இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம், விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். –…
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…
சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து மதிப்பீடு…
வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்! – அனைத்துலக…
தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும். உண்மை நிலை குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி…
ஈழத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற, தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வு!
கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றையதினம் விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் மாவீரர் சு.பா.தமிழ்ச்செல்வன் அவர்களது பத்தாவது வீரவணக்கநிகழ்வு இடம்பெற்றது. நிழ்வில் கலந்துகொண்ட கட்சியின் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. எமது விடுதலைப்போராட்டத்தின் நோக்கம் சிங்கள இனத்தின் மீதோ…
தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும்: சம்பந்தன்
நாட்டில் நீடித்து வரும் தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது நாட்டில் உயர்வானதாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாக கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்…
இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அதிகாரப்பகிர்வு வேண்டும்: மாவை சேனாதிராஜா
இணக்கப்பட்ட வடக்கு- கிழக்கில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேசம் வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலத்தாமதத்தை ஏற்படுத்தாது விரைவாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.…
வரலாறு முழுவதும் அரசியலமைப்பு நடவடிக்கைகளில் பிக்குகளின் முறையற்ற தலையீடு: ராஜித…
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிக்குகளின் முறையற்ற தலையீடுகள் இருந்து வருவதாக அமைச்சரைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். “புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தற்போது எதிர்ப்பவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்பட நேரிடும். சோபித தேரரின் இறுதிக் கிரியையில் பங்பேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்…
பனை, தென்னை மரங்களில் ‘கள்’ இறக்கத் தடை விதிப்பது தமிழின…
“பனை, தென்னை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது, தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார். அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள…
“கார்த்திகை 01” மாவீரர் மாத சிறப்பு பதிவு..!
மாவீரர் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள். மரணத்திலும் வித்தாகி வாழுகின்ற வீரர்கள். தம் இனத்திற்காக இன்னுயிரை ஈந்த இளவல்கள். வெடிகுண்டு சுமந்தவர்கள். விடியலைத் தேடியவர்கள். வீரத்தின் விளை நிலங்கள். எமது தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காக மாவீரர்கள் செய்திட்ட தியாகங்களில் தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள். விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றிலே எமது…
சமஷ்டி மூலம் அதிகாரம் வடக்கு கிழக்கு இணைப்பு – வேண்டுமென…
“பிளவுபடாத பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கையில் சமஷ்டி அரசமைப்பின் மூலம் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “சமஷ்டியால் நாடு பிளவுபடும் என்ற பிழையான கருத்து பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது. சமஷ்டிக் கோரிக்கையை முதலில்…
முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நேற்றுக்காலை இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்பத்தினர் பலரும்…
கனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!
கனடாவில் செயற்படும் தொழில் முகவர்களினால் புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான மோசடியில் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த அமில பெரேரா என்பவரே கனேடிய தொழில் முகவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார். அமில பெரேரா…
இலங்கை : மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் இடையே பதற்ற…
இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கிரான் சந்தையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர். இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை வழக்கம் போல் கூடிய போது சந்தைக்கு அருகாமையில் "இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை"…
அரசமைப்பு உருவாக்கும் பணியில் சர்வதேசம் நேரடியான பங்களிப்பு
புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்தின் நேரடி பங்களிப்பு உள்ளமை அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இலங்கை அரசு உள்நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் நோக்கம் உடையது என்றும், சர்வதேச சட்டத்தை மீறி இலங்கை அரசால் எதனையும் செய்யமுடியாது…
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது:…
“அதிகாரத்தைப் பகிரவும் வேண்டாம், நாட்டைப் பிரிக்கவும் வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்களினால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.” என்று பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தேசிய உரிமைகளுக்கான அமைப்பால் நேற்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு…
இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில் படையினர் நிலை கொண்டிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை விசேட கவனயீர்ப்பு அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். து.ரவிகரனின் கவனயீர்ப்பு…
தமிழ் மக்களை நசுக்க முற்பட்டால், அதற்கு தமிழ் மக்கள் பதில்…
“தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால், அதற்கு தமிழ் மக்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும். அடிப்படை வாதத்திற்குள் சென்று பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது, மேலும் மோசமான இனவாதத்தையே தோற்றுவிக்கும். என்று அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையத்…
இளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில் ஒரே குடும்பத்தைச்…
நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டோம், மன்னித்து கொள்ளுங்கள்’ இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம், யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்த பெண்ணால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தனது தாய் வீட்டாருக்கும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோருக்கு…
தென்பகுதியில் தமிழர் பிரச்சனை
தென்பகுதியில் தமிழர் பிரச்சனை தொடர்பில் ஆதரவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் பாரிய பிரயத்தினத்திற்குள்ளாகுகின்றார்கள்… (கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்) தென்பகுதியில் தமிழர் பிரச்சனை தொடர்பில் ஆதரவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் அங்கு பாரிய பிரயத்தினத்திற்குள்ளாகுகின்றார்கள் என்கின்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு எமது தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்கள் எல்லோரும்…
கொலையாளிகளே புதிய அரசியலமைப்பினை எதிர்க்கின்றனர்: மங்கள சமரவீர
புதிய அரசியலமைப்பினை கொலையாளிகளே எதிர்த்து வருவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 63 இலட்சம் மக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்போரை கொன்றுவிட…
தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “லகர, ளகர, ழகர வேறுபாடுகள் மற்றும் ன, ந, ண போன்றவற்றின் வேறுபாடுகளை சரியாக உள்வாங்கி இப்போது பிள்கைகள் தமிழை உச்சரிப்பதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின்…
சர்வதேசத்தின் பிடிக்குள் இறுகும் இலங்கை அரசு: பப்லோவின் அறிக்கையை வரவேற்கிறது…
“இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயங்களை உள்நாட்டில் முன்னெடுக்கத் தவறினால் அது வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் என்று நாம் முன்னரே கூறியிருந்தோம். இதே சாரப்பட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ வெளியிட்ட கருத்தையும் நாம் வரவேற்கின்றோம். இலங்கை அரசுக்கு சொல்லவேண்டிய விடயங்கள் அனைத் தையும் அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.” – இவ்வாறு தமிழ்த்…
இந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீதிமன்றம்…
இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் தொடர்பிலான வழக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆலயத்தில் பத்தாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் வரையிலான…
























