கி.சீலதாஸ் - நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர். இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப…
அரசாங்கத்தை கவிழ்க்க வெறித்தனமான வேட்கை
இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்வுபெற்ற ஒரு அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் வெறித்தனமான வேட்கையில் ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தி…
சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாகி விட்டது
கி.சீலதாஸ் - இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் இது. சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி சுமத்தப்படுகிறது. ஒரு காலத்தில் இன, சமயப் பிரச்சினைகள் அவ்வளவாகத் தலையெடுத்திராத போது…
நீதிபதிகளும் செயற்கை நுண்ணறிவும்
கி. சீலதாஸ்- விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க முன்னேற்றம் பல துறைகளில் மனிதர்களின் சேவைகளை தேவையற்றதாகிவிட்டது. அப்படியே அவர்களின் சேவை தவிர்க்க முடியாதது எனினும் அவர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விஞ்ஞானத்தின் துணை தேவைப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அதாவது மனிதர்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை மறு உறுதி செய்யும்…
சுயமாக தமிழ் கற்று தமிழ் பள்ளியிலே ஆசிரியரான சிவகாமி
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை - இராகவன் கருப்பையா தேசிய பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை மேற்கொண்டு சுயமாகவே தமிழைக் கற்று தற்போது தமிழ் பள்ளி ஒன்றுக்கு துணைத் தலைமையாசிரியையாக கோலோச்சுகிறார் சிவகாமி வையாபுரி. தமது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் தமிழ் பள்ளியில் சேர்த்த பெற்றோர், ஏதோ…
பலவீனமான முஸ்லிம்களை நாடுகிறது ஜசெக – ஹடியின் விஷமத்தனமான அதிரடி
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக- க்கு எதிரான அவரது சமீபத்திய உரையில், அது அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதற்காக "அறியாமையில்” உள்ள மலாய்க்காரர்களைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டினார். ஜசெக சில மலாய் பிரமுகர்களை அதன் "பொம்மைகளாக" ஆக்கியது என்றும் அவர் கூறினார். பல வரலாற்று நிகழ்வுகளை…
நாம்மிடையே இருக்கும் ‘சண்டை’ குணம் மாறுமா?
இராகவன் கருப்பையா - கடந்த சுமார் ஒரு மாத காலமாக நாடலாவிய நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு விஷயம் 'அக்கா நாசி லெமாக் கடை'. புலனக் குழுக்கள், முகநூல், வலையொளி, படவரி, கீச்சகம் மற்றும் தொலைவரி போன்ற பல்வேறு வலைத்தளங்களில் புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளது…
பிரம்படிக்கு உட்பட்ட பெண்கள் – அரசியலமைப்புக்கு முரண்பாடானது
கி.சீலதாஸ் - 2018-இல் இரு முஸ்லிம் பெண்கள் ஓரினக் காதலில் ஈடுபட்டார்கள் எனத் திரங்கானு ஷரியா உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அவ்விரு பெண்மணிகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்குத் தலா மூவாயிரத்து முன்னூறு ரிங்கிட் அபராதமும் தலா ஆறு பிரம்படியும் தண்டனையாக ஷரியா நீதிமன்றம் விதித்தது. பிரம்படி தண்டனையை…
காத்திருந்த நீதிபதியும், காக்கப்பட்ட நீதியும்
கி.சீலதாஸ் - தனிமனிதனின் உரிமை எக்காலத்திலும் மதிக்கப்பட, பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு மிகுந்த அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் உரிமையாகும். ஒரு காலத்தில், இருபதாம் நுற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உரிமைக்கு மரியாதையோ, பாதுகாப்போ கொடுக்கப்படவில்லை என்பதும் வரலாறு. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல மனிதர்கள் அவமதிக்கப்பட்டார்கள்.…
இந்தியர்களின் பங்களிப்பு ராணுவத்தில் ஏன் குறைவு?
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல் படை போன்றத் துறைகளில் நம் சமூகத்தினரின் பங்களிப்பு கம்மியாக இருப்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு குறைபாடு. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' அதற்கான பலதரப்பட்டக் காரணங்களை நாம் அறியாமலும் இல்லை. ஆனால் 'முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப்…
ஊதாரிகளால் உண்டாகும் பண வீக்கம் நமது சேமிப்பின் மதிப்பை குறைக்கிறது
டி.கே.சுவா - முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தற்போதைய வட்டி விகிதத்தை பராமரிப்பதில் வெறித்தனமாகத் தோன்றினார், குறிப்பாக கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வட்டிகள் மேலும் உயர்த்தப்பட்டால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை மேற்கோள் காட்டினார். மலேசியாவில் மட்டுமல்ல, உலகளவில் பணவீக்கம் உள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்களின்…
உழைப்பாளி வர்கத்தின் அடையாளம், அயராது உழைக்கும் ஆதிமூலம்
இராகவன் கருப்பையா - தொழிலாளர் தின சிறப்பு கட்டுரை. சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை. நவீன மயத்தில் கணினி உள்பட தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் தொழிலாளர் வர்கம் இல்லையென்றால் ஒரு அணுவும் நகராது என்பதில் மாற்று…
25-வது ஆண்டில் காலடி பதிக்கும் மலேசிய சோசியலிச கட்சி
யோகி - சோசியலிசம் என்பது நாட்டின் வளம் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம். மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே, எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின்…
எட்டு சிறார்கள் மரணமும், காரோட்டியின் விடுதலையும்
கி.சீலதாஸ் - சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் ஒருவர் இறந்தார் அல்லது பலத்த காயமடைந்தார் என்ற செய்தி வெளிவந்தால் அது அதிர்ச்சியைத் தந்தது. பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் அனுதாபம் பரவலாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாதாரண சாலை விபத்து கூட கடுமையானதாகக் கருதப்பட்டது என்றால்…
காவல் துறையினரின் சேவைகளை தவறாக பயன்படுத்தும் வாகனங்கள்!
இராகவன் கருப்பையா - காவல் படையினரின் துணையுடனும் சிறப்பு அவசர சமிக்ஞை விளக்குகளுடனும் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்துள்ளதைப் போல் தோன்றுகிறது குறிப்பாக சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இச்சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர் எனும் குறைபாடு பொது மக்களிடையே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார அமைச்சர்…
மத நல்லிணக்கத்தில் ஒளி வீசும் புக்கிட் ரோதான்
ஆடிலாதா கொண்டாட்டத்தில் ஒரு இந்து பாதிரியார் முக்கிய பங்கு வகிப்பார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள், ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புக்கிட் ரோட்டனில் அதுதான் நடந்தது. அன்-நூரியா பள்ளிவாசலில் இருந்து தப்பி ஓடிய பசுவை, மறுநாள் பலியிடப்பட இருந்த இடத்தில், குடியிருப்பாளர்கள் தேடி வந்தனர். அதிகாலை 3…
ஊழலில் சிக்கிய முன்னாள் பிரதமர்கள்
இராகவன் கருப்பையா - அண்மையில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் வரலாற்றில் ஊழல் குற்றங்களுக்காக நீதிமன்றம் ஏறும் 2ஆவது பிரதமராக அவர் திகழ்கிறார். மற்றொரு முன்னாள் பிரதமரான நஜிப் ரஸாக் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது உலகறியும். இந்நிலையில் தற்பொழுது முஹிடினும் நீதிமன்ற வாசலை மிதித்துள்ளதானது,…
மரணம் எனும் துயரம் நல்ல நேரத்திலா வரும்?
இராகவன் கருப்பையா - ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது அவருடைய குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். ஏனெனில் மனிதனாய் பிறந்த அத்தனை பேருக்கும் நெருக்கமான ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் சோகத்தைவிட வேறொரு துயரம் இருக்க முடியாது. எனவே மரணம் எனும் ஒரு சம்பவம் நல்ல…
அரசியலில் நாவடக்கம் தேவை – கி.சீலதாஸ்
நன்றாகச் சிந்தித்தப் பிறகு வாயைத் திறந்தால் நல்லது என்கின்ற கட்டுப்பாட்டை அரசியல்வாதிகளிடம் காண்பது அரிதாகும். நம் நாட்டில் மட்டுமல்ல பேச்சில் கட்டுப்பாடற்றத் தரத்தைப் பல நாடுகளில் காணலாம். குறிப்பாக, ஜனநாயகக் கோட்பாட்டைப் பேணும் நாடுகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் இப்படிப்பட்ட போக்கு சர்வசாதாரணம். இதைப் பேச்சு…
இரு காதுகள், ஒரு வாய் – சொல்லும் அரசியல்
கி.சீலதாஸ் - இறைவன் நமக்கு இரு காதுகளையும் ஒரு வாயைக் கொடுத்திருப்பதானது நாம் பேசுவதைக் குறைத்து, காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதை உற்சாகப்படுத்தவே. ஜனநாயக நெறிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று சொல்கிறோம். ஆனால், முழு சுதந்திரப் பேச்சுரிமை அனுமதிக்கப்படுகிறதா…
அன்வார், ஜாஹித் அல்லது நஜிப்? யார்தான் பொறுப்பு
மரியம் மொக்தார் - திடீரென்று ஒரு திருப்பம். அது தண்டனை பெற்ற குற்றவாளியான நஜிப் அப்துல் ரசாக் வழக்கில். அவருக்கு எப்படியாவது அரசு மன்னிப்பு கொடுக்கலாம் என்பதாகும்.. இதற்கு காரணம், ஐந்து தலைமை நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் அவரின் 12 ஆண்டிகள் சிறைத் தண்டனையை உறுதி படுத்திய போது, அதில் ஒரு நீதிபதி மட்டும் முரணான வகையில் நஜிப் விடுதலை செய்யப்படலாம் என்ற வகையில் தனது…
யுக்ரேன் அகதிகளை காப்பாற்றிய சாதனையாளர் டாக்டர் முருக ராஜ்
இராகவன் கருப்பையா - அனைத்துலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு நேர்காணல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய-யுக்ரேன் போர் வெடித்ததைத் தொடர்ந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட போது உடனே களமிறங்கிய டாக்டர் முருகராஜ் ராஜதுரையின் சேவைகள் அளப்பறியது. அவருடைய மூன்று பிள்ளைகளும்…
மலாய் இனத்தின் தன்மானத்தை சூறையாடும் மகாதீர்
இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மலாய் பிரகடனம்' எனும் ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதானது நாட்டின் வெகுசன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. அந்த நிகழ்வு நடைபெறவிருந்த இரு மண்டபங்களின் நிர்வாகங்களும் காரணங்கள் எதனையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சிக்கான பதிவுகளை ரத்து…
இன, சமய அரசியல் பித்தலாட்டதில் மலேசியா
கி.சீலதாஸ் - ஒரு காலத்தில் (சுமார் எழுபது ஆண்டுகள் வரை) அகண்ட பிரிட்டிஷ் வல்லரசின்மீது ஆதவன் மறைவு நிகழாது என்ற பெருமை ஊன்றி இருந்தது. இன்று அது அடிபட்டுவிட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் மனிதர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. மனித நேயம் மறுக்கப்பட்ட மக்கள் பல இழிவுகளுக்கு, இன்னல்களுக்கு…