இடம் கொடுங்கள்: செய்தித்தாள்களிடம் பெர்சே கோரிக்கை

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் கூட்டமைப்பான பெர்சே 2.0, மைய நீரோட்ட ஊடகங்களில் தன்னைப் பற்றி எதிர்மறையான செய்திகளே வந்துகொண்டிருப்பதால்  வாராந்திர பத்தியொன்றை எழுதி தன் கருத்துகளையும் எடுத்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அச்சு ஊடக ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அம்பிகா ஸ்ரீநிவாசனைத் தலைவராகக்…

இசி சவால்: குடியுரிமை அல்லாதாருக்கு வாக்குரிமையா?, நிரூபியுங்கள்

குடிமக்கள்-அல்லாதவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் பாஸ் இளைஞர் பகுதி அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) சவால் விடுத்துள்ளது. “அதன் தொடர்பில் பெயர் பட்டியலையும் ஆவணங்களையும் காட்டிக்கொண்டிராமல் சம்பந்தப்பட்ட ஆள்களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்”, என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்…

ஜோகூரில் பக்காத்தான் தொகுதி ஒதுக்கீட்டில் தேக்கநிலை

ஜோகூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு மீது பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுகள் தேக்கநிலையை அடைந்திருப்பதுபோல் தெரிகிறது. பிகேஆர், தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறி சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்று டிஏபி கூறியது. “பிகேஆர் அதிகப்படியான தொகுதிகளைக் கோருவதால் பிரச்னை எழுந்துள்ளது”, என…

ஜோகூர் மந்திரி புசார் அவமதிக்கிறார், பேராசிரியர் அப்துல் அசிஸ்

மாட் இண்ட்ரா ஒரு சுதந்தர போராட்ட வீரர் இல்லை என்றதன் மூலம் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ அப்துல் கனி அவரை அவமதிக்கிறார் என சட்டத்துறை பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 2004-ல் ஜோகூர் அரசே வெளியிட்ட ‘Pengukir Nama Johor’ நூலில் மாட் இண்ட்ரா…

முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூன் கூட்டரசு பிரதேசத்தில் போட்டியிடலாம்

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. கெரக்கான் கட்சி வட்டாரங்கள் அதனைத் தெரிவித்தன. கூட்டரசுப் பிரதேச கெரக்கான் தலைவருமான கோ, பத்து, சிகாம்புட் அல்லது கெப்போங்கில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு…

சுதேசிகளின் அழுகுரல்: இறைவனே, எங்களைத் தவிக்க விட்டு விட்டீர்களே?

"நீதிமன்றங்கள் விருப்பு வெறுப்பின்றி ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது தானே நியாயம்?'           சுதேசி பாரம்பரிய உரிமை நிலம் மீதான வழக்கில் சரவாக் சுதேசிகள் தோல்வி பேஸ்: நீதி நியாயமாக இருப்பதுடன் நேர்மையானது என்றும் கருதப்பட வேண்டும். இழப்பீடுகள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள்…

சுதேசி பாரம்பரிய உரிமை நிலம் மீதான வழக்கில் சரவாக் சுதேசிகள்…

சுதேசி பாரம்பரிய நில உரிமையாளர்கள் சமர்பித்திருந்த முக்கியமான முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அந்த முடிவு அது போன்ற இன்னும் தேங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும். பாத்தோ பாகியும் மேலும் ஐவரும் கொண்டு வந்த அந்த வழக்கை பதவி…

கிளந்தான் அரசாங்கம்: விவாதத்துக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் முகமட் இந்ரா பற்றிய சர்ச்சை மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவுடன் பொது விவாதம் நடத்த வருமாறு கிளந்தான் பாஸ் அரசாங்கம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினை அழைக்கவில்லை. இவ்வாறு பாஸ் கட்சியின் நாளேடான ஹராக்காவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய விவகாரம்…

ஏர் ஏசியாவுடன் உடன்பாடு காணப்பட்டால் எம்ஏஎஸ் ஊழியர்கள் மறியலில் ஈடுபடுவர்

எம்ஏஎஸ் ஊழியர்கள் 15,000 பேரும், ஏர் ஏசியா-எம்ஏஎஸ் உடன்பாடு காணப்படுமாயின்  மறியல் போராட்டத்தில் குதிக்கப்போவதாக மருட்டியுள்ளனர். “அந்த உடன்பாடு கையொப்பமானால், மறியலில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. மறியலில் ஈடுபட நாங்கள் தயார்”, என்று எம்ஏஎஸ் ஊழியர் சங்கத் (எம்ஏஎஸ்இயு) தலைவர் அலியாஸ் அசீஸ்  கூறினார்.…

சாலைக்கட்டணம்: இதுவரை ஆதாயம் ரிம13பில்லியன்

முக்கிய நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள் கட்டுமானச் செலவுகளையெல்லாம் சரிக்கட்டி “கொள்ளை” ஆதாயத்தை வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும்கூட சாலைக்கட்டணங்களைத் தொடர்ந்து கூட்டிவருவது ஏன் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம்முக்கு பொதுப்பணி துணை அமைச்சர் யோங் கூன் செங் அனுப்பிவைத்த…

