டத்தோ தனேந்திரன் + டத்தோ நல்லா = சமுதாயம் ???

அனைத்துலக விமான நிலயத்தில் தமிழ் மொழியை பயணிகள் அனைவரின் காதிலும் தேனாய் பாய யார் காரணம்? என்றக் கயிறிழுக்கும் போட்டி இன்று இரண்டு டத்தோக்களுக்கும் ந(ல்லா)ன்றாகவே அரங்கேறியுள்ளது. சக்தி அறவாரியத்தின் சார்பாக (கவனிக்க இதன் தலைவர் டத்தோ தனேந்திரன் அவர்கள்) பிரதமர் அவர்களின் தனிப்பட்ட முறையில் வழங்கிய பணமுடிச்சால்…

இந்தியன் என்று சொல்லு…இணைந்திருந்து வெல்லு!

வீழ்வது நாமாயினும்...வாழ்வது தமிழாகட்டும்! மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம் மலேசிய இந்தியர்கள் ஒன்றுபடுவோம்! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு தினத்தில் ஒற்றுமையுடனும், கல்வி, பொருளாதாரம் முதலியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். புதிய மாற்றம் மற்றும் சிந்தனை கொண்டுவர வேண்டும். நாம் வெவ்வேறு சிந்தனை உடையவர்களாக…

STPM தேர்வெழுதிய மாணவர்கள் இங்கிலாந்தில் பயில்வதும் இனி காணல் நீர்தானா?

மலேசிய கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கும் தவணை முறையிலான எஸ்.டி.பி.எம் தேர்வுமுடிவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பதா; இல்லையா என இன்னும்  முடிவு செய்யவில்லை. ஆட்சிமுறைகுட்படுத்தப்பட இனவாதத்தால , எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்சியடைந்திருந்தும்,  மலேசிய அரசாங்க பல்கலைகழகங்களில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்கள், தங்களின் வாழ்கை இலட்சியங்களை வென்றே…

100 சிறந்த மாணவர்களும் 100 உயர் ரக கல்விக் கழகங்களுக்கு…

- செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சிறப்பு தேர்ச்சி பெற்ற 100 இந்திய மாணவர்கள் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என பிரதமர் அறிவித்துள்ளார். ஏன்? முதல் நிலை தேர்ச்சியுடைய எந்தவொரு இந்திய அல்லது மலேசிய மாணரும் உயர் ரக பல்கலைக்கழகங்களில் பயில உதவினால் என்ன? அல்லது குறிப்பிட்ட 100…

கூரை சரிவு: தமிழ்ப்பள்ளியின் கதியைக் காட்டுகிறது!

- செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன், மார்ச் 20, 2012. 700 மாணவர்களுடன் 50 ஆண்டுகால பழமைவாய்ந்த செர்டாங் தமிழ்ப்பள்ளி மலேசிய தலைமை நிர்வாக மையகமாக விளங்கும் புத்ரா ஜெயா அருகில் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை பள்ளிக் கட்டிடத்தை சோதனையிட்டபோது, கூரை பழுதடைந்து துவாரங்கள் காணப்படுவதும், மின்சாரக் கம்பி இணைப்புகளில்…

கூட்டம் கூடலாம்! வாக்குக் கிடைக்குமா?

ம.இ.கா நிகழ்ச்சிகளிலும், இடைத் தேர்தல் முடிவுகளின் போதும் கூட்டம் அதிகம்  உள்ளதால் இந்திய வாக்குகள் மீண்டும் பாரிசான் நேஷனல் பக்கம் திரும்பிவிட்டதாக ம.இ.கா தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். மலேசிய அரசியல் தற்போது புள்ளிவிவர முடிவிலோ அம்னோவின் கட்டுப்பாட்டிலோ இல்லை. உணவு, பணம்,  பரிசுக் கூடை, போக்குவரவுக்கான செலவு போன்றவற்றை ம.இ.கா.…

13வது பொதுத்தேர்தல் வேட்பாளர்களைத் தேர்தெடுப்பதில் முதிர்ச்சியைக் காட்டுக!

கால் பிடிப்பவனுக்கும் வால் பிடிப்பவனுக்கும் தேர்தலிலே வேட்பாள்களாக நிற்பதற்கு இடம் கொடுத்தால் கடந்த 50, 52 ஆண்டுகளாக என்ன நடந்ததோ அதுவே நன்றாகவே நடக்கும். என்ன நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதுதான் புதிய கீதாச்சாரம். மஇகா, ஜசெக, கெஅடிலான் உட்பட! தலைவர்களாக உள்ளவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ…

தவணை முறை எஸ்.டி.பி.எம் தேர்வுகளை அனைத்துலக பல்கலைகழகங்கள் ஏற்குமா?

