முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன், 2022-ஆம் ஆண்டில் நிறுவனம் ஒன்றுக்கான வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளின் மீது இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். TYKB Engineering Sdn…
நாடற்ற மலேசியருக்கு குடியுரிமை இயல்பாகவே கிடைக்க வேண்டும்
நாடற்ற மலேசியர்கள்- பிறப்புச் சான்றிதழ் அல்லது நீலநிற மைகார்ட் வைத்திராதவர்கள்-வெளிநாட்டவர் அல்லர். எனவே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறது பிகேஆர். இன்று கிள்ளான் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குப் பின்னர் இவ்வாறு கூறிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அந்த…
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்த ‘ஆட்டிறைச்சித் துண்டு ஹிஷாமை’ GMI…
கமுந்திங் தடுப்பு மய்யத்தில் விடுதலை கோரி இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டக் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்துள்ள உள்துறை அமைச்சரது நடவடிக்கை பொறுப்பற்றதாகும் என GMI என்ற இசா எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது. "இதற்கு முன்னதாக உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுடைய தேர்வு என ஹிஷாமுடின்…
எதிர்மறையான இந்தோனிசிய செய்திகளுக்கு அன்வாரே காரணம் என்கிறார் அகமட் ஸாஹிட்
இந்தோனிசிய ஊடகங்களில் மலேசியாவை பற்றி எதிர்மறையான தகவல்கள் வந்து கொண்டிருப்பதற்கு Read More
2 மில்லியன் ரிங்கிட் ஊழலுக்கு எம்ஏசிசி அதிகாரிக்கு சிறைத்தண்டனை, அபராதம்
எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை சேர்ந்த உதவி சூப்பரிடெண்ட் ஒருவருக்கு 2.275மில்லியன் ரிங்கிட் சம்பந்தபட்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மோகன் என்பவருக்கு ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்கானிஸ் தே அஸ்மான் தே…
தலாம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை பற்றி சிலாங்கூர் மந்திரி புசார்…
தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் சம்பந்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை விவரங்களை திங்கட்கிழமை Read More
நஜிப்: பக்காத்தானின் மூன்று தீய போதனைகள்
மாற்றரசுக் கட்சிகள் மக்களுக்கு தீயனவற்றை-சமயத்துக்குப் புறம்பானவற்றைக்கூட கற்றுத்தர முனைவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அவற்றுள் மூன்று,விசயங்கள் தெளிவாக தெரிபவை என்றாரவர்.கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்கிறார்கள், நற்செயல்களை மறந்திடலாம் என்கிறார்கள்,வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். “கடந்த பொதுத் தேர்தலின்போது(மாற்றரசுக் கட்சிகள்) பல வாக்குறுதிகளை அளித்தார்கள்.(சில…
இன வேறுபாடுகளுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தை மலேசியா அங்கீகரிக்க வேண்டும்
இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து விதமான இன வேறுபாடுகள் அகற்றப்படுவது மீதான அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தை பல அரசு சார்பற்ற அமைப்புகள் கேட்டுக்கொண்டன. "ஐசெர்ட் இப்போதே அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்ற பரப்புரையை நேற்று தொடக்கி வைத்த பின்னர் மெனாரா பிகேஎன்எஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…
செல்கேட்: பிஜே ஊராட்சித் திட்டம் 2-ஐ ரத்து செய்க
அரசு இதழில் வெளியிட்டுள்ள பெட்டாலிங் ஜெயா ஊராட்சித் திட்டம் 2(பிஜேஎல்பி2) சட்டத்தை அனுசரித்துச் செல்லவில்லை என்பதால் ரத்துச் செய்யப்பட வேண்டும் என திறமை,பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மீதான சிலாங்கூர் தேர்வுக்குழு (செல்கேட்) கூறியுள்ளது. “மாநில சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி அதை ரத்துச் செய்யும் உரிமை மாநில அரசுக்கு உண்டு”, என…
அல்தான்துயா கொலை: கொலையாளிகளின் முறையீடு அக்டோபருக்குத் தள்ளிவைப்பு
மங்கோலிய நாட்டுப் பெண்ணான அல்தான்துயா ஷாரிபூவை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் அதிரடி நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீடு மீதான விசாரணை அக்டோபர் 31க்கும் நவம்பர் 1-க்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அம்முறையீடு முதலில் அக்டோபர் 27, 28-இல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபடவிருந்தது. குற்றவாளிகளில்…
“என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”
‘மகாதிரிசம்’ என்று கூறப்படுவதைப் புறந்தள்ளிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மாற்றரசுக்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் தம்மைத் திரும்பத் திரும்பத் தாக்கிக் கொண்டிருந்தால் அது அவரையே திருப்பித் தாக்கும் என்று எச்சரித்தார். “மகாதிரிசம் என்று எதுவுமில்லை.நான் நாட்டுக்குச் சேவை செய்தேன். அவ்வளவுதான். மலேசியக் குடிமகன் என்ற…
ஹிண்ட்ராப் லண்டன் வழக்கு நமது முப்பாட்டனார்களின் பொற்பாதங்களுக்கு சமர்ப்பணம்
-பொ. வேதமூர்த்தி, தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 5, 2012. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்களை அவர்களின் தாய், தந்தை, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்ற அவர்களின் உறவுகளிடமிருந்து ஈவு, இறக்கம் இன்றி வேரோடு பிடுங்கி, ஓடித்திரிந்த வீதிகள், நீந்தி மகிழ்ந்த…
மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கான இடங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன?
