என்னை சிறையில் அடைப்பார்கள் கமல் பரபரப்புத் தகவல்

kamalhassan_001‘உத்தம வில்லன்’ படத்தில் கடவுளை பற்றி விமர்சித்திருப்பதாக கமல் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது இந்து அமைப்பு.

அதற்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்பு ஒன்றும் குரல் கொடுத்ததுடன் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கமல் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை சிறையில் அடைப்பார்கள் என்று ஷாக் தகவல் வெளியிட்டார்.

அவர் கூறியது:என் மனதில் ஒரு கதை இருக்கிறது. பிரபல அரசியல்வாதி மற்றும் சாதி சங்க தலைவர் இருவருக்கும் இடையேயான தெளிவற்ற ஒரு ஒப்பந்தம் பற்றிய கதை. அதற்கு ‘உள்ளேன் அய்யா’ என டைட்டிலும் வைத்திருக்கிறேன். அப்படத்தை நான் உருவாக்கினால் நிச்சயம் நான் ஜெயிலில் அடைக்கப்படுவேன்’ என்றார்.

– cinema.dinakaran.com