கிராண்ட் சாகா டோல் கட்டணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செராஸ்-காஜாங் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரும் மகஜருக்கு கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை டிஏபி தலைமையில் குடிமக்கள் நடவடிக்கைக் குழு இன்று மேற்கொண்டது. செராஸுக்கு அருகில் உள்ள 9வது மைலில் அமைந்துள்ள டோல் கட்டண சாவடியில் அந்தக் குழு கையெழுத்துக்களை திரட்டும்…

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மலேசியாவின் “தங்கச் சுரங்கம்”

"சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் 'கடத்தலில்" குடிநுழைவு அதிகாரிகளும் வேலை வாய்ப்பு முகவர்களும் கூட்டாக இயங்குகின்றனர்."           வில்கிலீக்ஸ்: மனிதக் கடத்தலில் குடிநுழைவுத் துறையும் சம்பந்தப்பட்டுள்ளது ஊழியர்: மாதச் சம்பளம் 1,300 ரிங்கிட்- ஒன்பது ஆண்டுகள் தவணைக்காலத்தைக் கொண்ட பெரோடுவா காருக்கு 300 ரிங்கிட், பெட்ரோலுக்கு…

பெர்னாமா ஊழியரைக் கொன்ற துப்பாக்கிக் குண்டு ஆப்பிரிக்க ஒன்றிய துருப்புக்கள்…

பெர்னாமா தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் நோராம்பைசுல் முகமட் நோரைக் கொன்று, டிவி 3 நிருபருக்கு காயத்தை ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டுகள் ஆப்பிரிக்க ஒன்றியத் துருப்புக்கள் சுட்டவையாகும். இவ்வாறு மேற்கத்திய ஆப்பிரிக்க செய்தி நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. "இந்த வேளையில் உண்மை நிலவரங்கள் தெளிவாக தெரியவில்லை. சூழ்நிலை குறித்து நான் சோமாலிய…

இந்தியப் பிரதமரும் அமைச்சர்களும் தங்கள் சொத்துக்களை அறிவித்தனர்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது 30 அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சொத்துக்களை இன்று அறிவித்துள்ளனர். Read More

கிளந்தான் அம்னோ தேர்தலுக்கு முழு அளவில் தயார்

கிளந்தான் மாநில அம்னோ தனது 14 தொகுதிகளின் தலைவர்களையும் அவர்களுடைய தொகுதிகளுக்கான தேர்தல் இயக்குநர்களாக நியமித்துள்ளது. அதனால் தேர்தல் நெருங்குகிறது என்னும் ஊகங்கள் வலுத்துள்ளன. Read More

உங்கள் கருத்து: நம் நாட்டை குடியேறிகளிடம் விற்ற துரோகிகள்

வாக்குகளுக்காக ஆயிரக்கணக்கான பிலிப்பினோக்களும் இந்தோனிசியர்களும் சபாவில் குடிமக்களாகினர். இப்போது தீவகற்ப மலேசியாவிலும் அது தான் நடக்கிறது.   Read More

அம்னோ இனவாதப் பார்வையில் வரலாறு

"புக்கிட் கெப்போங் அம்னோ காட்டும் மலாய்-எதிரணி-சீனர்கள் என்னும் வாதத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மாட் சாபு அந்த விஷயத்தை தலைகீழாக மாற்றி- அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு மலாய்க்காரர் என்கிறார்."         எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் நீங்கள் சொல்வதை ஒட்டுக் கேட்கலாம் கறுப்பு மம்பா:…

சாபாவில் ஆர்சிஐ அமைய சாத்தியமில்லை

சாபாவின் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீது அரச விசாரணை ஆணையம் அமைவதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணம் ஒன்று தெரிவித்துள்ளது. அது “மகாதிர் கால அரசியல்வாதிகளின்” சுயநலத்தின் காரணமாக உருவான பிரச்னையாம். விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணம், கூட்டரசு அரசாங்கமும் அம்னோவும் அரசியல் ஆதரவுபெறும்…

பேராயர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்களை உறுதி…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டு முழுமை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேராயர் மர்பி பாக்கியம் கேட்டுக் கொண்டுள்ளார். "சக மலேசியர்கள் என்னும் முறையில் நாங்கள் சிறந்த மலேசியாவைக் காணும் பொது நோக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நடைமுறைகள்…

விக்கிலீக்ஸ் தகவலை சபா சபாநாயகர் சாலே மறுக்கிறார்

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கூட்டரசு அரசாங்கத்தை எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் முயற்சி தோல்வி கண்டது மீது தாம் சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை சபா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் சாலே சைட் கெருவாக் மறுத்துள்ளார். "பக்காத்தான் ராக்யாட்டுக்கு அல்லது…

கட்சித்தாவல் ஓர் அருவருக்கத்தக்கச் செயல்

“தவளைகள் அவர்கள் பிஎன் ஆள்களோ பக்காத்தான் ஆள்களோ, அவர்கள் யார் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதால் அவர்களை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.”   விக்கிலீக்ஸ்: செப்டம்பர் 16 என்று அன்வார் கூறியதில் உண்மை உண்டு பெயரிலி_4031: 2008 செப்டம்பர் 16,…

சோமாலியாவில் மலேசியப் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்

சோமாலியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மலேசியப் பத்திரிக்கையாளர், சண்டை நிகழும் சோமாலியத் தலைநகர் மொஹாடிசுவில் ஆப்பிரிக்க ஒன்றிய துருப்புக்களுக்கும் துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையில் சிக்கிக் கொண்டார் என அதிகாரிகள் கூறினர். "ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது மலேசியப் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்",…

எச்சரிக்கையாக இருங்கள்: அவர்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் ஒட்டுக் கேட்கலாம்

"மாட் சாபு அந்த நிகழ்வு குறித்து மாற்று விளக்கத்தை அளித்துள்ளார். புக்கிட் கெப்போங் தாக்குதலுக்கு மலாய்க்காரர் ஒருவர் தலைமை தாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது."       பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது; திசை திருப்புவதாக பிஎன்-னைச் சாடுகிறது பார்வையாளன்: சுதந்திரத்துக்கு பங்காற்றிய அம்னோ அல்லாத…

தேசிய நாளன்று பிரதமர் எங்கே?

