உங்கள் கருத்து: வழக்குரைஞர்களுடன் மக்களும் ஊர்வலத்தில் செல்ல வேண்டும்

"வழக்குரைஞர்களே நீங்கள் எடுத்தது நல்ல முடிவு. அனைத்து மலேசியர்களும் அந்த ஊர்வலத்தில் வழக்குரைஞர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். பெர்சே-யும் அவர்களுடன் செல்ல வேண்டும்." கூடும் மசோதாவை ஆட்சேபித்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர் இக்குவினோக்ஸ்: "எதிர்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய சட்டம் அல்ல அது. நாம் அதற்கு எதிராக…

சம்சுலின் “இனவாத” கருத்து மீது டிஏபி இளைஞர் பிரிவு அதிர்ச்சி

மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய அரசமைப்பைத் திருத்துமாறு பிகேஆர் இளைஞர் பிரிவு அம்னோவுக்கு விடுத்துள்ள சவாலை டிஏபி இளைஞர் பிரிவு குறை கூறியுள்ளது. பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் விடுத்துள்ள அந்த சவால் 'இனவாத' தன்மையைக் கொண்டது. புத்ராஜெயாவை…

கலாச்சார அதிர்ச்சியில் அம்னோ; பொதுத்தேர்தலுக்கான நாள் நிர்ணயம் பிரதமரின் தனிப்பட்ட…

சிலாங்கூர் மாநில அரசு  மத்திய அரசைப் பின்பற்றி மாநில சட்டமன்றத்தை கலைக்காது  என்று  கருத்துரைத்துள்ள  மந்திரி புசார்  காலிட் இப்ராஹிமை சாடியுள்ள  சிலாங்கூர் அம்னோவின் தொடர்புக்குழு  துணைத் தலைவர் நோ ஒமார் மற்றும் அதன் தேசிய உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரின் கூற்று மிக வேடிகையாகவுள்ளது. மாற்றுக்…

ஜொகூர் பிகேஆர் கூட்டங்களுக்குக்கான அனுமதி ரத்தால் பிரச்னை

ஜொகூரில் அடுத்த சில தினங்களுக்கு இரவில் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்துவதற்காக பிகேஆர் வரைந்திருந்தத் திட்டம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அங்கு  பிகேஆர் அதன் தேசிய மாநாட்டை நடத்தவிருக்கிறது. இன்றிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கான போலீஸ் அனுமதிகள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்…

அமைதிப் பேரணி மசோதாவும் கழுதை கட்டெறும்பானதும்

ஆர்த்தி: கோமாளி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றால் என்ன? கோமாளி: கழுதை எறும்பாக மாறினால் எளிதாக நசுக்கிவிடலாம், கழுதையாகவே இருந்தால் எட்டி உதைக்கும் என்ற நினைப்பில் நமது பிரதமர் நஜிப் தாக்கல் செய்துள்ள அமைதிப் பேரணி மசோதாதான் நினைவுக்கு வருகிறது ஆர்த்தி. ஆர்த்தி, மனிதகுலம் அடிமைத்தனத்திலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுதலைப்…

அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்க என அமைச்சரவை…

2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்து திருத்துமாறு அமைச்சரவை இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுக்கு ஆணையிட்டுள்ளது. மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முக்கியப் பங்காற்றியுள்ளதாக இன்று மாலை பின்னேரத்தில்…

அரசு சேவை விவகாரத்தில் ‘சேதத்தைக் கட்டுப்படுத்தும்’ முயற்சியில் பிகேஆர் இறங்கியுள்ளது

அரசு சேவை அளவைக் குறைப்பதற்கு எதிரான நிலையை பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் அறிவித்துள்ளார். அந்த விஷயம் மீது பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் கட்டுக்கோப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.' சம்சுல் இன்று ஜோகூரில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசியப்…

அஸ்மின்:சிறைகளை உடைத்து அன்வாரை விடுவிப்போம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அவர் சிறை இடப்பட்டால் கிளர்ச்சி மூளும் என்று எச்சரித்தார். இன்று ஜோகூரில், கட்சி காங்கிரசில் கொள்கை உரையாற்றிய அஸ்மின், தங்கள் தலைவரை மீண்டும் சிறையில் தள்ளினால் அவரை…

