மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு!
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை…
அமெரிக்க உளவு விமானம்: ‘இரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு…
தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள்…
ஏமனில் கடும் மோதல் – 17 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி!
ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். உயிருக்குப் பயந்து, பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கிடையே ஏமனில்…
அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது அப்பட்டமான பொய் !
ஒமன் நாட்டுக்கு அருகே வைத்து, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்பது ஒரு அப்பட்டமான பொய் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஆளில்லா விமானம், 43மில்லியன் டாலர் பெறுமதியானது. இதனை 180 மில்லியன் டாலர் பெறுமதியானது என்று குறிப்பிடுவதே முதலில் தவறான செய்தியாகும். இதுபோக…
இமாயல பனிமலைகள் – பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து
இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உளவுப்பார்க்கும் திட்டத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமீபத்திய விண்வெளி ஆய்வுகளையும் ஒப்பிட்டு, கடந்த 40 வருடங்களில் இமாலய பனிமலைகளில் உள்ள பனிப்படலம் உருகுவது இரு மடங்காகியுள்ளது என்பதை…
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரான்: அதிகரிக்கும் பதற்றம்…
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புகிறேன் என்று…
ஹாங்காங்கில் நடப்பது என்ன – அதிகாரத்தை பணியவைத்த மக்கள் போராட்டம்
இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும். இந்த போராட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்தியது இளைஞர்கள். பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதை சமீபத்தில் தாண்டியவர்கள். அவர்கள் எவ்வாறு தீவிரமாக மாறினார்கள்? "மக்களை…
ஜமால் கஷோக்ஜி வழக்கு: ‘சௌதி இளவரசர் விசாரணையை சந்திக்க வேண்டும்’
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிச்சையான மற்றும் நடுநிலையான அடுத்த விசாரணை நடக்கும் என சிறப்பு…
எம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர்…
கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரி…
அமெரிக்கா – இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது…
இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…
முகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து…
ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மோர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67. அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என…
ஹாங்காங்: மக்கள் போராட்டம், மன்னிப்பு கோரிய தலைவர் கேரி லேம்
ஹாங்காங்கில் போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கோரினார் ஹாங்காங் தலைவர் கேரி லேம். போராட்டம் செய்த மக்கள் இந்த மசோதாவை திரும்ப பெறவும் கேரி லேம் பதவி விலகவும் கோரிக்கை விடுத்தனர். 1997ல் இருந்து ஒரு…
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி…
மக்களின் வரிப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா நேதன்யாகுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக…
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம் மற்றும் பிற…
தென்னாப்பிரிக்காவில் 20 பதின்வயது மாணவர்கள் உருவாக்கிய விமானம் தனது முதல் பயணத்தின் முதல் நிறுத்தத்தை அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவை அடைய ஆறு வாரங்கள் ஆகும். ஆயிரக்கணக்கான விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை இணைத்து 20…
முகமத் மூர்சி: நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து…
ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67. நாட்டில் ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட…
மாலியில் இனவெறித் தாக்குதலில் 95 பேர் கொல்லப் பட்டனர்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள டோகன் என்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் புலானி என்ற பிரிவினருக்கும் இடையே அண்மைக் காலமாக இருந்து வந்த மோதல் போக்கு முற்றி திடீரென திங்கட்கிழமை இரவு இனவெறித் தாக்குதலாக மாறியுள்ளது. இதன்போது டோகன் கிராமத்தை முற்றுகையிட்ட சிலர் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர்.…
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு நாம் காரணமல்ல – ஈரான்…
ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்…
செளதி அரேபியா: “போரை விரும்பவில்லை. ஆனால், அபாயங்களை எதிர்கொள்ள அஞ்ச…
ஓமன் வளைகுடாவில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் தாக்கப்பட்டதற்கு இரானை குற்றஞ்சாட்டி உள்ளது செளதி அரேபியா. செளதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்,"…
கஞ்சா பயன்பாடு 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது ஆய்வில் கண்டுபிடிப்பு
மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மதரீதியிலான சடங்குகளின் ஒரு பகுதியாக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழங்கால கல்லறைக்கு…
லிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு மோதலில் 42 பேர்…
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா…
ஹாங்காங் போராட்டம்: சர்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். முன்னதாக, ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தும்கூட மசோதாவை ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார். "எங்கள் நடவடிக்கையில் இருந்த…
ஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!
ஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் டேங்கர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நார்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான…
ஆப்கானிஸ்தானில் 40 தலிபான் தீவிரவாதிகள் பலி!
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறது. அதே போல் பயங்கரவாதிகளும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த…
























