு வகிக்கும் போதிலும் கட்சியில் அவர் செல்வாக்கை…
சீனப் பள்ளிகளில் நமது பிள்ளைகள்
இராகவன் கருப்பையா - புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் தமிழ் மொழி ஆர்வளர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஒரு முறை தமிழ் பள்ளிகள் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் திரும்புவது தவிர்க்க முடியாது ஒன்றுதான். இவ்வாண்டின் புதிய பள்ளித் தவணை எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. வழக்கம் போல…
ஊழல்வாதி நஜிப்புக்கு பத்துமலையில் கூடியது கண்டனதிற்குறியது
இராகவன் கருப்பையா - தனக்கு வீட்டுக் காவல் வேண்டும் என்பது மீதான வழக்கு, விசாரணைக்கு வரவேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவ்விவகாரத்தின் பின்னணில் உள்ள சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. அவருடைய அவ்விண்ணப்பத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குதான் நீதிமன்றம் கூடியதே…
பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்
இராகவன் கருப்பையா - 'வழியில் கிடந்த கோடரியை காலில் போட்டுக் கொண்ட கதை'யாகத்தான் உள்ளது மலேசியாவின் நிலை. இஸ்ரேல் - ஹம்மாஸ் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் காயமடைந்த 40 பேர் உள்பட மொத்தம் 127 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு அழைத்து வந்த மலேசியா அதன்…
நஜிபிற்கு ஒற்றுமை பேரணி: அவலமான அரசியல் நாடகம்
இராகவன் கருப்பையா - இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலப் பசிக்கு எப்படியெல்லாம் பொதுமக்களை இரையாக்கிக் கொள்கின்றனர் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு வேதனையும் விரக்தியும் கலந்த கோபம்தான் வரும். 'கொட்டக் கொட்டக் குனிபவன் இருக்கும் வரையில் கொட்டுபவன் கொட்டிக் கொண்டுதான் இருப்பான்,' எனும் உவமைக்கு ஏற்ப, மக்கள் விழிப்படையாத வரையில்…
சிந்திக்க வரம் தா! என்பதே சனாதன தர்மம்
கி.சீலதாஸ் - சனாதனம் என்றால் தொன்மையான நடைமுறை ஒழுக்கம் என்றும் சனாதன தர்மம் தொன்றுதொட்ட அறவொழுக்கம் என்றும் பொருள்படும். இது ஹிந்து (இந்து மதம்) என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி தவறான கருத்துகளுக்கும் இலக்கியங்களுக்கும் பஞ்சம் இல்லை. மற்ற மதத்தினரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்களும் சனாதன…
தமிழ் எழுத்துத் துறையில் இளம் எழுத்தாளர்கள் எங்கே?
இராகவன் கருப்பையா - நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று துணிச்சலாகக் கூறலாம். முனைவர் மாரி சச்சிதானந்தம் தலைமையிலான கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம், ந.மதியழகனை தலைவராகக் கொண்ட சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் மற்றும் ந.கு.முல்லைச்…