கடந்த திங்கள்கிழமை துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான மொகைதின் யாசின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் பயில்வதற்கு இந்திய மாணவர்களுக்கு 557 இடங்கள் ஒரே ஒரு முறைதான் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாண்டு பெப்ரவரில் பிரதமர் நஜிப் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல் 1000 இடங்கள் கொடுக்கப்படும்…
அம்னோ இளம் உலாமாக்கள் ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை வரவேற்கிறார்கள்
அம்னோவின் இளம் உலாமா செயலகம், ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறது. அதன் தலைவர் பாதுல் பாரி மாட் யஹயா, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்னும் இரண்டு மூன்று நாள்களில் ஜோகூர் அம்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சினார்…
மெட்ரிக்குலேசன் இடங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன
துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டில் மஇகா தலைவர் ஜி.பழநிவேல் இந்திய மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல்…
குலசேகரனுடன் பொது விவாதத்திற்கு மஇகா தலைவர் பழனிவேல் தயாரா?
இந்தியர் நலன் காக்க பொது விவாதம் செய்வதற்கு மஇகா தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் தயார் என்றால் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனும் தயாராக இருப்பதாக ஈப்போ பாராட் ஜசெக செயலாளர் டாக்டர் ஜெயபாலன் கூறினார். இந்தியர்களின் தங்களின் உரிமைகளை இழந்துள்ளனர் என்பதற்கு குலா பல்வேறு…
ஐஎஸ்ஏ கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிய விரும்புகிறது இந்திய…
இந்திய தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பற்றித் தகவல் அளிக்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் எழுதிக் கேட்டிருக்கிறது. “காவலில் உள்ளவர்கள் உள்பட, இந்திய குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் தகவல் கேட்டு இந்திய தூதரகம் மலேசிய அரசாங்கத்துக்கு…
கமுந்திங் முகாமில் மலேசியாகினிக்கு தடை
கமுந்திங் தடுப்புமுகாம் பணியாளர்கள் மலேசியாகினி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடாது என்று பணிக்கப்பட்டுள்ளனர். உத்தரவில் இணைய செய்தித்தளத்தின் பெயர் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக முகாமின் பணியாளர்களில் ஒருவர் நேற்று தெரிவித்தார். “முகாமின் நிர்வாகம் அவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளது.மற்ற(செய்தி நிறுவனங்களின்) செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”, என்றாரவர். கமுந்திங்…
போலீசார் தியோ பெங் ஹொக் நாடகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்
அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணத்தைச் சித்திரிக்கும் ‘பெங் ஹொக்’ என்னும் நாடகத்தை போலீசார் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.அந்நாடகம் இவ்வாரக் கடையில் மேடையேறவுள்ளது. செவ்வாய்க்கிழமை போலீசாரிடமிருந்து ஓரு தொலைபேசி அழைப்பு வந்ததாக நாடகத் தயாரிப்பாளர் பைசல் முஸ்தபா கூறினார்.அதில் அவர் ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்குச் செல்லுமாறு…
சொய் லெக்: அதனை நான் துணிச்சலாக ஒப்புக் கொண்டேன்
தமது கடந்த காலச் செய்கையை தாம் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அவ்வாறு செய்யும் ஆற்றல் தமது எதிரியான லிம் குவான் எங்-கிற்கு இல்லை என அவர் குற்றம் சாட்டினார். "என்னைப் போன்று தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு…
ஹூடுட் சட்டம்: சந்தடியில்லாமல் பேசுவோம் என்கிறார் அம்னோ பிரதிநிதி
ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இனத்திருக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்ட அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹமட், இப்போது அப்பிரச்னையை சந்தடியில்லாமல் பேச வேண்டும் என்று கூறுகிறார். இப்போது அவ்விவகாரம் குறித்து பேச அயுப் மறுத்து விட்டார் என்று மலாய் நாளிதழ்…
பக்காத்தான் தோற்றால் அன்வார் அரசியலைவிட்டு விலகுவார்?
பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோற்றால் தாம் அரசியலைவிட்டு விலகலாம் என்று பிகேஆர் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று பினான்சியல் டைம்ஸில் வெளிவந்த ஒரு நேர்காணலில், தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறவில்லை என்றால் தாம் “ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்” என்றாரவர். “எங்கள் தேர்தல் அறிக்கையை வழங்கி…
மலாக்கா சிஎம் பதவிக்கு மூவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது
தாங்கா பத்து எம்பி இட்ரிஸ் ஹருனிடம் அடுத்த மலாக்கா முதலமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டிருப்போரில் அவரும் ஒருவர் என்று கூறியதும் வாய் விட்டுச் சிரித்தார். அது உண்மையல்ல என்று கூறிய இட்ரிஸ், முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமின் ஆள்களில் யாராவது ஒருவர்தான் அப்பதவிக்கு வருவார் என்றார். “(முகம்மட் அலி)பல தலைவர்களை…
“நான் சொய் லெக் அல்ல” என்கிறார் லிம்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் ஊழியர் ஒருவரை லிம்-மின் மனைவி பெட்டி சியூ தாக்கியதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் மீது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார். ஒருவருடைய நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும் பிஎன், மசீச நடவடிக்கைகளின் விளைவே அந்தக் குற்றச்சாட்டு என லிம் சொன்னார். தமக்குத் தொடர்புகள் இருந்ததாகக்…


