செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு பல ஆயிரம் பேர் இறந்த விவகாரத்தை திசை திருப்பவே நடிகர் சிம்பு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மூத்த வழக்கறிஞர் இதுபற்றி கூறுகையில், சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு, விசாரணைக்கே உகந்தது இல்லை.
மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தால் பல மாதங்களுக்குப் பிறகுதான், வழக்குப்பதிவு செய்யப்படும்.
ஆனால், சைபர் கிரைம் பொலிசார் புகார் பெற்ற அன்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற புகார்களை மகளிர் காவல்நிலையத்தில்தான் விசாரிக்க வேண்டும்.
ஏன் இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடிய வழக்கை சைபர் கிரைம் விசாரிக்க வேண்டும்?
அவர் பாடிய பாடல் பற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. அதற்காக தீவிரவாதியை தேடுவதுபோல பொலிசாரின் நடவடிக்கைகள் அமைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரிவுகளின் படி உடனடியாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியமோ, பாஸ்போர்ட்டை முடக்க வேண்டிய தேவையோ இல்லை.
சர்ச்சைக்குரிய பாடலை தான் இணையதளத்தில் வெளியிடவில்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
எனவே, திருடி வெளியிட்ட நபர்தான் இதில் கைது செய்யப்பட வேண்டும்.
இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டது சிம்புதான். அவரது தந்தைதான் புகார் கொடுத்துள்ளார்.
அதனால், அந்த புகார் மீதுதான் வழக்குப்பதிவு செய்து பாடலை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் சட்டப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்வது, அவரை தேடுவதாக அறிவிப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னைப் பொறுத்தவரை செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு பல ஆயிரம் பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த விவகாரத்தை திசை திருப்பவே, தமிழக அரசும், உளவுத்துறையும், சென்னை பொலிசாரும் இணைந்து இந்த விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளதாக சந்தேகப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com
மாட்டி கொண்டன் ஒரு தமிழன். மன்னிப்பு தமிழனக்கு பிடிகாத வார்தை போலும். எல்லோரும் சொல்கிறார்கள் மன்னிப்பு கேட்டு விடு என்று அனல் அடம் பிடிக்கிறார் சிம்பு அவரின் அப்பா அம்மா எல்லோரும்
தமிழரை தமிழன்தான் கொள்வான் தெரியாதா,நாராயண நாராயண.
இவனுங்கதான் தலையில வெச்சுகிட்டு தாங்குரானுங்க்களே,ஆம்பளைங்க ஆம்பளைகளை மதிக்கணும்,பெண்கள் திருமணதிற்கு முன் செக்ஸ் பண்ணலாம் சொன்னவர்கள் தமிழ்நாட்டு பெண்கள்தானே குஷ்பு ராதிக கமல் சகோதரி போன்றோர்,
சிம்பு துணிந்து சரண் அடைந்து வாக்கு மூலம் கொடுப்பதே தீர்வு தமிழர் ஆதரவு அட்ராலும் அம்மாவழி பெருமை சேரும்,வாழ்க நாராயண நாமம்.
யாரு இந்த சிம்பு ??? யாரு இந்த ராஜேந்தர் ??? எனக்கு தெரிந்த ஒரே நடிகர் ,தமிழ் மொழியை தன் படங்களில் அழகு பார்த்தவர் ,தமிழ் மொழிக்கு முதல் மரியாதை கொடுத்தவர் ,தன் படங்களில் கொச்சை வார்த்தைகளை பயன் படுத்தாமல் அழகான தமிழ் வார்த்தைகளை கொண்டு பேசி நடித்தவர் ,,புரட்சி தலைவர் ,இதய தெய்வம் ,ஏழைகளின் கடவுள் Mg ராமசந்திரன் ஒருவர்தான் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்