அம்னோ மீண்டும் தலைதூக்க 2 நிலைப்பாடுகலில் எது சரியானது?

மலாய்க்காரர்கள் அம்னோவுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்ற கதைக்கும், அம்னோ மலாய்க்காரர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்ற கதைக்கும் இடையே கட்சி ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று சாலே சைட் கெருக் கூறுகிறார்.

2013ல் நடந்த 13வது பொதுத் தேர்தலில் இருந்து அம்னோவுக்கு மலாய் ஆதரவு குறைந்து வருகிறது.அம்னோவின் முன்னாள் பொருளாளர் ஒருவர், அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களின் ஆதரவை மீண்டும் பெற வேண்டுமானால், தற்போதுள்ள இரண்டு நிலைப்பாடுகளில்  ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.

1957ல் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெறுவதில் அம்னோவின் பங்கிற்காகவும், சமூகம் பெற்ற விசேச சிறப்புச்சலுகை  உதவிகளுக்காகவும் மலாய்க்காரர்கள் அம்னோவுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு நிலைப்பாடு என்று சலே சைட் கெருக் கூறினார்.

60 ஆண்டுகளாக நாட்டை நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்கியதற்காக அம்னோ மலாய்க்காரர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்பது இரண்டாவது நிலைப்பாடு.

“சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், மலாய்க்காரர்களை மீண்டும் கட்சிக்கு ஈர்த்து, அம்னோ மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்”,என்று  உசுகான் சட்டமன்ற உறுப்பினர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

13வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோவுக்கு மலாய்காரர் ஆதரவு குறைந்து வருகிறது. அதன் குடைக் கூட்டணியான பாரிசான் நேசனல் (பிஎன்) அதன் ஆறு தசாப்த கால ஆட்சியின் முடிவைக் குறிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டு அம்னோ தேர்தலில் வீழ்த்தப்பட்டது.

2022 இல் நடந்த 15வது பொதுத் தேர்தலில் அம்னோ தனது மோசமான தேர்தல் செயல்திறனைப் பதிவு செய்து, வெறும் 27 இடங்களையும், 31% மக்கள் வாக்குகளையும் வென்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆறு மாநிலத் தேர்தல்களிலும் அது மோசமாகச் செயல்பட்டது, அங்கு போட்டியிட்ட 108 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த மாத தொடக்கத்தில், சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தது, பினாங்கில் உள்ள மலாய்க்காரர்கள் மத்தியில் அம்னோ தனது ஈர்ப்பை இழந்துவிட்டது என்பதற்கான அறிகுறி என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் சின் கூறியதாக FMT மேற்கோளிட்டுள்ளது.

திங்களன்று, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றின் முக்கிய அரசியல் நோக்கம் 2022 தேர்தலில் பெர்சத்துவிடம் இழந்த ஒவ்வொரு இடத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று சலே கூறினார்.