கூட்டமைப்பை நம்பத் தயாரில்லை; தமிழ் தாய்மார்கள்!

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும் அதற்கு இவர்கள் யார்? இவ்வாறு மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று(19) கிளிநொச்சியில் இடம்பெற்ற…

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறும் ஈழத்தவர்கள்!

இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள், ஆட்கடத்தல் காரணமாக போலி கடவுட்டுச்சீட்டுகள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான sky செய்தி நிறுவனம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்று பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ள சிலருடனான நேர்காணலையடுத்தே குறித்த நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது மேலும்…

இலங்கை போர்க்குற்றம்: “ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்” – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர்க்…

விடுதலைப்புலிகள் காலத்தில் இப்படி இருக்கவில்லை; வருந்தும் அமைச்சர்!

இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 வீதமாக இருக்கலாம் ஆனால் அது 100 வீதமாக மாறமுடியாது. 75 உடன் 25 இணைந்தால் தான் 100 வீதமாகமுடியும். அது தான்…

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது – சுமந்திரன்

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ்…

அண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க ! தலைவரை நினைத்து…

வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…. நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு…

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு: பின்னணி என்ன?

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம்…

மகிந்தவால்தான் கே.பியை கைது செய்ய முடிந்தது!

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிங்கள, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக்…

நாயாற்றில் 2000 வருடங்களுக்கு முன், புத்தர் சிலை இருந்ததாம்! சிங்களவன்…

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன ஏற்கனவே இருந்ததென்றும் அவர்…

பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு ஒரு ஆதாரமும் இல்லை –…

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும், இராணுவம் கைதுசெய்து சுட்டுக்கொன்றமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். போலிக் காணொளிகளையும், புகைப்படங்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.…

லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்…

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன்…

இலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை

கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த…

விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைசர் ராஜித செனாரத்ன தெரிவித்துள்ளார். இதை கச்சிதமாக அலிசாகிர் செய்து முடித்ததாகவும் இதனாலேயே நாட்டில் போர் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும்…

அகதேசிய முற்போக்கு கழகம்: இலங்கை வட கிழக்கில் இந்திய வம்சாவளி…

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி மக்களை ஒன்றிணைக்க "அகதேசிய முற்போக்கு கழகம்" எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது. கடந்த சில வருடங்களாக வவுனியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்துவந்த 'வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது' அகதேசிய முற்போக்கு கழகம்…

இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து…

‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது?’

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை இலங்கை அரசாங்கம் கூற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்…

தமிழுக்கு விடுதலைப்புலிகளால் கிடைத்த பெருமை; மறக்க முடியாத வரலாறு இதுவும்தான்!

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள்.…

இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக தேசம்; இனவாதிகளுக்கு சவால்விட்ட சிங்கள அறிஞர்…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு வழியற்ற நிலையில் தமிழ் மக்களின் கையறு நிலை அண்மைக் காலங்களில் மேலோங்கி வருகிறது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து புர்வீக தமிழ் குடிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டு இன்று வடக்கில் பரவலாக வலைவிரித்துள்ளது. இந்த…

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன். அதில், தமது…

எப்போது கைவிடுவார் சம்பந்தன்?

இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு என்ற கட்டத்தை நெருங்கிக் கொண்டுவரும் நேரத்தில், இக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கிய பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனையே சேரும். அவர் மீதான விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும், தமிழ் மக்களை வழிநடத்தி, ஓரணியில் வைத்திருந்தார்…

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன்மீது தாக்குதல்!

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். விடுதலைப் புலிகளின் விசுவமடு கோட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் (செல்வராசா) என்பவரே கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை இத் தாக்குதலை தடுக்க வந்த அன்பரசனின் மகனும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான…

படையினர் வசமிருந்த காணிகளை பொதுமக்களிடம் கையளித்த வடக்கு ஆளுநர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச்சொந்தமான 21.24 ஏக்கர் காணி இன்று (07) அதன் உரிமையாளரிடம் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணிகளை இன்று (07-02-2019) அதன் உரிமையாளரிடம்…

இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக வடமாகாணத்தில் கறுப்புக் கொடி

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய நாளினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் கவன ஈர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் . ''எமக்கு எப்போது சுதந்திர…