சம்பந்தனின் அணுகுமுறை இந்தியாவை விலகிப்போக வைத்துவிட்டது: சி.வி.விக்னேஸ்வரன்

“இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியது.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்துவிட்டதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தியாவுடனான அணுகுமுறையிலும் கூட சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தவறிவிட்டது.…

பிரிகேடியர் பிரியங்க தொடர்பில் வெளியானது எதிர்பாராத தீர்ப்பு!

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வழக்குத்…

வவுனியாவில் விடுதலைப்புலிகள்; முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து!

வவுனியாவில் கடந்த வாரம் வைரவபுளியங்குளப்பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினால் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவரிடம் இன்று (2) வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்,…

வடமாகாணம் தொடர்பில் ளெிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்!

வடமாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்­ள­னர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

இலங்கை வரலாற்றை புரட்டிப்போட்ட ஈழத்து இளைஞன்!

தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார். இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.…

ஒரே இரவில் 4 புத்தரின் முகத்தை அடித்து உடைத்த தீரன்…

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகள் புதிய கோணத்துக்கு திரும்பியுள்ளன. அகோரமாக இந்த சிலைகளின் முகம் உடைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு புறம் இருக்க,…

வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வடக்கில், சிறிலங்கா இராணுவ அச்சுறுத்தல்களால், பலவந்தமாக தமது வீடுகள், காணிகளை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட இடங்களில் சிங்களக்…

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற…

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- சிறிலங்காவினுடைய புதிய இராணுவப் பிரதானியான…

இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி: ஐ.நாவிடம் கோரிக்கை

ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில்…

தமிழ் பாரம்பரியத்திற்கமைய திருமணம் செய்த மகிந்தவின் மகன்!

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற போதும்,…

வடக்கு, கிழக்கில் ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகள்

வடக்கு கிழக்கில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர், சிவஞானசோதி தெரிவித்துள்ளார். “வடக்கில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின்…

வவுனியாவில் சிங்கள இனவாதிகளின் அட்டகாசத்தை பாருங்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும் பௌத்தமயமாக்கி சப்புமல்கஸ்கந்த என பெயரை மாற்றி சிங்கள குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள கச்சல் சமனங்குளத்தில் அக்கிராமத்திலும் அதனை அண்டி வாழ்ந்த…

புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க…

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய  போது,…

இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது: இலங்கை அமைச்சர் றிசாட்…

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது பல்வேறு…

இராணுவ முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்று சிறிலங்கா படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 697 நாட்களாக, காணி மீட்புக்கான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்புலவு மக்கள், இன்று தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப்…

மலையக தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி நிர்ணயம்: தொழிற்சங்கங்கள் தோல்வி

இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரிக்க, முதலாளிமார் சம்மேளனத்திடம், கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன. முதலாளிமார் சம்மேளனத்துடன் வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளன. இந்த…

மன்னாரில் கடலோரத்தை முற்றுகையிட்ட பொலிஸார்; சிக்கிய வெடிகுண்டுகள்!

மன்னார், பேசாலை – நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை சிலிக்கனைட் குச்சிகள், கிளைமோர் சுரங்கங்கள், ரப்பர் பூட்ஸ், ரொக்கெட் ஏவுதல்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றியதாக…

ஹிஸ்புல்லாவுக்கெதிராக மீண்டும் ஒன்றிணைந்த தமிழர்களால் பதற்றம்!

பொலீஸ் மற்றும் நீதிமன்றத்தின் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி இரண்டாவது தடவையாக இன்று(25) மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் எல்லாலன் அமைப்பு என்பன விடுத்த அழைப்பினை…

ஈழத்தில் சீருடையுடன் விடுதலைப்புலிகள்? தீவிர தேடுதலில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர்!

இலங்கையில் தமிழர் பகுதியில் வீடொன்றில் உணவிற்காக சீருடை அணிந்து விடுதலைப்புலிகள் வந்ததாக கூறி பாதுகாப்பு தரப்பினர் தேடுதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா பாலமோட்டை குஞ்சிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வீடொன்றில் திடீரென 3 நபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் பின்பு வீட்டு…

வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமா?

வெளிநாடொன்றின் உதவியுடன், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கும் மதவாதத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, சபைக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றையதினம் பாராளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், மாவனெல்ல புத்தர்…

சமஷ்டிக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

தமிழர்களுக்கான முழுமையான உரிமைகளை அரசாங்கம் கொடுத்த பின்னரே மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கிணைப்பாளருமான ஃபேர்கஸ் அவுல்ட் இன்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின் போதே இது…

சுமந்திரன் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

ஈழத்தில் இளம்பெண்களின் ஆபத்தான முடிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது. இந்த வருட ஆரம்பத்திலேயே எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் கடந்த 23 நாட்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் மட்டக்களப்பு,கல்லடி,நாவற்குடா இசைநடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண்…