கியான்வாபி சிவில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்…

கியான்வாபி மசூதிக்கு எதிராக தொடரப்பட்ட சிவில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் இந்த வழக்கை தடை செய்ய முடியாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து கோயிலை தங்களிடம் ஒப்படைக்கக்…

கொரோனா பரவல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிய…

கேரளாவில் கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள் அதிகரித்து வரும் அச்சத்திற்கு மத்தியில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் குடகு மாவட்டம் மடிக்கேரியில்…

நெல்லை, தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) எழுதியுள்ள அக்கடிதத்தில், தமிழகத்தின்…

கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழக தென் மாவட்டங்கள்

அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது நாளாக தத்தளித்தது. குறிப்பாக, தாமிரபரணி கரையோர பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாயினர். மாநகரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்துக்கு…

இந்தியாவில் ஒரே நாளில் 335 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு,…

இந்தியாவில் நேற்று புதிதாக 335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிரிழந்தவர்களில் 4 பேர் சமீபத்தில் ஜேஎன்.1…

டெல்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

டெல்லி இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு ரயிலுக்காக ரீனா (35) என்ற பெண் காத்திருந்தார். அங்கு வந்த மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியில் ரீனா ஏறினார். அதே வேகத்தில் திடீரென வெளியே வந்தார். அதற்குள் ரயில் பெட்டியின் கதவு மூடிக் கொண்டது.…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், 8-வது வாரமாக…

நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட்டோரின் உள்நோக்கம் கண்டறியப்படும் – பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தைத் தீர விசாரிக்கும்படி அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து விவாதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்பைத் திரு. மோடி நிராகரித்தார். சென்ற புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது திடீரென இரு ஆடவர்கள் பார்வையாளர் கூடத்திலிருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர். அவர்கள்…

அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்ட மால்டா சரக்கு கப்பலை மீட்க்கும் முயற்ச்சியில்…

அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மால்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன்…

இந்திய நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட…

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ‘நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல்…

இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல விசா தேவையில்லை

ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை. இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி…

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற அத்துமீறலுக்கு…

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து தனது முதல் கருத்துரையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “லோக்சபாவில் ஏன் அத்துமீறல் நடந்தது? வேலையில்லாத் திண்டாட்டம்தான்…

இந்தியாவுடனான கட்டமைப்பு ஒப்பந்தத்தை திரும்பப் பெரும் மாலத்தீவு

மாலத்தீவில் இருந்து இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, "இந்தியா அவுட்" தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முகமது முய்ஸுவின் அரசாங்கம், அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. ஜூன் 8, 2019 அன்று…

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை தமிழர்கள் 28 பேருக்கு பாஸ்போர்ட்…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக க்யூ பிரிவு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில் அஞ்சலராகப் பணியாற்றும் கோவிந்தராஜ்(64) என்பவர், கும்பகோணம்…

மகாராஷ்டிராவில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டப்பேரவையில் இன்று (டிச.14) தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வறட்சி, பசி அதிகரித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் தற்கொலை மரணங்கள்…

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம்…

கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்

மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘மக்களவையில் இன்று இல்லாத திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

74.1% இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை

கடந்த 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களில் எண்ணிக்கை 76.2 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான உணவைப்…

ஐநா பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக இந்தியா…

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் இன்றுவரை கடும்…

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுப்பது சாத்தியமில்லை

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுப் பது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்தின் 6ஏபிரிவை எதிர்த்து அசாம் சன்மிலிட்டியா மகா சங்கம் (ஏஎஸ்எம்) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. “கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு அசாமில்…

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று வேளச்சேரி பகுதியில் மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியுள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய…

என் மீது தாக்குதல் நடத்த சதி, கேரளா முதலமைச்சர் மீது…

தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக கேரள ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் முகமது…

வளர்ந்த நாடாவதற்கு வழிகளை காண வேண்டும் – பிரதமர் நரேந்திர…

இந்தியாவை வேகமாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளை கண்டறிவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும் என ‘வளர்ச்சியடைந்த இந்தியா-2047’ பயிலரங்கில் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா-2047 - இளைஞர்களின் குரல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.…