அன்வார்: தடுப்புக்களை மீறுமாறு நாங்கள் ஆணையிடவில்லை

டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலியை உடைக்குமாறு தாமோ அல்லது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியோ ஆணையிடவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார். என்றாலும் தாம் "அந்த முடிவைத் தற்காக்கப் போவதாக" அவர் சொன்னார். ஏனெனில் தடுப்புக்களை அகற்றுவது ஒரு குற்றமல்ல…

‘டாத்தாரான் குழப்பத்துக்கு தூண்டிவிடுகின்றவர்களே காரணம்

சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட போது டாத்தாரான் மெர்தேக்காவில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் பீதிக்கும் தூண்டி விடும் நோக்கத்துடன் செயல்பட்ட ஏஜண்டுகளே காரணம் என சிலாங்கூர் பாஸ் மகளிர் தலைவி பாரிடா அப்துல் கூறுகிறார். வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில்…

மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!

நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில்…

போலீசாரே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நஜிப்

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன," என…

டாத்தாரான் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிக்கப்படும் என அரசாங்கம் அஞ்சியது

டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிப்பதற்கான ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால்  சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணிக்கு அந்தப் பொதுச் சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்தது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாட்டின் சுதந்தரத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக…