ரஜினிக்கு ஆதரவளித்த பிரகாஷ்ராஜுக்கு தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பு

கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலம். சமீபத்தில் அவர் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை ட்விட்டரில் வரவேற்றார்.

ஆனால் இதற்குமுன் கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘கர்நாடகாவை கன்னடன் தான் ஆளவேண்டும்’ என ஆக்ரோஷமாக பேசினார்.

ஆனால் தற்போது கன்னடரான ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பேன் என கூறுவதை பிரகாஷ் ராஜ் வரவேற்கிறார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற் கருத்தை எதிர்கிறார்.

இப்படி இரட்டை நிலைபாடு ஏன் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம், நீட், விவசாயிகள் போராட்டம் என இதுவரை நடந்த எந்த போராட்டத்திற்கும் ரஜினி குரல் கொடுக்காத நிலையில், தற்போது பதவிக்காக தமிழக மக்கள் தனக்கு ஆதரவு தரவேண்டும் என கேட்கிறார் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வருவது குறிப்பிடத்தக்கது.

-cineulagam.com