பன்மொழிகளை கற்பவர்களுக்கு மூளை வளர்ச்சி அதிகம்

tamil school childrenகா. ஆறுமுகம். பகுதி 3. இந்த இறுதிப்பகுதியில் மேலும் சில அறிவியல் சான்றுகள் பன்மொழிக்கு ஆதரவாக தரப்பட்டுள்ளன. பன்மொழிகளை கற்றுக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை முழுமையாக் இப்போதே அறிந்து கொள்ள இயலாது. ஆனால், அறிவியல் அடிப்படையில் நல்ல பயன்கள் கிடைக்கும் என்று மட்டும் தெரிகிறது. பன்மொழி பேசும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருப்பதை கண்கூடாக அறிய முடிகிறது.

லண்டனின் மூலை முடுக்குகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று கொண்டாடப்படும் வாடகை கார் ஓட்டுனர்களின் மூளை ஸ்கானில் (scan) கிடைத்த முடிவுகளை மேற்கோள் காட்டினார் தொரோந்தோக்ஸ் யோர்க் பல்கலைகழக உளவியல் ஆராய்ச்சியாளர் எல்லன் இயாலஸ்தாக். அவர்களுடைய மூளையில் இடம் சார் பகுத்தறிவிற்கான பகுதி அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது கண்டறியப்பட்டது.

வயலீன் வாசிப்பவர்கள் மற்றும் மற்ற இசைக் கலைஞர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களது மூளையில் விரலசைவுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியில் வளர்ச்சி காணப்பட்டது. தொடர் பயிற்சிகள் மூளையில் மாற்றங்களை உண்டாக்குகிறதா அல்லது இந்த திறன்களை மூளை கொண்டிருப்பதால் ஒருவர் வாடகை கார் ஓட்டுனராகவோ அல்லது இசை கலைஞராகோ உருவாகின்றனரா என்பதின் காரணமும் விளைவுகளும் இன்னும் புலப்படாமலே உள்ளது என்கிறார் இயாலஸ்தாக்.

சுவீடனின் ஆய்வு

கடந்த ஆண்டு சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் இந்த கோப்பாட்டை ஆய்வு செய்து பார்க்க முடிவு செய்தனர். பன்மொழி சார்ந்த ஆய்வு என்பதால், ஆய்வுக்கு உப்சாலாவில் உள்ள ஆயுதபடையின் மொழிபெயர்ப்பாளர் கல்விசாலையில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

brain-synapses13 மாதங்களில் இவர்களுக்கு பழக்கமில்லாத அரேபிய மொழி அல்லது டரி மொழி கற்பிக்கப்பட்டது. அதே பாட திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவம் அல்லது நுண்ணறிவு இயற்பியல் கற்கும் மாணவர்களும் அந்த காலவரைக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். வேற்று மொழியை கற்பிக்கும் முன் அனைவருடைய மூளையும் ஸ்கேன் செய்யப்பட்டது.

அதே போல், 13 மாதங்களின் முடிவில் மீண்டுமொரு முறை அவர்களது மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. வேற்றூ மொகழிக் கற்ற மாணவர்களில் மூளையில் பின்புற மேட்டில் வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சி சிறப்பாக நினைவாற்றல் மேலாண்மைக்கும் புடிய விசயங்களில் எளிதில் கைதேர்ந்தவராவதற்கும் உதவுகிறது. பெருமூளை புறணி பகுதியில் உயர்ந்த, சீராக பகுத்தறிவு பதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மாணவர்களிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை.

அர்தமுள்ள சத்தம் நரம்பு மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

வடமேற்கு பல்கழகத்தை சேர்ந்த உயிரியல் நிபுணர் நினா கரௌஸ் உச்சந்தலையில் மின்முனைகளைப் பொருத்தி மூளையில் செவிபுலன் பகுதியை ஆராய்ந்தார். இந்த ஆய்வில் இருமொழி பேசுபவர்கள் பேச்சு தொடர்பான ஒலிகள், முக்கிய தொனிகள், தாளங்கள், குழப்பமளிக்க கூடிய சப்தங்கள் போன்றவற்றை எளிதில் ஏறுக் கொள்கின்றனர். “மக்கள் சப்தங்களை அர்தமுள்ளதாக பயன்படுத்தும் போது நரம்பு மண்டலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.” என்கிறார் கரௌஸ்.

பியாலஸ்தோக் இருமொழியாளர்கள் முளையை உபயோகிப்பதில் குறைவான அடர் தன்மையையும், நரம்பியலில் grey matter-யை விட ­white matter-யை அதிகமாக உபயோகிப்பதாக நம்புகிறார். ­white matter நரம்பு கொழுப்பினால் நரம்புகளுக்கு பாதுகாப்பளிக்கின்றது.