அம்பிகா: பர்மிய சட்டம்கூட தெரு ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கிறது

2011 அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு, அண்மையில் பர்மிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதேபோன்ற சட்டத்தை விடவும் அடக்குமுறை மிக்கதாக இருக்கிறது என பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். “நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. பர்மா  நம்மைவிட ஜனநாயகத்துக்குக் கூடுதல் இடமளிக்கும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. “மலேசியர்களுக்குக் கூடுதல் ஜனநாயகம்…

ஒரே மலேசியா பொருட்கள் மீது புவா, சுகாதார அமைச்சரை விவாதத்திற்கு…

சில கெடாய் ராக்யாட் சத்து மலேசியாப் பொருட்களின் தரம் மீது எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்குக் கலந்துரையாடலை நடத்தலாம் என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா, சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-க்கு அழைப்பு விடுத்துள்ளார். தாமும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரும்…

அன்வார்: பக்காத்தானின் செராமாக்களை முடக்குவதே மசோதாவின் நோக்கம்

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டதே, பக்காத்தான் ரக்யாட் செராமாக்களின்வழி மக்களுக்கு விவகாரங்களை விளக்குவதைத் தடுப்பதற்காகத்தான் என்று சாடுகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். செராமா அல்லது கலந்துரையாடல் போன்ற கூட்டங்களை நடத்த 30-நாள்களுக்கு முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற வேண்டியிருப்பதாக அவர் கூறினார். “பக்காத்தான் ரக்யாட் எம்பிகள்,…

பினாங்கு அம்னோ ‘நெறிமுறையற்றது, கட்டுக்கோப்பு இல்லாதது’ எனக் குறை கூறப்பட்டுள்ளது

மலாய்க்காரர்கள் அம்னோ தலைவர்களுடைய அரசியலில் ஈடுபடுவதின் மூலம் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதாக பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் சாடியிருக்கிறார். இன்றைய அம்னோ 'நெறிமுறையற்றது, கட்டுக்கோப்பு இல்லாதது' என மாநில டிஏபி மத்தியக் குழு உறுப்பினர் சுல்கிப்லி முகமட் நூர் கூறினார். அது மலாய்க்காரர்கள் முஸ்லிம்கள் ஆகியோரது உரிமைகளைத்…

கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர்

மக்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ள அமைதியாகக் கூடும் மசோதாவை ஆட்சேபிக்கும் பொருட்டு கோலாலம்பூரில் நடத்தப்படும் ஊர்வலம் ஒன்றில் பங்கு கொள்ளுமாறு ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மணி 11.30க்கு அந்த ஊர்வலம் தொடங்கும். வழக்குரைஞர்கள் அரச லேக் கிளப்-பிலிருந்து ( Royal Lake Club)…

சிலாங்கூர் ஜக்காத் நிர்வாகத்தை தாம் குறை கூறியதாக சொல்லப்படுவதை முனைவர்…

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நேற்று நிகழ்த்திய உரை ஒன்றில் சிலாங்கூர் ஜக்காத் நிர்வாகத்தை தாம் தாக்கியதாக கூறப்பட்டதை மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மறுத்துள்ளார். "நான் சிலாங்கூரில் நடப்பு ஜக்காத் நிர்வாகத்தை குறை கூறவில்லை. சுல்தானுக்கு விரிவான அதிகாரங்களை…

அமைதியாகக் கூடும் மசோதாவை பாஸ் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும்

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அமைதியாகக் கூடும் மசோதாவுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. மக்களவை அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்குவதைத் தடுக்கும் பொருட்டு பாஸ் கட்சி நீதித் துறை மறு ஆய்வுக்குக் கொண்டு செல்லத் தயாராகி வருகிறது. பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்…

