ஏற்கனவே அதிக பணி சுமையால் சோர்வடைந்த ஆசிரியர்களுக்கு, வேப்பிங் செய்ததற்காகக் கடுமையான அபராதமும், சிறைத் தண்டனைகளும் விதிப்பது அளவுக்கு மீறியதாகும் என, எம்.சி.ஏ கல்வி ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பெலிசியா வாங் தெரிவித்துள்ளார். கல்வி முறைக்குள் அதிக அழுத்தமான பிரச்சினைகள் இருக்கும்போது இது குறிப்பாக நிகழ்கிறது என்று…
சீனி இனிக்கும் ஆனால் அரசின் உதவித்தொகையின் அளவுக்கு இனிக்காது
“பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்வது உண்மையா, இல்லை சொந்தமாக இட்டுக்கட்டிக் கூறுகிறாரா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.உண்மையான புள்ளிவிவரங்களைத் தாருங்கள்.” டிஏபி: அமைச்சர் சீனி உதவித்தொகை தொடர்பில் ‘மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்’ ஸ்வைபெண்டர்: ஆக, அத்தியாவசிய பொருள்களுக்கு உதவித் தொகை என்ற பெயரில் மக்களிடமிருந்து கமுக்கமாகக்…
குவான் எங்: உத்துசானிடம் விரக்தியின் அறிகுறி தெரிகிறது
டிஏபிதான் உலகின் இனவாதம் மிக்கக் கட்சி என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா தலையங்கம் எழுதியிருப்பது அக்கட்சியைச் சினமடைய வைத்துள்ளது. அத்துடன் துணைப் பிரதமர் முகைதின் யாசின், டிஏபி “குறுகிய மனப்போக்குக் கொண்ட, மலாய்க்காரர்-எதிர்ப்புக் கட்சி” என்று குறிப்பிட்டிருப்பது அதை மேலும் சீற்றமடைய வைத்துள்ளது. இது, அவர்கள் “விரக்தி” அடைந்திருப்பதைக்…
பெர்சே 2.0 இறப்பு மீதான மரண விசாரணை தொடங்கியது
கடந்த ஆண்டு ஜூலை 9-இல் பெர்சே 2.0 தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட டெக்சி ஓட்டுனர் பஹாருடின் அஹமட் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் மரண விசாரணை இன்று தொடங்கியது. கோலாலம்பூர் கொரோனர் நீதிமன்றத்தில், மரண விசாரணை அதிகாரி (கொரோனர்) சுல்கிப்ளி அப்துல்லா தலைமையில் அவ்விசாரணை நடைபெறுகிறது. அவருக்கு உதவியாக அரசுத்…
வெற்றியில் முழுநம்பிக்கை இருந்தால் மட்டுமே பிபிபி போட்டியிடும்
மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி), 13வது பொதுத் தேர்தலில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு நெருக்குதல் கொடுக்கப்போவதில்லை. தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) மாபெரும் வெற்றிபெற வேண்டும் அதற்குத்தான் பிபிபி முன்னுரிமை கொடுக்கும் என்று அதன் தலைவர் எம்.கேவியஸ் கூறுகிறார். “எங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது என்பதைக்…
கோத்தா சிபூத்தே மீது முறையீடு செய்ய கெடா சபாநாயகருக்கு அனுமதி
கோத்தா சிபூத்தே பேராளர் அபு ஹசான் ஷரிப்பை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்துவதற்கு முறையீட்டு நீதிமன்றம் செய்துள்ள முடிவை எதிர்த்து கெடா மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஈசா இஸ்மாயில் மேல் முறையீடு செய்து கொள்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ்…
சுவா:பேராக்கில் சீனர்களின் கை மேலோங்கும் என டிஏபி பொய் சொல்கிறது
மசீச தலைவர் சுவா சொய் லெக், டிஏபி பேராக்கில் சீனர்களின் அரசை நிறுவ நோக்கம் கொண்டிருப்பதாக பரப்புரை செய்துவருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். “ சீனச் சமூகத்தில் பரப்புரை செய்துவரும் மாற்றரசுக் கட்சியினர், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சீனர்கள் ‘தைக்கோ’ ஆக்கப்படுவார்கள் என்று கூறிவருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து எனக்குத்…
வெள்ளை ‘அங்பாவ்’-க்காக மன்னிப்புக் கேளுங்கள் என பெர்க்காசாவுக்கு அறிவுரை
பெர்க்காசா நேற்று நடத்திய முதலாவது சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் வெள்ளை நிற கடித உறைகளில் 'அங்பாவ்' கொடுத்ததற்கான மன்னிப்புக் கேட்க வேண்டும் என மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா மீது நெருக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. பெர்க்காசா மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட கெரக்கான்,…
கெடாவில் மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மந்திரி புசார் குறை…
Kuin எனப்படும் Kolej Universiti Insaniah-வைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டதை மீட்டுக் கொள்ள கெடா மாநில அரசாங்கம் மறுப்பதை பினாங்கில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சி ஒன்று குறை கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்படுவதின் மூலம் அந்தப் பிரச்னையைத் தீர்த்து விடலாம்…
ஹாடி விலகக் கூடாது என்கிறார் நிக் அஜிஸ்
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முன் வந்துள்ளதை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆதரிக்கவில்லை. "இஸ்லாமியப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பலர் இருக்கலாம். ஆனால் அப்துல் ஹாடி போன்று திறமையுள்ள சிலரே இருக்கின்றனர். அவர் ஏன்…
வெள்ளை அங்பாவ்-வில் கெட்ட நோக்கம் ஏதுமில்லை என்கிறது பெர்க்காசா
சீனப் புத்தாண்டு நிகழ்வின் போது சீனர்கள் கெட்டது எனக் கருதும் வெள்ளை நிற கடித உறையில் அங் பாவ் வழங்கியது, தவறாக நிகழ்ந்து விட்டது என்றும் அதில் தீய நோக்கம் ஏதுமில்லை என்றும் பெர்க்காசா கூறுகிறது. "பெர்க்காசாவைப் பொறுத்த வரையில் வெள்ளை நிறம் தூய்மையையும் புனிதத்தையும் உண்மையையும் குறிக்கிறது.…
இப்ராஹிம் அலி அவர்களே, அந்த “அங்பாவ்” நீங்கள் செய்த பாவங்களைக்…
"அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இப்ராஹிம் அலி 10,000 ரிங்கிட் 'ஆங் பாவ்' கொடுத்தார் மூண்டைம்: பெர்க்காசா நடத்திய அந்த நாடகத்தில் அந்த அமைப்பின் கபட வேடம் தெளிவாகத் தெரிகிறது. மேலும்…
ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை உறையில் “அங்பாவ்” வழங்கினார் இப்ராகிம் அலி
மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்காசா அதன் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 300 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் குடியிருப்பாளர்களும் சுமார் ரிம10,000 ஐ அங்பாவாக வழங்கிற்று. பெர்காசா தலைவர்கள் சீன புத்தாண்டிற்கான அங்பாவ் சீனர்கள் ஈமச்சடங்கிற்கு பயன்படுத்தும் வெள்ளை உறையில் வைத்து கொடுத்தனர்.…
ஹாடி பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அன்வார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பதாக மலாய்மொழி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், பக்காத்தான் ரக்யாட் அவ்வளவு எளிதில் அவரை விட்டு விடாது. மாற்றரசுக் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட்டில் அப்துல் ஹாடி “முக்கிய…
பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் என்எப்சிமீது ஆர்சிஐ
டிஏபி ஆட்சிக்கு வந்தால், அரசு எளிய நிபந்தனைகளில் வழங்கிய ரிம250மில்லியன் கடன்தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்படும் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். “மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் இது…
‘அமைச்சர்களுடைய சொத்துக்களை எம்ஏசிசி அறிவது பொருத்தமானது அல்ல’
அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் ஆகியோரது சொத்து விவரங்களை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வைத்திருப்பது பொருத்தமானதாக இருக்காது என பிரதமர் துறை துணை அமைச்சர் விகே லியூ கூறுகிறார். அதற்குக் காரணம், இந்த நாட்டில் ஊழல் மீதான புகார்களை ஏற்றுக் கொண்டு அவற்றை விசாரிப்பதே எம்ஏசிசி-யின்…
துணைப் பிரதமர்: ஹிம்புனில் தனது உறுப்பினர்கள் பங்கு கொள்ள பாஸ்…
முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கையை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட ஹிம்புன் கூட்டங்களில் தனது உறுப்பினர்கள் பங்கு கொள்வதற்கு பாஸ் கட்சி தடை விதித்துள்ளதாகக் ஹசான் அலி கூறியுள்ளது பற்றி பாஸ் விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் உண்மையை அறிந்து கொண்டு முடிவு…
சீனி உதவித் தொகைக்கு தேர்தல் காரணம் அல்ல என்கிறார் இஸ்மாயில்…
"கிலோ ஒன்றுக்கு 20 சென் -ஆக இருந்த சீனி உதவித் தொகை 54 சென் - ஆக இப்போது அதிகரித்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு விரைவில் நிகழும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் காரணமல்ல." இவ்வாறு உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்…
டிஏபி: சீனி உதவித் தொகைகள் மீது அமைச்சர் ‘மக்களை முட்டாளாக்குகிறார்’.
"கடந்த ஆறு மாதங்களாக உலக அளவில் சீனி விலைகள் குறைந்துள்ள வேளையில் சீனி விலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறிக் கொண்டு அதற்கான உதவித் தொகைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது." "ஆகவே சீனி விலைகளை ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் 30 சென்-ஆக வைத்திருப்பதின் மூலம் அரசாங்கம்…
பெர்காசா சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்துகிறது
மலாய் உரிமைகள் போராட்ட குழு பெர்காசா முதல் முறையாக நாளை (ஜனவரி 29) சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை கப்போங் பாருவில் நடத்துகிறது. அவ்வியக்கம் ஊடகங்களையும் சீன சமூகத்திலிருந்து நண்பர்களையும் அழைத்துள்ளது. ஆனால் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பெர்காசாவின் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட்…
பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டில் பழனிவேல் பேச்சு!
மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கையும், அவரது ஒரே மலேசியா கொள்கையின் சின்னமான 1 -யையும் முன்நிறுத்தி திராவிட பெருந்தலைவர் பெரியார் ஈவேரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை இன்பம் பருக நேற்றிரவு கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள பெர்ல் இண்டர்நேசனல் தங்கும்விடுதியில் "பன்னாட்டு…
ஏபியூ செராமாவில் “அடிக்கப்பட்டது” மீது போலீசில் புகார்
அம்னோவை தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் ஏபியூ அமைப்பு ஏற்பாடு செய்த செராமா ஒன்றில் ஒர் இளைஞர் "அடிக்கப்பட்டது" மீது சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி போலீசில் புகார் செய்துள்ளார். நேற்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்தப் புகாரை அவர் சமர்பித்தார்.…
NGO: தைப்பூசத்தின் போது மதுபான விற்பனைக்குத் தடை விதியுங்கள்
வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தின் போது மதுபான விற்பனைக்குத் தடை விதிக்குமாறு அதிகாரிளை பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் பல அரசு சாரா அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன. தைப்பூசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக காவடிகளும் ரதமும் செல்லும் பாதையில் மதுபானங்களை உணவு விடுதிகளும்…
அம்னோ: கீழறுப்பு வாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை
அம்னோ, உறுப்பினர்கள் பொதுத் தேர்தலுக்குமுன் கீழறுப்புச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதன் ஒழுங்கு வாரியத்தை முடுக்கிவிடக்கூடும். இதற்குமுன் இப்படி நடந்ததில்லை என்று கூறிய அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலுக்குப் பின்னரே உறுப்பினர்கள் கட்சி விதிகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமாகும்…