சீனமொழி தெரியா ஆசிரியர்களை சீனப்பள்ளிகளுக்கு அனுப்பாதீர்!

சீனமொழியை கற்காத ஆசிரியர்களை தங்களுடைய சீனப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கத்திடம் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பலத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் கொண்ட சுமார் 10,000 மக்கள் நிரம்பிய டோங் ஜோங் (DONG ZONG)) காஜாங் கல்லூரி வாளாகத்தில் உரையாற்றிய சீன அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர். (மேலும்…

கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்​குளம் உலைக்களம்!

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூடங்​குளம் அனுமின் நிலையத்தைச் சுற்றி முப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள்.…

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி வெடித்தது

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் இராணுவ புரட்சி வெடித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மாலியில் குடியரசுத் தலைவர் அமடேவ் தொமானி தோரேவை எதிர்த்து அந்நாட்டு வடக்கு பகுதியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பகுதியில் துவாரெக்லட் இன மக்கள் வசித்து வருகின்றனர்.…