இலவசக் கல்வி கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலம்

தேசிய உபகாரச் சம்பளத் திட்டமான PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதியை ரத்துச் செய்யுமாறு கோரி 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். மஸ்ஜித் ஜெமாய்க் (Masjid Jamek) எல்ஆர்டி நிலையத்தில் ஊர்வலத்தை தொடங்கிய அந்த மாணவர்கள் ஜாலான் ராஜா லாவுட்டை நோக்கிச்…

கூடுதல் வேகத்தில் செல்லுமாறு பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரத்துக்கு ஆலோசனை

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வதற்காக பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரம் இன்னும் கூடுதல் வேகத்தில் செல்ல வேண்டும் என பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறியிருக்கிறார். பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதற்கான தங்களது வேகத்தை பிஎன் தேர்தல் ஊழியர்கள் அதிகரித்துக் கொள்வதற்கு அந்த…

பிஎஸ்சி அறிக்கை தொடர்பில் பக்காத்தான் எம்பி-க்கள் குறித்து அம்பிகா ஏமாற்றம்

பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் இசி என்ற தேர்தல் ஆணையம், குழுவின் முக்கிய பரிந்துரைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தத் தவறி விட்டது குறித்து பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஏமாற்றம்…

அமைச்சு இலக்கு: 2015ம் ஆண்டுக்குள் 150,000 அந்நிய மாணவர்களைச் சேர்க்க…

2015ம் ஆண்டுக்குள் இந்த நாட்டுக்கு மேற்கல்வியைத் தொடர 150,000 அந்நிய மாணவர்களைக் கவருவதற்கு உயர் கல்வி அமைச்சு இலக்கு வைத்துள்ளது. அவ்வாறு தெரிவித்த உயர் கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் நூர், கடந்த ஆண்டு இறுதி வரையில் இந்த நாட்டில் 96,000 அந்நிய மாணவர்கள் மலேசியாவில்…

பிரதமர் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் குழுக்களுக்கு உத்தரவு

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜோகூர் பயணத்தின் ஒரு பகுதியாக பத்து பகாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஐந்து பேராளர்களை அனுப்புமாறு பத்து பகாட் மாவட்டத்தைச் சேர்ந்த 180 பள்ளிவாசல் குழுக்களுக்கும் உத்தரவிடப்பட்டது. மாவட்ட காதி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஏப்ரல் 2ம்…

வாக்காளர் பட்டியல் மீது வாதத்திற்கு வருமாறு இசி-க்கு Tindak Malaysia…

வாக்காளர் பட்டியல் மீது பொது வாதத்திற்கு வருமாறு இசி-க்கு Tindak Malaysia சவால் விடுத்துள்ளது. வாக்காளர்களுக்குத் தேர்தல் நடைமுறைகளை அறிவுறுத்தும் அமைப்பாக  Tindak Malaysia செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது, தேர்தல்களை நடத்துவது போன்ற விஷயங்களையும் அந்த வாதத்தில் விவாதிக்கலாம்…

அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்கப் படாத மனித அவலங்களும்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்யக்கால் நினைவு நாள் இவ்வாண்டு ஜொகூரில் அடுத்த மாதம் 19ஆம் தேதி (19.05.2012) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்க படாத…

சபாஷ் (Syabas) ஆறு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிவப்பு நடவடிக்கையை…

நீர் விநியோக சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் (Syabas ) நிறுவனம் பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர், கோலா சிலாங்கூர், சபா பெர்ணாம் ஆகிய பகுதிகளில் சிவப்பு குறியீடு அவசர நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. சுங்கை சிலாங்கூர் (SSP2) நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (LRA) மின்சாரத்தை வழங்கும் நடமாடும் (…

தெங்கு அட்னான்: பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல்கள் அம்னோவுக்குக் கிடைத்துள்ளன

அம்னோவின் வேட்பாளர் பட்டியல்கள் அனைத்தும் அம்னோ தலைமையகத்துக்குக் கிடைத்துள்ளன. அந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் வெளியிட்டார். காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 2ம் தேதிக்குள் அனைத்து தொகுதிகளிடமிருந்தும் அந்தப் பட்டியல் கிடைத்து விட்டதாக அவர் சொன்னார். "என்றாலும் அம்னோ தலைமைத்துவத்திற்குச் சமர்பிக்கப்பட்ட …