உலக அளவில் மலேசியாவின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட எப்பிசிக்கு 20 மில்லியன்…

அரசாங்கம், 2007 தொடங்கி மூன்றாண்டுக்காலத்துக்கு ஊடக ஆலோசனை நிறுவனமான எப்பிசி மீடியாவுக்கு 19.6மில்லியன் இரோ வழங்கியது. அது “தொடர்புத்துறையில் ஆலோசனைக்காகவும் சேவைகளுக்காகவும் அறிவுரைகளுக்காகவும்” கொடுக்கப்பட்ட கட்டணம் என்று பிகேஆர் பத்து தொகுதி எம்பி தியான் சுவாவுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த மறுமொழ்யில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டிருந்தார். “அந்நிறுவனத்துடன்…

இசா பெல்டா கூட்டுறவுத் தலைவராக தகுதியில்லையா?

இசா சமட், பெல்டா குடியேற்றவாசிகள் கூட்டுறவு(கேபிஎப்)த் தலைவராக நியமனம் செய்யப்பட்டது ‘சட்டவிரோதமானது’ என்றும், அவருக்கு அதில் உறுப்பியம்பெறும் தகுதிகூட இல்லை என்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் கூறுகிறார். அந்தத் தோட்டத்தொழில் நிறுவனத்தின் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டிப் பேசிய சைபுடின், கூட்டுறவின் விதிமுறைகளைக் கருத்தில்கொள்ளாது கேபிஎப் இயக்குனர் வாரியம்…

டிஏபி: தேர்தல் ஆணைய விதி முறை திடீரென மாற்றப்பட்டதால் வாக்காளர்…

இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்கான விதிமுறை திடீரென மாற்றியிருப்பது குறித்து டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த புதிய விதிமுறை 'நியாயமற்றது' என்றும் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் தனது முயற்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அது கூறியது. திடீரென் விதிமுறை மாற்றப்பட்டதால் 500 புதிய பதிவுகள்…

தீபாவளிக்கு முதல் நாளும் நாடாளுமன்றம் கூடுவது மீது அதிருப்தி

தீபாவளிக்கு முதல் நாளன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் அக்டோபர் 26ம் நாள் 'திறந்த இல்ல உபசரிப்பை' நடத்துவதற்கான தங்களது ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாள் நடத்தப்படும் முன்னோர்…

பெர்சே விசாரணை: “போலீஸ், மாது ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது”

பெர்சே 2.0 பேரணி தொடர்பான பொது விசாரணை தொடங்கியுள்ளது. ஜாலான் துன் சம்பந்தனில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் போலீசார் மாது ஒருவரை முரட்டுத்தனமாக தரையில் தள்ளியதை தாம் பார்த்ததாக சாட்சி ஒருவர் கூறியிருக்கிறார். கென்னத் சான் வென் சின் என அடையாளம் கூறப்பட்ட அவர், விசாரணையை…

“நீதிமன்றங்கள் குடிமக்கள் அல்லாமல் வேறு யாரைப் பாதுகாக்கின்றன?”

"அரசாங்கம் நமது பணத்தை செலவு செய்கிறது. அதன் விவரங்களை சொல்ல மறுத்தால்  விவரங்களை வெளியிடுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு நீதியை நிலை நிறுத்த முடியும்." நிதிகளைக் கண்காணிக்க எம்பி மேற்கொண்ட முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது அபில்: சுங்கை சிப்புட் எம்பி, சுங்கை சிப்புட் மக்களைப் பிரதிநிதிக்கிறார். ஆனால் அந்தத் தொகுதிக்கான…

பிஎஸ்எம் ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் விடுதலை செய்யப்படவில்லை

மலேசிய சோசலிசக் கட்சியின் 24 ஆர்வலர்களை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது ஆனால் விடுதலை செய்யவில்லை. இவர்கள் அனைவரும் இசா சட்டம் மற்றும் சமுதாய மன்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவர்களுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருந்த இன்னும் அறுவர் மீதான தீர்ப்பு அக்டோபர் 28…

ஹுடுட் விவகாரத்தை முஸ்லிம் அல்லாதாருடன் விவாதியுங்கள் என பாஸ் கட்சிக்கு…

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் பாஸ் கட்சி, கூட்டரசு அரசியலமைப்பையும் கட்சியின் அமைப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என அந்தக் கட்சிக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. கூட்டரசு அரசியலமைப்பை பின்பற்றுவதாக அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. அதில் ஹுடுட் சட்ட அமலாக்கமும் அடங்கும் என பாஸ் ஆதரவாளர்…

இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் “படிப்பை பாதியில் கைவிடும் மாணவர் விகிதம்-9.42%”

2006ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடையில் தேசிய அல்லது தேசிய வகை இடைநிலைப்  பள்ளிக்கூடங்களில் 10 மாணவர்களுக்கு ஒருவர் படிப்பை பாதியில் கைவிடுவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் அந்த விகிதம் 1.32 விழுக்காடாகவும் இடைநிலைப்பள்ளிகளில் அந்த விகிதம் 9.42 விழுக்காடாகவும் இருப்பதாக கல்வித் துணை அமைச்சர் வீ…

அன்வார்: பிரதமருடைய வளர்ச்சி ஆரூடங்களுக்கு ஆதாரமில்லை

நஜிப் நிர்வாகம் 2012ம் ஆண்டுக்கான வளர்ச்சி ஆரூடங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். பல முக்கிய ஆய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ள ஆரூடங்களுக்கு மாறாக அவை அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார். உலகப் பொருளகம், மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம், ஆர்எச்பி ஆகிய…

