மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தை எதிர்த்துப் போராட சபதம்!

செம்பருத்தி.காம்

djz1டோங் ஜவ் ஸோங் (DJZ) என்ற சீனக்  கல்வி அமைப்பின் தலைவர் யாப் சின் தியன் ‘ மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025’ எதிர்த்து அது தாய்மொழிக் கல்விக்கு ஏற்ற வகையில் மாற்றம் காணும் வரை போராடப்  போவதாக சபதமிட்டார்.  

djz yapஇன்றுக் காலை கோலாலம்பூர் சூங் குவொ சீன ஆரம்பப் பள்ளி மண்டபத்தில் நடந்த ‘728 பிரகடனம்’ (சிறப்புக் கட்டுரைப் பகுதியைக்  காணவும்) என்ற கல்வி மாநாட்டில் உரையாற்றிய யாப், “இந்தப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்வியை ஒரு முடிவுக்குக்  கொண்டுவர போட்ட திட்டமாகவே காட்சியளிக்கிறது”, என்றார்.   

தாய்மொழிக் கல்வி உரிமையைப் பறிக்க விடமாட்டோம் என்று யாப் கூறிய போது அரங்கத்தில் இருந்த 2,000-க்கும் அதிகமானோர் பலத்த கரவொலி எழுப்பி ஆதரவு நல்கினர்.  

djz 2இந்தப் பெருந்திட்டம் சார்பாக மக்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு  சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும்,  ஆனால் கல்வி அமைச்சு அதை இதுவரை ஒரு பொருட்டாக கருதியதாக தெரியவில்லை என்றார். எனினும் தாங்கள் தொடர்ந்து தமிழ்க்கல்வி அமைப்புடன் இணைந்து மீண்டும் கோரிக்கையைக் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிப்போம் என்றார் யாப்.

 இதையும் புறக்கணித்தால் எதிர்ப்பு நடவடிக்கையாக  கையெழுத்து பிரச்சாரத்தையும் நடத்த போவதாக யாப் கூறினார். மேலும், “மனித உரிமைகள் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் யுனெஸ்கோ அமைப்பிடமும் முறையீடு செய்வோம் என்றார்.  

மண்டபம் நிறைந்து காணப்பட்ட 2,000 க்கும் அதிகமானோர் 1,100 இயக்கங்களின் பிரதிநிதிகளாக  மாநாட்டின் தீர்மாங்களை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

Aruஇதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கும் ஒரு முக்கிய பங்கை காலணித்துவ காலம் முதல் தமிழ்ப்பள்ளிகள் ஆற்றியுள்ளதாகவும், அதன் வளர்ச்சி இன்று ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நிலைக்கு எட்டியுள்ளதாகவும் கூறினார். அதை அபகரிப்பது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி உரிமையை பறிப்பதாக அமையும் என்றார்.

“ஒரு நாடு, ஒரு மொழி என்ற கொள்கை வழி  அனைத்து இனங்களையும் ஒருங்கிணைக்க முயலும் வழிமுறை காலாவதியாகிவிட்ட ஒன்று என்ற ஆறுமுகம், 2004-ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாட்டு மேம்பாட்டு திட்ட அறிக்கை தாய்மொழிக் கொள்கைக்கு முன்னிலை கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டினார். “தாய்மொழிக்கல்வியை வலுக்கட்டாயமாக அழிக்க முற்பட்ட பல நாடுகளில் மொழி, பண்பாடு சார்ந்த முரண்பாடுகள் அரசியல் போராட்டமாக வெடித்துள்ளதை உணர வேண்டும் என்று கூறிய அவர்,  மனித விடுதலை கோரும் மக்கள் மொழியையும் பண்பாட்டையும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்றார்.

djz 3இந்நிகழ்வில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வாரின் புதல்வி நூருல் இசா, பொக்கொ சேனா நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் துணைத்தலைவருமான மாபுஸ் ஒமார், தாமான் சி பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் ஆகியோர் தாய்மொழிக் கொள்கையை தீவிரமாக தற்காத்துப் பேசினர். இதில் தமிழ் அறவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆர். சுப்ரமணியம், பி. சுப்பிரமணியம், மதன்  மற்றும் அன்பழகன் ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.