பாஸ்: மீண்டும் மைகார்ட் மோசடி

குடியுரிமைக்கு மாற்றாக வாக்குகள் என்னும்  மோசடித் திட்டம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறும் பாஸ், கடந்த மாதம் குடியுரிமை வழங்கப்படுவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவரை புத்ராஜெயாவுக்குப் பேருந்துகளில் அழைத்துச் சென்ற அதே கும்பல்தான் இத்திட்டத்தின் பின்னணியிலும் இருப்பதாகக் குறிப்பிட்டது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்…

இப்போது டிஏபி “இழிச்சொற்களை” கொண்டவர்கள் கட்சி

""புதிய தலைமுறை"  டிஏபி தலைவர்கள் அந்தக் கட்சியைக் கீழறுப்புச் செய்து அதனை "இழிச்சொற்களையே கொண்ட கட்சி என்னும் நிலைக்கு" தாழ்த்தி விட்டதாக மசீச மகளிர் பிரிவு கூறுகிறது. தங்கள் தலைவர்கள் பிஎன் சகாக்கள் பற்றிக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதை அனுமதிக்கும் டிஏபி-யையும் அது சாடியது. இவ்வாறு மசீச மகளிர் பிரிவுத்…

இந்தியர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டால் எல்லாம் சரியாகி விடுமா ?

'இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்ற ஈரான் போன்ற நாட்டில் கூட யூதர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அந்த விஷயத்தைக் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்." தேர்தல் நடைமுறைகள் இந்தியர் உரிமைகளை எப்படிப் பறிக்கின்றன? காத்ரின்55: சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம், பேராக், பினாங்கு ஆகியவற்றில் இரண்டு…

அமைதியான கூடுதல் சட்ட மசோதாவை எதிர்த்து சிவில் சமூகப் போராட்டம்

சிவில் சமூக குழுக்கள், அதில் ஜூலை பேரணியில் கலந்துகொண்ட பெர்சே 2.0 உறுப்பினர்களும் அடங்குவர், அமைதியான கூடுதல் மசோதா 2011 க்கு எதிராக கடுமையாகப் போராடப் போவதாக சூளுரைத்தன. சுதந்திரமாக கூடுதலுக்கான போராட்டம் (கேகேபி) என்ற அந்த அமைப்பு அதன் போராட்டத்தை ஒரு சிறிய அளவில் இன்று நாடாளுமன்றத்தின்…

45 ஆண்டுகளுக்குப் பின்னர் அவசர காலப் பிரகடனங்கள் அகற்றப்பட்டன

மூன்று அவசரகாலப் பிரகடங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் சமர்பித்த பிரேரணையை மக்களவை இன்று ஏற்றுக் கொண்டது. அதன் மீதான விவாதத்தின் போது எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தன. இந்தோனிசியாவுடன் பகைமைப் போக்கு நிலவிய காலத்தில் 1964ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட இன்னொரு அவசரகாலம் நடப்பில்…

அமைதியாக கூடும் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் ஆட்சேபம்

அமைதியாக கூடும் மசோதாவை விவாதிக்க மக்களவை தயாராகும் வேளையில் அதன் எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதை ஆட்சேபம் செய்துள்ளனர். அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். அந்த ஆட்சேபக் கூட்டத்தை நடத்திய சிவில் சமூகப் போராளிகளை ஒன்று கூடும் சுதந்திரத்துக்கான…

கேமரன் கிராமவாசிகள்: அமைச்சு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும்

கேமரன் மலையைச் சேர்ந்த கிராமவாசிகள் குழுவொன்று, தங்கள் வீடுகள் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்றதாக தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை உள்துறை அமைச்சிடம் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களின் சார்பிலும் மேம்பாட்டாளர் வீடுகள் உடைப்பதைத் தடுத்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரை மிரட்டியதாக குற்றவியல்…

மஇகா தலைவர் பழனிவேலின் தாயார் காலமானார்

மஇகா தலைவர் ஜி பழனிவேலின் தாயார் லெட்சுமி ஆறுமுகம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92. கோலாலம்பூர் தாமான் மெலாவத்தியில் உள்ள பழனிவேலின் இல்லத்தில் நேற்றிரவு மணி 10.50க்கு லெட்சுமி காலமானதாக பழனிவேலின் பத்திரிக்கைச் செயலாளர் எம் கார்மேகன் கூறினார். லெட்மிக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் பல…