கடந்த புதன்கிழமை மலேசியா நோம்புப் பெருநாளையும் தேசிய தினத்தையும் கொண்டாடியபோது பிரதமர் நஜிப் இக்கொண்டாட்டங்களில் காணப்படவில்லை. ஆகஸ்ட் 30 இல் இஸ்தானா நெகாராவில்  பேரரசர் அளித்த அரச ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள், அவரது தேசிய நாள் செய்தியை பேஸ்புக் மற்றும்…

ஹிண்ட்ராப்பின் இன ஒழிப்பு கூற்று “மிகைப்படுத்தப்பட்டது”

ஆளும் பிஎன் கூட்டணி இந்தியர் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக்  கூறுவது  "'மிகைப்படுத்தப்பட்டது" என 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூரக குறிப்பு ஒன்று கூறியது. அதனால் ஹிண்ட்ராப்பின் சட்டப்பூர்வ போராட்டத்துக்கான "பொது மக்கள் அனுதாபம் குறையும்" என அந்தக் குறிப்பு தெரிவித்தது. அந்தக் குறிப்பை வில்கிலீக்ஸ்…

பாஸ்: கெடா “எம்பி”-யை மாற்றும் திட்டம் இல்லை

பாஸ் கட்சி , கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் நோயுற்றிருப்பதால் அவரின் இடத்தில் மற்றொருவரை நியமனம் செய்ய விரும்புகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தியை   மறுக்கிறது. "தமக்குப் பதில் இன்னொருவரை அமர்த்தும் பாஸின் முயற்சியை அசிசான் எதிர்க்கிறார்" என்ற தலைப்பில் த ஸ்டாரில் வெளிவந்துள்ள செய்தியைக்…

செப்.16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்தனர், விக்கிலீக்ஸ்

அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் 2008, செப்டம்பர் 16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது  உண்மைதான் என்று கூறுகிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஆவணம், சாபாவின் 25 எம்பிகளில் பெரும்பாலோர் பிஎன்னைவிட்டு வெளியேறத்…

பிஎஸ்எம் மீதான தேசத் துரோக புலனாய்வை போலீஸ் இன்னும் கைவிடவில்லை

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கு எதிரான தேசத் துரோகக் குற்றச்சாட்டு மீதான போலீஸ் புலனாய்வு இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது. வாக்குமூலம் கொடுப்பதற்காக பெர்லிஸில் உள்ள ஆராவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு திங்கட்கிழமை வருமாறு அந்தக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் அவசர காலச் சட்டத்தின்…

பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது

கம்யூனிஸ்ட்களை வீரர்கள் எனச் சித்தரிப்பதாகக் கூறப்படும் உரையை நிகழ்த்தியதற்காக பிஎன்-னின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவை பக்கத்தான் ராக்யாட் தற்காத்துள்ளது. மாட் சாபு என சுருக்கமாக அழைக்கப்படும் அவர் சொன்ன கருத்துக்களை அம்னோவும் பிஎன் -னும் முற்றிலும் திரித்துக் கூறுவதாகவும் அது சாடியது.…

தொகுதி ஒதுக்கீடு பற்றி பக்காத்தான் தலைவர்கள் பேச மாட்டார்கள்

பக்காத்தான் ரக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதன் தொடர்பில் அறிக்கை விடக்கூடாது என்று மாநிலத் தலைவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். 13வது பொதுத்தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுகளில் சில மாநிலங்கள் முடிவுகாணும் தருவாயில் உள்ளன என்றும்…

அன்வார்: தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு மாட் சாபுவை விளக்குவதற்கு அனுமதியுங்கள்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் குறித்த தமது கருத்து மீது விளக்கமளிப்பதற்கு அனுமதிக்காமல் அவர் மீது அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்கள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் மாட் சாபுவின் விளக்கத்தைச் செவிமடுக்க…

“அன்வார் பயம்” அரசாங்கத்தை வாட்டுகிறது: எதிர்த்தரப்புத் தலைவர்

பிரதமருடைய ஒரே மலேசியா நோன்புப் பெருநாள் திறந்த இல்லை உபசரிப்பு பெர்மாத்தாங் பாவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது "அன்வார் பயம் குறித்த மறைமுக அங்கீகாரம் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் அந்தத் தொகுதி மிக முக்கியமானது என பிஎன் அங்கீகரித்துள்ளதையும் அது உணர்த்துவதாக…

அன்வாரை ஜெயிலில் அடைப்பது பிஎன் பிரச்னைகளைத் தீர்க்காது

"என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்."           விக்கிலீக்ஸ்: என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம் கர்மா: தான் விரும்பும் நீதித்துறை முடிவைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் எதனை வேண்டுமானாலும்…