B 7மூளையின் முன் மடலிலும், மூளையில் இரண்டு அரைக்கோளங்களிலும் ஆரோக்கியமான நரபு கொழுப்பை ஒரு மொழி பேசுபவர்களை விட இருமொழியாளர்களின் மூளையில் அதிகம் இருக்கிறது என்று அவரும் அவரது சக நண்பர்களும் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. “மூளை அமைப்பிற்குறிய வேற்றுமைகளை இன்றைய நவீன அறிவியலில் கண்கூடாக காண முடிகிறது” என்றார் அவர்.

மூளை வேகமாக செயல்பட

பன்மொழி கல்வி பற்றிய பெரும்பான்மையான வாதங்களால் பன்மொழி தெரிந்த மூளை அதிக செயலாற்றல் கொண்டது என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்கும் கருத்துக்கும் குறைந்தது இரு மொழிகளில் இரண்டு வார்த்தைகளை தேர்ந்தெடுக்க நேர்வது ஒரு பயன் மிக்க பயிற்சியாகும். இதை நுண்ணறிவுசார் விஞ்ஞானிகள் நிலை மாறு பணி என்றழைக்கின்றனர். சாதாரணமாக ஆயிரம் வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது என்போம்.

உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும் போது தொலைப்பேசி அழைப்பு வரும், அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கொம் போது, உங்களை பார்க்க அலுவலகத்திற்கு யாராவது வருவார்கள், அவர்களிடம் பேசிவிட்டு பிறகு தொலைப்பேசியையும், மின்னஞ்சலையும் கவனிப்போம். வழக்கமாக மூளையின் செயற்பாடு ஒரு வழியாக தான் இருக்கும். அதனால் பல வேலைகளை கையாளுவது சிரமம், அதிலும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியற்ற அலுவல்களை கையாளுவது மிகவும் சவால் தான்.

குளறுபடியாக நிஜ வாழ்வில் சவால்களைச் சந்திப்பதில் ஒருவன் எவ்வளவு தெளிவாக உள்ளான் என்பதை கணிக்க சில வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஸ்ட்ரூப் சோதனை. இச்சோதனை ஆரம்பத்தில் திரையில் ஒரு வண்ணத்தில் பெயர் அதே வண்ணத்திலான மையினால் எழுதப்பட்டிருக்கும். இந்த கட்டத்தில்  காட்டப்படும் வண்ணத்தை கூறவோ அல்லது அதை குறிக்கும் விசையை அழுத்தவோ பணிக்கப்பட்டிருக்கும். இந்த பணியை அநேகமாக அனைவராலும் செய்துவிட முடியும்.

எளிய சோதனை நீங்களும் செய்யலாம்

அடுத்த நிலையில் ஒரு வண்ணத்திற்கான பெயர் வேறு வண்ண மையினால் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக ‘மஞ்சள்’ என்ற சொல் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் படிக்காமல், அது எழுதப்பட்டிருக்கும் மையின் வண்ணத்தை கூறவேண்டும்.

strop testஇது நினைப்பதை விட கடினமான பணியாகும். இங்கே தரப்பட்டுள்ள படத்தில் உள்ள எழுத்துக்களை படிக்காமல் நிறத்தை மட்டும் சொல்லுங்கள் பார்கலாம்! பெரும்பாலும் உலக அளவில் பன்மொழி பேசுபவர்கள் ஒரே மொழியை பேசுபவர்களை விட குறைவான பிழைகளுடன் இந்த பணியை இலகுவாக செய்து முடித்து விடுகின்றனர்.

இந்த ஆய்வு நடுதர வயது பன்மொழியாளர்களின் மூளை பயன்பாடு உச்சத்தில் இருப்பதை  மட்டும் கட்டவில்லை மாறாக பன் மொழி பேசும் குழந்தைகளும், வயோதிகர்களும் சமமான நுண்ணறிவு உள்ளது, அல்லது பன்மொழி அற்றவர்களிடம் முழுமை பெறாமலோ, நழுவவோ தொடங்கியுள்ளது எனக்காட்டுகிறது.

பல பணிகளை  மாறி மாறி செய்ய நேரிடும் போது இழக்கும் செயல்திறனை global switch cost. பல வேலைகளை ஒரே நேரத்தில் எல்லோருமே செயல்திறனை மெதுவாக்குவர் அல்லது சில தவறுகளைச் செய்யும் வாய்ப்புள்ளது, ஆனால், இப்படி பல வேலைகளைச் செய்யும் போது பன்மொழியார்களின் வேலையில் தோல்விகள் குறைவாகவே உள்ளது என்கிறார் பியாலஸ்தோக்.

சாத்தியமில்லை என்பதை புறம்தள்ளி விட்டு ஆய்வுக்கு வெளியே வாழும் மக்களின் செயல்திறன் கூடினால், ஒரே மொழி மட்டும் அறிந்த மாணவர்கள், நணபர்களிடையே போட்டிகள் அதிகரிக்கும்.