ஹோ ஹப் அலுவலகத்தில் எம்ஏசிசி

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் அதிகாரிகள், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வீட்டில் புதுப்பிக்கும் வேலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹோ ஹப் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை இச்செய்தியை வெளியிட்டிருந்த பிரபல அரசியல் வலைப்பதிவான மலேசியா டுடே, அதை ஒரு “அதிரடிச் சோதனை”என வருணித்திருந்தது. இதன்…

முன்னாள் வீரர்களின் மகஜரை பாஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது

1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஆட்சேபக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள பாஸ் அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த மகஜரைக் கொடுப்பதற்காக மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம், …

பிகேஆர், இன்னொரு பெரிய இராணுவச் செலவு குறித்து கேள்வி எழுப்புகிறது

அரசாங்கம் நேரடியாக பேச்சு நடத்தியுள்ள இன்னொரு இராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த ஒப்பந்தம் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரிப்பணத்தை விரயமாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக அது கூறியது. மலேசிய ஆயுதப் படைகளுக்கான என்சிஒ எனப்படும் " கட்டமைப்பு மைய நடவடிக்கைகள்" என்ற அந்தத் திட்டம் மீது…

பினாங்கு கொடி மலை குறித்த செய்திக்காக உத்துசான் மீது வழக்கு

பினாங்கு கொடி மலை அடிவாரத்தில் உள்ள "சட்ட விரோத" கார் நிறுத்துமிடக் கட்டிடத்திலிருந்து மாநில அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்துள்ளதாக கூறும் பொய்ச் செய்தியை வெளியிட்டதற்காக மாநில அரசாங்கம் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு மீது வழக்குத் தொடருகிறது. Read More

சின் சியு: அடுத்த தேர்தலில் அடையாள மைக்கு அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த பொதுத் தேர்தலில் அடையாள மையைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சீனமொழி நாளேடு ஒன்று கூறியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு காணப்பட்டதாக சின் சியு டெய்லி பல வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த கைரேகைப் பதிவுமுறையுடன் ஒப்பிடும்போது அடையாள மையே பொருத்தமானது என்று…

இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார் அஞ்சல் வாக்குகளை அகற்றுவீர்

வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர்கள் தொடர்பில் பல தவறுகள் நிகழ்திருப்பது தெரிய வருவதால் இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்களின் அஞ்சல் வாக்குகளை தேர்தல் ஆணையம்(இசி) ஒழித்துக்கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்கள், வாக்களிப்பு நாளில் கடமையில் இருப்பர்கள் அல்லர். எனவே அவர்கள் அஞ்சல்வாக்காளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிஏபி…

தேர்தல் சீர்திருத்தம்: மக்களை நிச்சயம் ஏமாற்ற முடியாது

"அமைச்சரவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தை நாடினால் அது எட்டக் கூடிய கனிகளைப் பறிக்க வேண்டும். சமுத்திரத்தையே கொதிக்க வைக்கப் போவதாக மார் தட்டக் கூடாது."         நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சே எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும் பார்வையாளன்: திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்வுக்…

மாட் சாபு: பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு பிரதமராகி இருக்க…

மாட் இந்ரா பற்றி முன்னதாக கூறியுள்ள கருத்துகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இப்போது புதியதோர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு அப்துல் ரஹ்மான நாட்டின் முதலாவது பிரதமராகி இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். பிரிட்டீசாரால் தடைசெய்யப்பட்டு…

மாட் சாபு அறிக்கை மீதான புலனாய்வுப் பத்திரங்கள் தயார்

புக்கிட் செப்போங் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாட் இந்ரா என அடையாளம் காணப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் பயங்கரவாதி தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை மீதான புலனாய்வைப் போலீசார் முடித்து கொண்டுள்ளனர். அந்த புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுவதற்காக…

மாட் இந்ரா மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லர்

மாட் இந்ரா கம்யூனிஸ்டோ அல்லது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ அல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கம் துரோகி என்று முத்திரை குத்திய அந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய சகோதரர் ஒருவர் கூறுகிறார். அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒரு போதும் இருந்தது இல்லை. அத்துடன் அவர் கம்யூனிஸ்ட்டும்…

நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சேயின் எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும்

தேர்தல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு பெர்சே 2.0 விடுத்த எட்டுக் கோரிக்கைகளுக்கு அப்பாலும் சென்று பல அம்சங்களைப் பரிசீலிக்கும். இவ்வாறு சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். தேர்தல் ஆணையத்தை "வலுப்படுத்துவதற்கான" எல்லா யோசனைகளையும் அந்தக் குழு ஆராயும்.…

மாட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்

கம்யூனிச பயங்கரவாதிகளை வீரர்களென்றும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் நற்பெயரை களங்கப்படுத்தியும் அறிவிக்கை விடுத்ததாக கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்குமாறு கெடா முன்னாள் போலீஸ்காரர்கள் மன்றம் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டது. மாட் சாபுவின் அறிக்கை பண்பற்றது மட்டுமல்ல. அது அம்மன்றத்தின் 5,000க்கு மேற்பட்ட…