ஹரப்பான் கம்யூனிட்டி சுல்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது

விருந்து நிகழ்வு ஒன்றில் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை சோதனைகள் நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த அறிக்கைக்கு அந்த விருந்தை ஏற்பாடு செய்த ஹரப்பான் கம்யூனிட்டி அமைப்பின்  வழக்குரைஞர் அன்னி சேவியர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். "நாங்கள் அந்த…

ஜயிஸ்-தேவாலயம்: சுல்தான் அறிக்கை மீது ஆயர் கவலை அடைந்துள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மய்யத்தில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை மதம் மாற்றியதாக கூறப்படுவது தொடர்பில் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை அறிக்கை மீது சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கை " பல அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில்" அமைந்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ…

சுல்தான்: ஜாய்ஸ் சோதனை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரம்…

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, ரமலான் மாதத்தின்போது டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் (டியுஎம்சி) நடைபெற்ற ஒரு நிகழ்வில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கூறினார். என்றாலும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவியலாது என்று ஊடகங்களுக்குத் தொலைநகல்வழி…

எம்பிகளின் உத்தேச அலவன்ஸ் உயர்வு இரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் மற்றும் சலுகைகளை அதிகரிப்பதற்குச் செய்யப்பட்ட பரிந்துரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாற்றரசுக் கட்சியினர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக  பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் தெரிவித்தார். எனவே, அதைத் தாம் மீட்டுக்கொண்டதாக நஸ்ரி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட…

மனோகரன்மீதான நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது ஒரு தந்திரம்

டிஏபி எம்.மனோகரனுக்கு விதித்த ஆறுமாத இடைநீக்க நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது ஒரு தந்திரம் என்று முன்னாள் பிகேஆர் உறுப்பினர் சுல்கிப்ளி நோர்டின் வருணித்துள்ளார். தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டதாம்.   “இந்நடவடிக்கை டிஏபி உண்மைகளைத் திரித்துக்கூறும் அரசியலைப் பின்பற்றுவதையும் மற்ற இனத்…

தொழிலாளர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் மீது கேஎல்-ஜாகார்த்தா பேச்சு

இன்றும் நாளையும் கோலாலம்பூரில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில்  நடைபெறும் பேச்சுகளில் புலம்பெயர்ந்துவரும் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இருதரப்பு ஒத்துழைப்பு மீதான கூட்டு ஆணைய (ஜேசிபிசி) த்தின் அந்த 11வது கூட்டத்தில்,கடல், நில எல்லைகளை நிர்ணயம் செய்தல்மீதான பேச்சுகளின் முன்னேற்றம்…

“நானும்தான் கண்ணீர் விட்டேன்”

" நாட்டின் அதிகரித்துவரும் கடன்சுமையைக் குறைக்க நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்குமே, அதை எண்ணி அழுதேன். என் குழந்தைகளும் இந்தக் கடன்சுமையைக் குறைக்க பாடுபட வேண்டியிருக்குமே, அதை எண்ணி அழுதேன்."       பிரதமர்: எனக்கு நன்றி தெரிவித்த ‘அவர்களின் கண்களில் கண்ணீரை’க் கண்டேன் குய்கோன்போண்ட்:…

நிதிகள் மீது எம்பி எழுப்பிய கேள்வியை நீதிமன்றம் நிராகரித்தது

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமார் தமது தொகுதிக்கு அரசாங்கம் வழங்கும் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மீது எழுப்பிய கேள்வியை முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் எங்கே போகிறது என்பதை வெளிப்படைத் தன்மை அடிப்படையில் அரசாங்கத்தை கண்காணிப்பதற்கு நீதிமன்றம் ஒரு வழியாக…

நமக்கு இவ்வளவு பெருத்த பிரதமர்துறை தேவையா?

 "பிரதமர் துறையின் அளவும் ஆண்டுதோறும் அதற்கு செலவு செய்யப்படும் தொகையும் நம்மை திகைக்க வைக்கிறது."         என்றும் வளரும் பிரதமர் துறை எடை குறைகிறது எஸ்எம்சி: மற்ற அமைச்சர்களுடைய வேலைகளைச் செய்ய பிரதமர்துறையில் பல பிரிவுகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைத்துள்ள வேளையில்…

லீனாஸ் தேர்தல் பிரச்னையாக்கப்பட வேண்டும், அம்பிகா

மக்கள் எதிர்கொள்ளும் லீனாஸ் மற்றும் இதர சுற்றுச்சூழல் இடர்பாடுகளை ஒரு தேர்தல் பிரச்னையாக்க வேண்டும் என்று பெர்சே 2.0 இன் தலைவர் அம்பிகா கேட்டுக்கொண்டார். "மக்கள் இதனை ஒரு தேர்தல் பிரச்னையாக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளிடம் லீனாஸ் குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்க வேண்டும்",…

பிஎஸ்சியை பெர்சே தலைவர் என்ற முறையில் சந்திப்பேன், அம்பிகா

பெர்சே 2.0 இயக்கம் சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தாம் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அவ்வியக்கத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திபேன் என்று அம்பிகே சீனிவாசன் வலியுறுத்தினார். "என்னைப் பொறுத்தவரையில், நான் பிஎஸ்சியை சந்தித்தால், நான் அவர்களை பெர்சே 2.0 வின் தலைவர் என்ற முறையில்தான்…

போலீசார் 2,000 பேர் பங்கேற்ற “பசுமைப் பேரணியை” நிறுத்தினர்

பசுமை ஒருமைப்பாடு 109 என்ற தலைப்பைக் கொண்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக ஈராயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குவாந்தானில் உள்ள தாமான் கெலோராவில் இன்று ஒன்று திரண்டனர். தங்களது சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுவதால் மருட்டலுக்கு இலக்காகி இருக்கும் சமூகங்களுக்கு ஆதரவு காட்டும்வகையில் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ் தலையீடு…