மலேசியத் தேர்வு வாரிய தலைவர் பேராசிரியர் டாக்டர் முஹம்மது நொஹ், தற்போதுள்ள எஸ்.டி.பி.எம் தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டு தவணை முறையிலான தேர்வுகள் அறிமுகப்படுதப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வு முறையை இலகுவாக்கி இன்னும் அதிகமான மாணவர்களை எஸ்.டி.பி.எம் தேர்வு எழுத ஊக்குவிப்பதே  இந்த மாற்றத்திற்கான…

காவல்துறையினர் பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களா?

நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சுந்தர் த/பெ செல்வம் என்ற சிறுவன் காவல்துறையினரால் தடுப்புகாவலில் அடைக்கப்பட்டு மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறான். வலது கண், தலை, கழுத்து, உடம்பு ஆகிய பகுதிகளில் ரத்தம் கட்டும் அளவிற்கு சிறிதும் மனசாட்சியில்லாமல் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.…

1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்

மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய  காப்பார் பொங்கல் "திருவிழாவில்" மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559  லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு …

மலேசிய இந்திய சமுதாயமே மஇகாவை இனியும் நம்பாதே ஏமாறாதே!

1957-ஆண்டு முதல் மஇகாவும் தேசிய முன்னணியும் இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர். துன் சம்பந்தன், டான் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ ஸ்ரீ பழனிவேலு, ஆகியோருடன் நமது முன்னாள் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஒன் , துன் டாக்டர்…

மக்கள் கூட்டணி நம் பெண்களையும் அங்கீகரிக்க வேண்டும்

-நாதன் சதாசிவம் 16/1/2012 மலேசியாஇன்று வலைத்தளத்தில் ஒரு கட்டுரையைப் படித்தேன். மக்கள் கூட்டணி ஆண்டுக் கூட்டத்தில் இந்திய தலைவர்களின் படங்கள் எங்கும் காணப்படவில்லை என்று நண்பர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது அவருடைய ஆதங்கம் மட்டும் இல்லை மாறாக மலேசியாவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களின் மனக்குமுறல் என்றே…

நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும்

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி,…

அன்புடன் செம்பருத்தி ஆசிரியருக்கு!

வணக்கங்களும் வாழ்த்துக்களும். உங்கள் இணையதளத்தைப் சுவிட்சர்லாந்திலிருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மிகவும் சிறப்பான ஆக்கங்கள் என்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு அண்மையில் மலேசியாவில் 01.01.2012 அன்றிற்காக திரு. அரசேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் அட்டையினை பார்த்து மகிழ்ந்தேன். உலகிலே அதிகமக்கள் விடுமுறையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான சிறப்பு நாளை அறிமுகப்படுத்தி…

தேசிய முன்னணி நம் சமுதாயத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது!

[Karanraj Sathianathan] தேசிய முன்னணி இந்திய தலைவர்கள் திரும்பவும் திரும்பவும் இந்த அரசாங்கம் நாம் கேட்பதெல்லாம் செய்கிறது. நஜிப் மிகவும் சிறந்த பிரதமர் என்றும் கூறிவருகிறார்கள். தேசிய முன்னணி அரசாங்கம் நம் சமுதாயதிற்கு நிறைய வேலை, கல்வி, வியாபார வாய்ப்புகளை தருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். இப்பொழுது நமது…

இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!

[- Karanraj Sathianathan] நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின்…

SPM தேர்வில் நடிகர் சிவக்குமார்!

SPM தேர்வில் சினிமா நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேட்கும் அளவிற்கு, சினிமா அவ்வளவு முக்கியமாக மலேசிய தேர்வு ஆணையத்திற்கும் தென்படுகிறதோ? என்று தைப்பிங்கைச் சேர்ந்த திரு.சின்னப்பன் என்பர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு SPM தமிழ் மொழி கேள்வித்தாள் இரண்டில், பக்கம் 8-ல் இப்படியொரு அவலம்…

கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த வரலாற்றை போதிப்பாரா?

மலாக்காவின் வீழ்ச்சியினை ஒரு மலாய் வரலாறு புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:- 1.Perpecahan rakyat melaka disebabkan oleh pertelingkahan yang sering tercetus antara golongan Tamil-islam dan golongan melayu. 2.Tun Mutahir berasal dari Tamil Islam,beliau adalah bapa saudara kepada Sultan Mahmud.…

துணைப் பிரதமர் இந்தியர்களை அவமதிக்கிறார்

[செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்] அண்மையில் பாகோவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வொன்றில் நாடு சுதந்திரமடைந்த இந்த 54 ஆண்டுகளில் பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என துணைப் Read More