நடிகர் சிம்பு, அனிருத்தை கைது செய்ய சென்னை விரைந்த கோவை பொலிசார்

simbu_anirudh_002நடிகர் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய கோவை பொலிசார் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்து, நடிகர் சிம்பு எழுதி பாடியதாக இணையதளத்தில் ஒரு பாடல் வேகமாக பரவி வருகிறது.

இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், கோவையில் மாதர் சங்கத்தினர், பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றியதாக சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்துள்ளனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய கோவை பொலிசார் சென்னைக்கு வந்துள்ளனர்.

இன்று சிம்புவை பொலிசார் கைது செய்வார்கள் என்றும் வெளிநாட்டில் உள்ள அனிருத் திரும்பி வந்ததும் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

-http://www.newindianews.com