போட்டியாற்றல் உண்டானல் திறமை வெளிப்படும்

போட்டியாற்றல் இலகுவாக மதிப்பிட முடிந்ததால் பெரியவர்களிடையே  பன்மொழி ஆற்றலின் முக்கியத்துவம் அதிகமாகிறது. Universiti of Kentucky-யை சேர்ந்த புலனுணர்வு சார்ந்த நரம்பியல் விஞ்ஞானி பிரியன் கோல்ட் 60 வயதிலிருந்து 68 வயதிற்குட்பட்ட முதியவர்களிடம் நிலைமாறு பணியைப் பற்றிய ஆய்வொன்றை நடத்தினார். இருமொழியாளர்கள் ஒரே மொழி பேசுபவரை விட அதிக வேகமாகவும், நுட்பமாகவும் செயல்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் வேலை செய்வதை காந்த அதிர்வு அலை வரைவு கருவியின் மூலம் ஸ்கேன் செய்து பார்த்த போது இருமொழியாளர்களின் மூளை குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மொழி பேசுபவர்களின் மூளையை விட சுறுசுறுப்பாக செயல்படுவதை தவிர மற்ற பகுதிகளில் குறைவாகவே செயல்பட்டது.

அதிகமாக செயல்படுகிறது என்றால், மூளை கடினமான வேலைகளைச் செய்கிறது என்று அர்த்தம். எனவே, வயோதிகர்கள் இளைஞர்கள் போலல்லாமல் தங்களுடைய மூளை அதிக கடினமாக உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆனால், இருமொழி பேசும் முதியர்கள் இதை குறைவாகவே செய்கின்றனர்’ என்கிறார் கோல்ட். இது உண்மையில் அதிக நன்மை தரக் கூடியது தான்.

குழந்தை முதலே பன்மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

Multilingualismபியாலஸ்தோக் வயது சார்ந்து புலனுணர்வு குறைவைப் பற்றி ஆய்வு நடத்தியுள்ளார். இருமொழியாளர்கள் முதுமையினால் வரும் மறதி நோயை சராசரி 4.1 வருடங்கள் தள்ளி போடுகின்றனர். almizheimer’s உள்ளவர்களுக்கு இது 5.1 வருடங்கள் தள்ளி போடப்படுகிறது. அதனால், ஒரே மொழியைப் பேசி பழகிய நடுத்ர வயதினர் ஒருவர் இதற்கு மேல் இன்னொரு மொழியைக் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு இருமொழியாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளும் நடந்துவிடும் என்றால் அது சாத்தியமில்லை.

பொதுவாகவே பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இலகுவாக எந்தவொரு விசயத்தையும் கற்றுக் கொள்வர். எனவே சிறு குழந்தையிலிருந்தே பன் மொழி பயன்பாட்டை பழக்கப்படுத்துவது தான் சாத்தியப்படும் என்கிறார் கோல்ட். நடுதர வயதிற்கு மேல் வேறோரு மொழியைக் கற்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவதற்கு ஒரு வழி என்றும் அவர் கூறினார்.

யூட்டா பள்ளிகளில்பன்மொழிக் கவி பயிலும் பிள்ளைகள் மூளையின் சக்தியும், அவர்களது மொழி ஆளுமையும் தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது. இத்திட்டம் ஆரம்பித்ததிலிருந்து முன்னணியில் இருக்கும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களில் முன்னேற்றமும் பன்மொழி கல்வி வழங்கும் கல்விகூடங்களில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்க பலர் விரும்புவதற்கு காரணமாக உள்ளது. இதை நிறைவு செய்ய ஒவ்வொரு ஆண்டும் புதியதாக 20 முதல் 25 பள்ளிகளில் இருமொழிக் கல்வியை புகுத்த திட்டமிட்டுள்ளனர்.

யூட்டாவில் உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த இருமொழி வாழ்க்கை பல மகிழ்ச்சிகளைத் தந்துள்ளது. “அவர்கள் என்னை அணைத்துக் கொண்டது என்னை நெகிழ்த்தி விட்டது’ என்கிறார் Morning Side ஆரம்ப பள்ளியில் பிரான்சு மொழி கற்றுக் கொடுக்க தொடங்கும் முன் கல்லூரிகளிலும், உயர்கல்விகூடங்களிலும் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்த பிரான்சு ஆசிரியை ஜோர்ஜியா கீலிங். என்னுடைய மாணவர்கள் பள்ளி சபைக் கூடலில் பிரஞ்சில் பாடியது என் கண்களை கலங்கி விட்டது என்றார். இதுவே மூன்றாம் ஆண்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சான்று. வேறு மொழியின் அழகையும், அந்த மொழியின் பாடல் வரிகளையும் கற்றுக் கொள்வது அவர்களது சித்தனையை மேம்படுத்துகிறது என்றார். முற்றும்